India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து செந்தில் பாலாஜி இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அவரை ED கைது செய்தது. நெஞ்சு வலி, பைபாஸ் அறுவை சிகிச்சை ஆகிய படலங்களை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கொங்கு மண்டலத்தை தனது கைக்குள் வைத்திருந்த செந்தில் பாலாஜி, 471 நாட்கள் சிறைவாசத்தை முடித்து வெளியே வந்திருக்கிறார்.
இவரை போல கணவர் கிடைக்குமா என இளம்பெண்களை ஏக்கம் கொள்ள செய்திருக்கிறார் துபாய் ஷேக் ஒருவர். துபாயில் பெண்கள் கவர்ச்சி உடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனது காதல் மனைவியை, பிகினி உடையில் பார்க்க ஆசைப்பட்ட ஜமால், தனித்தீவு ஒன்றையே ரூ.418 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். அந்த தீவின் வீடியோவை அவரது மனைவி செளதி, பெருமையுடன் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். என்னா மனுசன்!
அக்.27ம் தேதி நடைபெறும் தவெகவின் முதல் மாநாட்டில் பெண்கள்தான் அதிகமாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நிர்வாகிகளுடன் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், முதல் மாநாடு வெற்றி மாநாடாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என நம்பிக்கை தெரிவித்தார். நம்முடைய இலக்கு 2026 தான் என்றும், விஜய் தான் முதலமைச்சர் எனவும் உறுதி தெரிவித்தார்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு SC ஜாமின் அளித்ததை வரவேற்று CM ஸ்டாலின் இன்று உருக்கமாக பதிவு வெளியிட்டு இருந்தார். இதை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. X பக்கத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள பதிவில், விசாரணை கைதி ஜாமினில் வருவதற்கு மாநிலத்தின் முதல்வர் புளகாங்கிதம் அடைவது கேவலத்தின் உச்சம் என விமர்சனம் செய்துள்ளார்.
செந்தில் பாலாஜியின் பிணை உத்தரவாதங்கள் ஏற்கப்பட்டதை அடுத்து, சற்றுநேரத்தில் அவர் வெளியே வருகிறார். இரு நபர் நிபந்தனை ஜாமின் உத்தரவாதங்கள் மீது நீதிபதி கார்த்திகேயன் சந்தேகங்களை எழுப்பிய நிலையில், SB விடுதலைக்கு ED தரப்பில் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து, ஜாமின் உத்தரவாதங்களை நீதிபதி ஏற்றுக்கொண்டார். 471 நாள்கள் சிறை வாசத்திற்கு பின் செந்தில் பாலாஜி விடுதலையாகிறார்.
தமிழகத்தில் 10,000 பகுதி நேர நியாய விலைக் கடைகளில் கருவிழி அடிப்படையில், பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 3 லட்சம் பேர் குடும்ப அட்டைக் கோரி விண்ணப்பித்ததாகவும், 1.5 லட்சம் பேருக்கு சரிபார்க்கும் பணி நிறைவடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், 40 மாத திமுக ஆட்சியில் 16 லட்சம் நபர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பாக ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்த வீடியோவை பரிதாபங்கள் டீம் நீக்கியது. இந்நிலையில், இந்த வீடியோவால் தங்கள் மனம் புண்பட்டதாக கூறி பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது ஆந்திர போலீஸ் டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பில் குழப்பம் உள்ளதாக சென்னை அமர்வு நீதிமன்றம் கூறியுள்ளது. பிணை உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம், ED விசாரணை அதிகாரி முன் தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்த, விசாரணை அதிகாரி முன் எப்படி தாக்கல் செய்ய முடியும் என செந்தில் பாலாஜி தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் அவர் சிறையில் இருந்து விடுதலையாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள Arts காலேஜில் மாணவிகள் ஓய்வெடுக்க, தனி அறை அமைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஓய்வறை கட்டுவதற்காக ₹8.55 கோடியை 3 வாரங்களில் ஒதுக்கவும் தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. முன்னதாக, அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள சானிடரி நாப்கின் எந்திரங்கள் பராமரிப்பின்றி இருப்பதாக வெளியான செய்தி அடிப்படையில், ஐகோர்ட் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது.
வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, கிஸ்மிஸ், பாதம், பிஸ்தா, ஏலக்காய் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை கிளறி, வறுத்து தனியே எடுத்து கொள்ளவும். மற்றொரு வாணலியில் சாமையை போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு அதனை மூழ்குமளவுக்கு பால் விட்டு வேகவிடவும். அதனுடன் சர்க்கரை, பால் கோவா, மில்க் மெய்ட் சேர்த்து கிளறவும். இத்துடன் வறுத்து வைத்த கலவையை சேர்த்து, சிறிது நேரத்துக்கு பின் இறக்கினால் சுவையான சாமை கீர் ரெடி.
Sorry, no posts matched your criteria.