India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிறைக் கைதிகளுக்கு வங்கிக் கணக்கு மற்றும் வீடியோ கால் பேசும் வசதி அக். 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயால் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. கைதிகள் உறவினர்களுடன் மாதத்திற்கு 120 நிமிடம் வரை வீடியோ மற்றும் ஆடியோ காலில் பேச வழிவகை செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
பாடகர் SPB வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள வீதிக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். எஸ்பிபி-யின் 4ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவர் வாழ்ந்த வீதிக்கு SPB சாலை என பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று, நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவுக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
SBI வங்கியில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள 800 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்.சி. முடித்த 25 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் அக். 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ₹48,480 முதல் ₹93,960 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் sbi.co.in/web/careers என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
RSS-ன் தயவு இல்லாமல் பாஜகவால் தனித்து இயங்க முடியும் என ஜெ.பி.நட்டா சில மாதங்களுக்கு முன்பு பேசியிருந்தார். இந்நிலையில், RSS மூத்த தலைவர் சுனில் அம்பேத்கர் நட்டாவின் கருத்துக்கு தற்போது பதிலளித்துள்ளார். இது குடும்ப பிரச்னை எனவும், இது தங்களுக்குள்ளாகவே தீர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதை பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் முதல் தபேதார், மேயர் பிரியாவுக்கு டஃப் கொடுத்ததால் தூக்கியடிக்கப்பட்ட சம்பவம் சோஷியல் மீடியாவில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. பிரியாவின் தபேதார் மாதவி (50) “லிப்ஸ்டிக்” பூசி பணிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரிடம் லிப்ஸ்டிக் போட்டு பணிக்கு வர வேண்டாம் என உத்தரவை மீறியதால், மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் சிங்காரச் சென்னையை சுழன்றடிக்கிறது.
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் ஆலை ஊழியர்களின் வேலை நிறுத்த பிரச்னையை விரைவாக தீர்க்க முதல்வர் ஸ்டாலினை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ள அவர், உற்பத்தி துறையில் பாதிப்பு ஏற்படாத வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், விரைவான, இணக்கமான தீர்விற்கு மாநில அரசு தலையிட வேண்டுமெனவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
‘கேம் சேஞ்சர்’ படத்தின் 2வது பாடல் “ரா மச்சா மச்சா…” ப்ரோமோ வீடியோ வரும் 28ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலை விவேக் எழுதியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது தேவையில்லாதது என்ற ஐகோர்ட்டின் பரிந்துரையை அரசு ஏற்றதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், வேறு வழக்குகள் நிலுவையில் இல்லையெனில், உடனடியாக அவரை பிணையில் விடுவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அவர் மீது குண்டாஸ் பாய்ந்தது.
வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை கிளறி, வறுத்து தனியே எடுத்து வைக்கவும். மற்றொரு வாணலியில் வரகு அரிசியை போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு அதனை மூழ்குமளவுக்கு பால் விட்டு வேகவிடவும். அதனுடன் சர்க்கரைப் பாகினை வடிகட்டி சேர்த்து கிளறவும். இத்துடன் வறுத்து வைத்த கலவையை சேர்த்து, இறக்கினால் சுவையான வரகரிசி பாயாசம் ரெடி.
ஒவ்வொரு தனி நபருக்கும் கருத்து சொல்ல சுதந்திரம், உரிமை உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக இல்லாமல் திமுக கூட்டணி வட மாவட்டங்களில் வெல்ல முடியாது என ஆதவ் அர்ஜூனா பேட்டி அளித்தது விவாதப் பொருளானது. இது குறித்து பேசிய திருமாவளவன், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கருத்து இருந்தாலும், இறுதியில் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்சி கட்டுப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.