India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹிமாச்சலில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உரிமையாளர் பெயர், முகவரி ஆகிய விவரங்களை காட்சிப்படுத்துமாறு அம்மாநில காங். அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை அமல்படுத்த 7 பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உ.பி. அரசு உணவகங்களின் வேலையாட்கள் முகக்கவசம், கையுறை அணிவதை கட்டாயமாக்கியது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தான் வென்ற 2 வெண்கலப் பதக்கங்களும் இந்தியாவுக்கு சொந்தமானது என மனு பாக்கர் தெரிவித்துள்ளார். தன்னை எந்த நிகழ்ச்சிக்கு அழைத்து பதக்கங்களைக் காட்டச் சொன்னாலும், அதை பெருமையுடன் செய்வதாகக் கூறிய அவர், தனது அழகான பயணத்தை பகிர்ந்து கொள்ள இதுதான் வழி எனத் தெரிவித்துள்ளார். எங்கு சென்றாலும் பதக்கத்தை காட்டிக் கொண்டிருப்பதாக சிலர் விமர்சித்தது குறித்து அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் புகையிலைக்கு அடிமையாகாமல் இருக்க, முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை விற்கப்படுவதை தடுத்து, தயாரிப்பு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், குட்கா விற்பனை தொடர்பாக சட்டத்திருத்தம் செய்வது குறித்து மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர், ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன்’ படத்தில் நடித்தவர். அவருக்கும், தொழில் அதிபரான மொஹ்சின் அக்தர் மிர் என்பவருக்கும் 2016ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. இந்நிலையில், காதல் கணவரை பிரிய ஊர்மிளா முடிவெடுத்துள்ளார்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் நடைமுறை யதார்த்ததோடு சமூகத்தை அணுகுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அன்பான மனமும், பிறருக்கு உதவும் இரக்க குணமும் இருந்தாலும் முன்கோபத்தில் வார்த்தைகளை கொட்டித்தீர்த்து விடுவீர்கள். ஆடம்பரமாகச் செலவு செய்து, தேசாந்திரியாக ஊர் சுற்றுவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பீர்கள் என்கிறது சாஸ்திரம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
குஜராத் மாணவர் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் 498 ரன்கள் குவித்து சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். பள்ளிகளுக்கு இடையே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், செயின்ட் சேவியர்ஸ் வீரர் துரோனா தேசாய் 320 பந்தில் 498 ரன்கள் விளாசினார். இதில் 86 பவுண்டரிகள், 7 சிக்சர்களும் அடங்கும். இதற்குமுன்பு, தானாவடே (1,009), பிருத்வி ஷா (546), ஹவிவல்லா (515), சமன்லால் (506), அர்மான் (498) ரன்கள் குவித்துள்ளனர்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் வரும் 28ஆம் தேதி சிறப்பு பூஜை செய்யவுள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். முந்தைய ஆட்சியில் திருப்பதி லட்டில் மாட்டின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். இதை மறுத்துள்ள ஜெகன் மோகன், பொய்கள் மூலம் திருப்பதி கோயிலுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதற்காக மாநிலம் முழுவதும் பூஜைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பவுலர் மற்றும் ஆல்ரவுண்டர் ரேங்கிங் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி, பவுலர் தரவரிசை பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். மேலும், ஜடேஜா 6ஆவது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் ஆல்ரவுண்டர் பட்டியலில் ஜடேஜா முதலிடத்தையும், அஸ்வின் 2ஆவது இடத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
குறை ரத்தத்தைக் காட்டிலும், உயர் ரத்த அழுத்தம் மிகவும் ஆபத்தானது. அறிகுறிகளை முன்கூட்டியே உணர முடியாததாலேயே HBP-ஐ ‘Silent Killer’ என மருத்துவர்கள் கூறுகின்றனர். கட்டுப்படுத்தாத HBP (120/80mmhg மேல்) இதய செயலிழப்பு, சிறுநீரகம் தொடர்பான பல சிக்கல்களை உண்டாக்கலாம். 20 – 35 இளவயது மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், அடிக்கடி மயக்கம், நெஞ்சு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பேட்ஸ்மேன் ரேங்கிங் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. டாப் 20 பட்டியலில் 5 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5ஆவது இடம் பிடித்து அசத்தியுள்ளார். ரிஷப் பண்ட் 6ஆவது இடத்தையும், ரோஹித் ஷர்மா 10ஆவது இடத்தையும், கோலி 12ஆவது இடத்தையும், ஷுப்மன் கில் 14ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.