India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் நேற்றிரவு பெய்யத் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் பல இடங்களில் மழை பெய்தது. இதனால் சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா? கீழே கமெண்ட் பண்ணுங்க.
சமீபத்தில் பணிச்சுமை காரணமாக கேரளவைச் சேர்ந்த இளம் பெண் அன்னா செபாஸ்டின் உயிரிழந்த நிலையில், தற்போது லக்னோவில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வரும் சதப் பாத்திமா(45) என்ற பெண் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் வேலையில் இருக்கும்போதே நாற்காலியிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். அதிக பணிச்சுமையினால் அவர் மிகுந்த அழுத்தத்தில் இருந்ததாக சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று RMC தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 29ம் தேதி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. 30 மற்றும் 1ஆம் தேதியன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கான் அணி கண்டிப்பாக அரையிறுதிக்கு செல்லும் என அந்த அணியின் ODI கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு செல்லும் என்றார். ஆனால் அவர் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியின் பெயரை குறிப்பிடவில்லை. இதற்கு பாக்., அணியின் சமீபகால ஃபார்மே காரணமாக செல்லப்படுகிறது.
விக்கிரவாண்டியில் அக்.27 ஆம் தேதி நடைபெறும் விஜய்யின் தவெக கட்சி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அவற்றில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே தவெக கட்சியின் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
1905 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்புக் கோட்பாடு தொடர்பான முதலாவது ஆய்வை வெளியிட்டார்.
1932 – மன்மோகன் சிங் பிறந்த தினம்
1954 – ஜப்பானில் தோயா மாரு சூறாவளியில் சிக்கி 1,172 பேர் உயிரிழந்தனர்.
1959 – வேரா சூறாவளி ஜப்பானை தாக்கியதில் 4,580 பேர் உயிரிழந்தனர்.
2002 – செனிகல் நாட்டு கப்பல் ஒன்று காம்பியாவில் மூழ்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
பெங்களூருவை சேர்ந்த மகாலட்சுமி (29) என்ற பெண் 50 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான முக்தி ரஞ்சன் ரேவை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் ஒடிஷாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள போலீசார், பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
அதிக திரை நேரம் மற்றும் வெளியில் செலவிடும் நேரம் குறைவதால் குழந்தைகளின் கண்பார்வை மோசமடைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மூன்றில் ஒரு குழந்தைக்கு குறுகிய பார்வை மற்றும் தொலைதூர பொருட்களை தெளிவாக பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளுக்கு செல்போனுக்கு பதிலாக செஸ், கேரம் போன்ற விளையாட்டுகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.
*ஒரு தலைமுறை இளைஞர்களை மட்டும் எனக்குக் கொடுங்கள், நான் இந்த முழு உலகையும் மாற்றுவேன். *எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி, அதை நாமே வழிநடத்துவது தான்.
*தோல்வியை ஒப்புக்கொள்ள பயப்படாதீர்கள். தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் மோசமாகச் செய்ததை இன்னும் முழுமையாகவும், இன்னும் கவனமாகவும், இன்னும் முறையாகவும் செய்யுங்கள்.
’நந்தன்’ திரைப்படம் சமூக நீதியோடு தொடர்புடையது என்பதால் தமிழ்நாடு அரசின் உயரிய சிறப்பு கலை விருதினை நந்தன் படத்திற்கு வழங்க வேண்டும் என இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார். மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் அதிகாரத்தை நேர்த்தியான திரைக்கதையின் வழியாக இயக்குநர் தெரிவித்துள்ளதாக பாராட்டிய அவர், இப்படம் இளம் தலைமுறையினரும் மாணவ, மாணவியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்றார்.
Sorry, no posts matched your criteria.