India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளதால் அவர் விரைவில் அமைச்சராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு விதித்த நிபந்தனைகளில் அமைச்சராக எந்த தடையும் இல்லை என்பதால், தமிழக அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. விரைவில் உதயநிதி துணை முதல்வராகவும், செந்தில் பாலாஜி அமைச்சராகவும் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கேரள மாநிலம் எலிமளவில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி அகாடமியில் காலியாக உள்ள 240 இடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. பைலட், நேவல் ஏர் ஆபரேஷன் ஆபீஸர், ஏர் டிராபிக் கண்ட்ரோலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்த விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களை www.joinindiannavy.gov.in இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
தவெக தலைவர் விஜய் திராவிட சாயத்தை பூசிக் கொண்டு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். விநாயகர் சதுர்த்திக்கு அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை, ஆனால் பெரியாருக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்றும் அவர் சாடியுள்ளார். விஜய் பூசியுள்ள திராவிட சாயம் வெளுக்குமா அல்லது சாயத்தை மாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு SC ஜாமின் அளித்ததைத் தொடர்ந்து, CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. சிறையிலேயே வைத்து உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். ஆனால், முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரரை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது! எனத் தெரிவித்துள்ளார்.
சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ₹8 – ₹22 வரை உயர்ந்துள்ளது. சோயாபீன், சூரியகாந்தி, பாமாயில் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு கடந்த 13ம் தேதி உயர்த்தியது. இதையடுத்து கடந்த 2 வாரமாக எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. விலையை அதிகரிக்க வேண்டாமென்ற அரசின் எச்சரிக்கையை ஆயில் நிறுவனங்கள் பொருட்படுத்தவில்லை. பாமாயில் ₹100ல் இருந்து ₹122ஆகவும், கடுகு எண்ணெய் ₹141ல் இருந்து ₹152ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சாதிய வன்முறை பகுதிகள் மதுரையிலேயே அதிகம் இருப்பதாக புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலருக்கு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக சமூகநீதி மற்றும் மனித உரிமைத்துறை பதிலளித்துள்ளது. அதில் மதுரையில் 45 பகுதிகள், நெல்லையில் 29, திருச்சியில் 24, தஞ்சையில் 22, தேனியில் 20 பகுதிகள் சாதிய வன்முறைகள் அதிகம் நடக்கும் பகுதிகள் எனக் கூறப்பட்டுள்ளது.
சாலைக்கு SPB பெயரை வைக்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு SPB மகன் சரண் நன்றி தெரிவித்துள்ளார். சாலைக்கு கோரிக்கை விடுத்த 36 மணி நேரத்தில் முதல்வர் பெயர் வைக்க ஆணையிட்டதாகவும், அதற்காக குடும்பத்தினர், ரசிகர்களின் சார்பாக நன்றி கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார். SPB வசித்து வந்த நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு நேற்று அவர் பெயர் சூட்டப்பட்டது.
<<14197768>>செந்தில் பாலாஜி<<>> மீண்டும் அமைச்சராக தடையில்லை என்று அவரது வக்கீல் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார். E.D.ஆல் கைது செய்யப்பட்ட அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் நிபந்தனை ஜாமினில் அவரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. அவரால் அமைச்சராக முடியுமா என்றக் கேள்விக்கு பதிலளித்த என்.ஆர். இளங்கோ, சட்டப்பூர்வமாக எந்தத் தடையும் இல்லை என பதிலளித்தார்.
ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் உண்டாகும் ‘GOUT’ நோய்க்கான சிறந்த தீர்வினை முடக்கறுத்தான் வழங்கும் என நவீன மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. காலிகோஸின், குவர்செடின், அபிஜெனின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த அதன் இலைகளை நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, உடல் சோர்வடைந்திருக்கும் போது ‘கிரீன் டீ’ போல இதனைப் பருக, உடனடியாக உற்சாகம் பிறக்கும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
<<14197768>>செந்தில் பாலாஜி<<>>க்கு ஜாமின் அளிக்கையில் உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அவை என்னென்ன? 1) தலா ₹25 லட்சம் என 2 நபர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் 2) வாரம் 2 முறை (திங்கள், வெள்ளி) அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் 3) சாட்சிகளை கலைக்க முயற்சி மேற்கொள்ளக் கூடாது 4) விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.