India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் ஏலத்தில் 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள BCCI அனுமதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரோஹித், பும்ரா, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் தக்க வைப்பதற்கான கதவுகள் திறந்துள்ளன. ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் BCCI சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் பெரும்பாலான அணிகளின் உரிமையாளர்கள் 5 முதல் 6 வீரர்களை தக்கவைக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.
செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி ஓராண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் அவரின் ஜாமின் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார். இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.
வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான Pitchஐ ரோஹித் ஷர்மா ஆய்வு செய்தார். சென்னையில் நடைபெற்ற இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் நாளை மறுதினம் தொடங்கவுள்ளது.
50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட CM ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். Guidance TamilNadu பணியாளர்களின் சிறப்பான செயல்பாட்டினால், ஆட்சிப் பொறுப்பேற்ற பின் ஈர்க்கப்பட்ட ₹10 லட்சம் கோடி முதலீடுகளில் 60% பணிகள் நிறைவேறியிருக்கிறது. மீதமுள்ள 40% பணிகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், “50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பே நமது இலக்கு” என அவர் எழுதி கையொப்பமிட்டார்.
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி முருகனை தரிசனம் செய்ய ₹1000 வசூலிக்கப்படும் என்று காலையில் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து, கடவுளை தரிசனம் செய்ய பணம் கொடுக்க வேண்டுமா? என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் விவாதமாக மாறியது. இந்நிலையில், ₹1000 கட்டண அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் இரவு 7 மணி நிலவரப்படி 54.11% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி தொகுதியில் 79.95% வாக்குகள் பதிவாகின. மேலும் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 26 தொகுதிகளுக்கு இன்று 2ஆம் கட்டமாக அசம்பாவிதங்களின்றி தேர்தல் நடைபெற்றது.
திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என SETC அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், தூத்துக்குடி, புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வரும் 30 முதல் அக். 13 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் www.tnstc.in இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
நீண்ட தூரம் பாய்ந்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை இந்தியா சோதனை செய்ய உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தொடங்கி 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை சோதனை நடத்தப்பட உள்ளது. 1,700 கி.மீ தூரம் என்ற அளவில் சோதனை மண்டலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை சீனா சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பல இடங்களில் வெயில் சதம் அடித்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மேலும், ஈரோடு 102, தூத்துக்குடி 101, கரூர் பரமத்தியில் 101, நெல்லையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெயில் சுட்டெரித்தாலும், சில பகுதிகளில் மழை பெய்தது.
ஜப்பானை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி, இளைஞர் சக்தி, உலக அளவில் அரசின் செல்வாக்கு போன்ற அளவீடுகளின்படி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பின், பொருளாதார வளர்ச்சியில் 4.2 புள்ளிகள் உயர்ந்து இந்தியா வலுவான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.