India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக EX அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். வழக்கில் அவருக்கு ஜாமின் அளித்த சுப்ரீம் கோர்ட் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. அதில் வாரந்தோறும் திங்கள், வெள்ளி ஆகிய 2 நாள்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் ஒன்றாகும். அதன்படி, இன்று நேரில் ஆஜரானார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு அணியிலும் பல மாற்றங்களை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், KKR அணியை வலுப்படுத்தும் நோக்கில் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக CSK அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அவர் செயல்பட்டார்.
<<14206716>>வெள்ளி விலை<<>> கிலோவுக்கு ₹1,000 அதிகரித்துள்ளது. கடந்த 24ஆம் தேதி 1 கிராம் ₹98க்கும், 1 கிலோ ₹98,000க்கும் விற்கப்பட்டது. 25ம் தேதி 1 கிராம் ₹3 உயர்ந்து ₹101, கிலோ ₹3,000 அதிகரித்து ₹1.01 லட்சமாக விற்பனை செய்யப்பட்டது. நேற்று எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 1 கிராம் ₹1 உயர்ந்து ₹102க்கும், 1 கிலோ ₹1,000 அதிகரித்து ₹1.02 லட்சத்துக்கும் விற்கப்படுகிறது.
வாணலியில் வெள்ளை எள், பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து, சலித்து எடுக்கவும். பாத்திரத்தில் கம்பு மாவுடன் (300 g) சிறிது நீர் & உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, அடை போல சுடவும். இவை ஆறியதும் மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் கருப்பட்டி சேர்த்து நன்றாகப் பிசைந்து உருண்டைகளாகப் பிடித்தால் சுவையான கம்பு உருண்டை ரெடி.
டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். பள்ளிக் கல்வித்துறை, 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தி அவர் மனு அளித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்கும் நிதியினை தமிழகத்திற்கு மத்திய அரசு நிறுத்தியது. மேலும், மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கும் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை.
இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் லெபனான் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 700ஐ கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராக்கெட் வீச்சுக்கு பதிலடியாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் 5 நாள்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நேற்று நடத்திய விமானத் தாக்குதலில் அப்பாவி மக்கள் உள்ளிட்ட 92 பேர் பலியானதாகவும், 153 பேர் காயமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறாக பேசியதாக அதிமுக பெண் நிர்வாகி சசிரேகா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக அரசை கண்டித்து சென்னையில் அண்மையில் அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கனிமொழியை தரக்குறைவாக பேசியதாகவும், தனிமனித ஒழுக்கத்தை பொருட்படுத்தாமல் பேசியதாகவும் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
SBI வங்கி காலியாக உள்ள 1,497 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது சிறப்பு பிரிவு அலுவலர், உதவி மேலாளர் பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: BE (IT, EEE, ECE, CE), B.Tech , M.Sc, M.Tech. சம்பளம் வரம்பு: ₹48,480 – ₹85,920. வயது: 21-45. விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.4. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு. கூடுதல் தகவல்களுக்கு <
தொலைதூரம் செல்லும் ஆம்னி பஸ்களில் ஆபாசம் அரங்கேறுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. படுக்கை வசதி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, விபசார அழகிகளுடன் சென்று சிலர் உல்லாசமாக இருப்பதாகவும், காதலர்கள் சந்தோஷமாக இருப்பதாகவும் அத்தகவல் கூறுகிறது. லாட்ஜ்களில் போலீஸ் சோதனை அபாயம் இருப்பதால் இந்த வழியை அவர்கள் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? கீழே பதிவிடுங்கள்.
சென்னை HC தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, ரகுபதி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து காெண்டனர்.
Sorry, no posts matched your criteria.