India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
PAK-க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ENG அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா என்பது குறித்து ECB தகவல் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், “தி 100 மென்ஸ் தொடரின்போது, (6 வாரம் முன்பு) பென்னுக்கு காயம் ஏற்பட்டது. ஓய்வில் இருந்த அவரது உடல்நிலை தற்போது தேறியுள்ளது. ஸ்கேன் உள்ளிட்டவற்றிலும் நல்ல முடிவுகள் வந்துள்ளன. இப்போது, பாக்., தொடருக்கு அவர் ஆயத்தமாகி வருகிறார்” எனக் கூறியுள்ளது.
எதிர்க்கட்சிகளை முடக்க BJP எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு செந்தில் பாலாஜி கைது சிறந்த உதாரணம் என சிபிஐ கட்சி தெரிவித்துள்ளது. தேர்தலில் விரைந்து களப்பணியாற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை முடக்கி, அவர்களை அரசியல் ரீதியாக பொய் வழக்கு போட்டு பழிவாங்குவதை பாஜக ஒரு உத்தியாக வைத்திருப்பதாகவும் விமர்சித்துள்ளது. SC தீர்ப்பு பொய் வழக்கு போடும் பாஜகவுக்கு எச்சரிக்கை மணி என்றும் கூறியுள்ளது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பை சென்னை அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்ததால், SB அமர்வு நீதிமன்றத்தில் இன்று காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கில் SBக்கு SC ஜாமின் வழங்கியுள்ளதாகவும், அதற்கான ஆவணம் இதுவரை கிடைக்கவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து காவல் நீட்டிப்பு நிறுத்தப்பட்டது.
இன்று 10 மணிக்கு GK வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) தேனீ ஹம்மிங்பேர்ட் 2) Uniform Resource Locator 3) நிலக்கடலை (அ) வேர்க்கடலை 4) இறால் மீன் 5) குரோமோசோம் 6) ராபர்ட் ஓவன் 7) சோகர்னோ. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
கனரா வங்கியில் தொழில்பழகுநர் நிலையிலான 3,000 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. வேலையில் சேர விரும்புவோர் https://canarabank.com/ என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து ஆன்லைன் தேர்வு, மொழித்தேர்வு உள்ளிட்டவை நடத்தப்படும். இந்த வேலைவாய்ப்பில் தமிழகத்துக்கு மட்டும் 350 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. SHARE IT.
இந்திய சந்தையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. அதாவது, தென் கொரியாவை தளமாக கொண்ட ஹூண்டாய், IPO மூலம் $3 பில்லியன் நிதியை திரட்ட SEBI ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மதிப்பு சுமார் $20 பில்லியனாக உயருமெனக் கூறப்படுகிறது. இந்த நிதியை அந்நிறுவனம் உற்பத்தி திறனை அதிகரிக்க & புது மாடல்களை அறிமுகப்படுத்த பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் ஷர்மாவுக்கு எதிராக பந்து வீசுவது கடினமானதென ஆஸி. அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “கடந்த முறை பார்டர் – கவாஸ்கர் கோப்பை போட்டியின்போது, ரோஹித் தொடக்க வீரராக களமிறங்கினார். அப்போது புதிய பந்துவீச்சை எதிர்கொண்ட அவர், பந்து வீச்சாளர்களால் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடினார். எக்ஸ்ட்ரா பவுன்ஸுக்கு அவர் கவலைப்படவில்லை” எனக் கூறினார்.
வீடுகளுக்கான 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2 மாதத்திற்கு ஒருமுறை வீடுகளில் மின்சார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அப்போது 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படுகிறது. எஞ்சிய பயன்பாட்டுக்கே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிலர் முறைகேடு செய்வதால் இழப்பு ஏற்படுவதாகவும், இதனால் 100 யூனிட் இலவசத்தை ரத்து செய்ய மின்வாரியம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
உதயநிதிக்கு துணை CM பதவி அளிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு, புரட்டாசிக்கு பிறகு வெளியிடப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜோதிடப்படி தேய்பிறை நாள் நடப்பதால் அறிவிப்பு வெளியாகவில்லை, தேய்பிறை முடிந்ததும் CM ஸ்டாலின் ஓகே சொன்ன அடுத்த நொடி அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. அவருக்கு அமைச்சரவையில் முக்கிய துறையை அளிப்பது குறித்து ஆலோசனை நடப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்க் கவிதை உலகின் முன்னத்தி ஏராக இருக்கும் ஈரோடு தமிழன்பன், முகநூல் வழியாக எழுதிய கவிதைகளை ‘ஓடையின் முறையீடு’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். ‘ஆற்றை அழைத்துக் கொண்டு போனால் கடலாகலாம். காற்றை அழைத்துக்கொண்டு போனால் இசையாகலாம்’ என்பது போன்ற வரிகளை இந்த நூலில் படித்து ரசிக்கலாம். கவிதையின் ஊடாக இயற்கையை நேசிக்கும் வாசிப்பு பிரியர்களுக்கு இந்நூல் நிச்சயம் நல்ல அனுபவத்தை அளிக்கும்.
Sorry, no posts matched your criteria.