India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மைத்ரேயன் அண்மையில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். அவர் வழியில் முன்னாள் அமைச்சரும், பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரனும் திமுகவுக்கு தாவக்கூடும் என தகவல்கள் வெளியாகின. இதை மறுத்துள்ள அவர், தாம் அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சி மாறப் போவதாகவும் வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலி PM மெலோனியை காதலிப்பதாக வெளியான தகவலை மஸ்க் மறுத்துள்ளார். ரோம் குளோபல் சிட்டிசன் விருது விழாவில், 2 பேரும் காதல் பார்வை பார்ப்பது போன்ற படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மஸ்க் வெளியிட்ட பதிவில், மெலோனியுடன் ரொமாண்டிக் உறவில்லை எனக் கூறியுள்ளார். மஸ்க், மெலோனி ஏற்கெனவே விவாகரத்தானவர்கள். மஸ்க் 2 முறை மெலோனியைக் காண 2023இல் இத்தாலி சென்றது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் பலியானோர் எண்ணிக்கை 615ஆக அதிகரித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ராக்கெட் வீச்சுக்கு பதிலடியாக இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தொடர் தாக்குதலில் நேற்று மட்டும் 50க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், இதுவரை 2,000க்கும் மேற்பட்டாேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் அரசு தெரிவித்துள்ளது.
கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க PM மோடியிடம் CM ஸ்டாலின் வலியுறுத்த திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் முதல்வர், மெட்ரோ ரயில் பணி உள்ளிட்டவற்றுக்கு நிதி ஒதுக்க மோடியிடம் கோரிக்கை வைக்க இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல், கருணாநிதிக்கு பாரத ரத்னா விருதுக்கும் கோரிக்கை விடுக்க இருப்பதாகவும், அதனை மத்திய அரசு ஏற்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் விதமாக இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த SL கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவர்களை விரட்டியுள்ளனர். இதுவரை, மீனவர்களை கைது செய்துவந்த அவர்கள், தற்போது துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவிற்கு சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் ஆண்டுக்கு ₹8.36 லட்சம் கோடி அன்னிய நேரடி (FDI) முதலீட்டை இந்தியா பெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆசியாவில் மிகவும் வேகமாக வளர்ச்சி பெறும் நாடாக இந்தியா உள்ளதால் FDI குவிந்து வருகிறது. இதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை செயலாளர் அமர்தீப் சிங் பாட்டியா, தற்போது ஆண்டுக்கு ₹5.85 – ₹6.69 லட்சம் கோடி இந்தியாவுக்கு FDI கிடைப்பதாகக் கூறினார்.
➤தாய்லாந்து ஆடவர் சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு ராமநாதன் – மட்சுய் ஜோடி முன்னேறியது. ➤U20 Asian Football: தகுதிச்சுற்றின் முதல் போட்டியில் மங்கோலியாவை இந்திய அணி வீழ்த்தியது. ➤Macau ‘Super 300’ Badminton: முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இஸ்ரேலின் டேனிலை வீழ்த்தினார். ➤இந்தியா – வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது.
பொருள் வாங்க மட்டுமன்றி, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கவும் ரேஷன் அட்டை பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து புதிதாக அட்டை கோரி 2,89,591 பேர் மனு அளித்துள்ளனர். இதை பரிசீலித்து, தேர்தலுக்கு பிறகு 1.22 லட்சம் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 80,050 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 99,300 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 68,291 பேருக்கு விரைவில் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை அரசு முறை பயணமாக டெல்லி செல்கிறார். நாளை மாலை பிரதமரை சந்திக்கவிருக்கும் அவர் பள்ளிக் கல்வித்துறை, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தவுள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்கும் நிதியினை தமிழகத்திற்கு மத்திய அரசு நிறுத்தியது. மேலும், மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கும் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை.
தனது ஆதரவாளர் வைத்திலிங்கம் மீதான வழக்குப்பதிவை கண்டித்து வெளியிட்ட அறிக்கையில், இபிஎஸ் ஆதரவாளர் வேலுமணி மீதான வழக்குப்பதிவுக்கும் ஓபிஎஸ் கண்டனம் கூறியிருந்தார். இதை அதிமுகவினர் யாரும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதிமுக இணைப்புக்காக ஓபிஎஸ் மிகவும் கீழ் இறங்கி வந்திருப்பதாக அவர்கள் விமர்சிக்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கறீங்க? கீழே கமெண்ட் பண்ணுங்கள்.
Sorry, no posts matched your criteria.