India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (செப். 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
*மேஷம் – நிம்மதி ஏற்படும் *ரிஷபம் – எதிர்ப்புகள் இருக்கும் *மிதுனம் – வரவு உண்டாகும் *கடகம் – ஏமாற்றம் ஏற்படலாம் *சிம்மம் – விவேகத்துடன் செயல்படுங்கள் *கன்னி – ஊக்கம் கிடைக்கும் *துலாம் – உதவி கிடைக்கும் *விருச்சிகம் – பொறுமையுடன் செயல்படுங்கள் *தனுசு – பெருமை வந்து சேரும் *மகரம் – ஆக்கம் உண்டாகும் *கும்பம் – அசதி இருக்கும் *மீனம் – போட்டி உண்டாகும்.
500 T20 போட்டிகளை விளையாடிய முதல் SA வீரர் என்ற பெருமையை டேவிட் மில்லர் படைத்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் T20 தொடரில் பார்படாஸ் ராயல்ஸ் அணிக்காக இன்று அவர் விளையாடியதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்குமுன், பொல்லார்ட், பிராவோ, சோயப் மாலிக், நரைன், ரஸல் ஆகியோர் 500 T20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீரர்களில் யார் இந்த முதல் பெருமையை பெறுவார்? கமெண்ட்ல சொல்லுங்க.
அவதூறு வழக்கில் கேள்விக்கு பதிலளிக்க அக்.18ல் நேரில் ஆஜராக சபாநாயகர் அப்பாவுக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 40 அதிமுக MLAக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக அவர் பேசியது குறித்து அதிமுக தரப்பு வழக்கு தொடர்ந்தது. இதன் விசாரணையில், சபாநாயகர் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மந்திரி சபையை பங்கிட்டு கொள்வது மட்டும் ஆட்சி பகிர்வு இல்லை என CPM மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆட்சி, அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற நோக்கில் தான் அரசியல் கட்சிகள் செயல்படும் எனக் குறிப்பிட்ட அவர், இன்றைய சூழலில் நேரடியாக அதிகாரத்துக்கு வர முடியுமா? என வினவினார். முன்னதாக திமுக கூட்டணியில் உள்ள விசிக, அமைச்சரவையில் பங்கு கேட்பதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
T20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், புதிய வீரர்களை அணிக்கு கொண்டுவர இதுவே சரியான தருணம் என்றார். மேலும், தனது முடிவை BCB, தேர்வுக் குழு தலைவரிடமும் கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, அக்டோபரில் SAக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட்டில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
*தூங்கச் செல்லும் முன்பு இளஞ்சூட்டில் பசும்பால் அருந்தலாம்.
*ஆப்பிள், வாழை, மாதுளை (தேவையான அளவு) ஆகியவை கலந்த சாலட்டை ஒரு கப் சாப்பிடலாம்.
*நாள்தோறும் தூங்கும்முன் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.
*தூங்கச் செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
*எளிதில் செரிமானம் ஆகாத தயிர், முட்டை, மாமிசம், சிப்ஸ், மஞ்சூரியன் போன்றவற்றை இரவில் உண்ணக் கூடாது.
தென்காசியில் கடந்த 2014-ம் ஆண்டு காளிராஜ், முருகன், வேணுகோபால் ஆகியோர் முன்விரோதம் காரணமாக கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பொன்னுமணி, கண்ணன், முத்துகிருஷ்ணன், காளிராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களில் பொன்னுமணி, கண்ணன், முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மறைந்த பாடகர் SPB பெயரில் சாலை என அறிவித்த CM ஸ்டாலினுக்கு நன்றி என இளையராஜா Xஇல் பதிவிட்டுள்ளார். அதில், தனது நண்பன் பாலுவின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலையின் பெயரை மாற்றியதற்காக தமிழக மக்கள், திரையுலகம் சார்பில் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலை, S.P.பாலசுப்பிரமணியன் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. திறனில்லா ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ₹783, பகுதி திறன் உள்ளவர்களுக்கு ₹868, திறன் உடையவர்களுக்கு ₹954, திறன் மிகுதியானவர்களுக்கு ₹1,035ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய விகிதம் அக்.1 முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் கட்டுமானம், தூய்மைப்பணி உள்ளிட்ட பலதுறை தொழிலாளர்கள் பயன்பெற உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.