India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2024-25ஆம் நிதியாண்டில் 7%ஆக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) கணித்துள்ளது. ஏற்கெனவே இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7%ஆக இருக்குமென கணித்ததை மீண்டும் உறுதி செய்துள்ளது. அதேபோல், 2025-26இல் இந்தியாவின் பாெருளாதார வளர்ச்சி 7.2%ஆக இருக்குமெனவும் ADB கூறியுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு குறித்த உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.
செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான வழக்கில் காலை 10.30க்கு தீர்ப்பு வெளியாகவுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதான அவர், கடந்த ஒரு வருடமாக சிறையில் இருந்து வருகிறார். பலமுறை அவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த SC ஜாமின் மனு மீதான தீர்ப்பை கடந்த மாதம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.
➤தீஸ்தா நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வங்கதேசத்தின் நீா்வளத் துறை முடிவு செய்துள்ளது. ➤இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக தென் லெபனானில் இருந்து பெய்ரூட் நோக்கி லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். ➤இஸ்ரேலின் மொசாட்டின் தலைமையகத்தை நோக்கி முதன் முறையாக ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
AUS எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்த ENG கேப்டன் ஹாரி புரூக் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் அவர் சதமடித்து (110 ரன்கள்) எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதன்மூலம், 13 ஆண்டு கால சாதனையை முறியடித்து, மிக இளம் வயதில் (25 வயது 215 நாள்கள்) ODI-யில் சதமடித்த இளம் ENG கேப்டன் என்ற சிறப்பைப் பெற்றார். முன்னதாக, அலஸ்டர் குக் 26 வயது 190 நாள்களில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.
மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் காலியாக இருக்கும் 250 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு துறைகளில் இருக்கும் துணை மேலாளர் பதவிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு 3-10 ஆண்டு வரை முன் அனுபவம், BE, B-TECH தேர்ச்சி அவசியம் ஆகும். வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற 28ம் தேதி கடைசி நாள் ஆகும். கூடுதல் விவரங்களை www.careers.ntpc.co.in இணையதளத்தில் காணலாம்.
போலி ஆவணத்தை பயன்படுத்தி நீர்நிலைகள், காலியான அரசு நிலங்களை அபகரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க TN அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டோரை கண்டுபிடித்து கிரிமினல் வழக்குப்பதிய வேண்டும், நிலத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
விஜயதரணி தேர்தலுக்கு முன்பு, காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். அப்போது MLA பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என எண்ணினார். ஆனால் அது நடக்கவில்லை. பிறகு கட்சியில் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். இந்நிலையில், குஷ்புவின் ராஜினாமாவால் காலியான NCW உறுப்பினர் பதவி அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தட்ச யாகத்தில் கலந்துகொண்டதால் ஏற்பட்ட தோஷம் நீக்க திருமால் வழிபட்ட திருத்தலம் ராணிப்பேட்டையை அடுத்த கரிவேடு அரிபிரசாதேஸ்வரர் திருக்கோயிலாகும். இங்குள்ள இறைவனுக்கு பல்லவன் திரிபுவன வீரகண்டன் கற்றளி கோயில் எடுப்பித்தாக ஸ்தல புராணம் கூறுகிறது. இக்கோயிலுக்கு விரதமிருந்து சென்று, பாதாள லிங்கேஸ்வருக்கு அபிஷேகம் செய்து, வில்வம் சாற்றி, நெய் தீபமேற்றி வழிபட்டால் தீராத பிணிகள் தீரும் என்பது ஐதீகம்.
மத்திய அரசின் பஞ்சாப் & சிந்த் வங்கியில் ஸ்பெஷல் ஆபீஸர் நிலையிலான பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தலைமை மேலாளர், மூத்த மேலாளர், மேலாளர் உள்ளிட்ட 42 பதவிகளில் காலியாக உள்ள 213 இடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களை punjabandsindbank.co.in இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
தேர்தலுக்கு முன்பு மநீமவில் இருந்து விலகியோருக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமிக்க கமல் முடிவு செய்து விண்ணப்பம் கோரியிருந்தாராம். கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அவர்களை நியமிக்க போவதாகவும் கூறியிருந்தாராம். இதனால் பலரும் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், பொதுக்குழுவில் எந்த அறிவிப்பையும் வெளியிடாததால், ஏமாற்றம் அடைந்து, அவரை விமர்சிக்க தொடங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.