News September 27, 2024

பிரதமர் மோடியுடனான சந்திப்பு இனிதே அமைந்தது: ஸ்டாலின்

image

PM மோடியுடனான சந்திப்பு இனிதே அமைந்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மோடியை சந்தித்து பேசிய விவரங்கள் குறித்து, டெல்லியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், மீனவர் பிரச்னை குறித்து இலங்கை புதிய அதிபரிடம் எடுத்துரைக்கும்படி தாம் வலியுறுத்தியதாக தெரிவித்தார். தனது 3 கோரிக்கைகளை கேட்ட பிரதமர். அதை பரிசீலித்து முடிவெடுப்பதாக உறுதியளித்ததாகக் குறிப்பிட்டார்.

News September 27, 2024

BREAKING: 7 மாவட்டங்களில் இன்று கனமழை

image

7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று RMC தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணித்துள்ளது. நாளை வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 19 மாவட்டங்களிலும், 29ஆம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

News September 27, 2024

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்

image

பாலிவுட் நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்து கொள்ளவிருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இதற்கு ஆதாரமாக திருமணத்தின்போது, அபிஷேக் அணிவித்த மோதிரத்தை ஐஸ்வர்யா கழற்றி விட்டார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், துபாயில் நடந்த நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா கையில் திருமண மோதிரம் அணிந்து இருந்தார். இதன் மூலம் விவாகரத்து வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

News September 27, 2024

இவர்கள்தான் அதிக உடல் தகுதி உடையவர்கள்: ஹர்திக்

image

கிரிக்கெட் வீரர்களை விட ஹாக்கி வீரர்கள் அதிக உடற்தகுதியுடன் இருப்பதாக இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர மிட்ஃபீல்டர் ஹர்திக் சிங் தெரிவித்துள்ளார். யோயோ டெஸ்டில், கிரிக்கெட் வீரர்கள் 19-20 மதிப்பெண் பெற்றால் தகுதியானவர்கள் எனக் கூறப்படுகிறது. முன்னாள் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், 8 ஸ்பிரிண்ட்கள் அடங்கிய இந்த தேர்வில் 23.8 புள்ளிகள் எடுத்துள்ளார். பெண்களில் பலர் 17-18 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்றார்.

News September 27, 2024

உ.பி.யில் கொடூரம்: பள்ளி விடுதியில் மாணவன் நரபலி

image

உ.பி.யில் பள்ளி விடுதியில் 2ம் வகுப்பு மாணவன் நரபலி கொடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸ் அருகே ரஸ்காவனில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது. பள்ளிக்கு வெற்றி தேடித்தர சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளி இயக்குனர், அவரின் தந்தை, 3 ஆசிரியர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 27, 2024

மோடிக்கு தடம் பெட்டகத்தை பரிசளித்த முதல்வர்

image

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடையையும் அவர் பரிசளித்தார். தடம் பெட்டகத்தில் பனை ஓலை ஸ்டாண்ட், டெரகோட்டா சிற்பங்கள், பித்தளை விளக்கு, நீலகிரி தோடா எம்பிராய்டரி சால்வை, பவானி ஜமுக்காளம் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன.

News September 27, 2024

கண்டெய்னர் லாரியில் வந்தது ராஜஸ்தான் கொள்ளையர்கள்?

image

<<14207693>>குமாரபாளையம்<<>> அருகே போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட கும்பல், ராஜஸ்தானைச் சேர்ந்த கொள்ளையர்கள் எனத் தெரிய வந்துள்ளது. வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை சினிமா பாணியில் போலீசார் துரத்தி சுட்டுப் பிடித்தனர். அப்போது லாரிக்குள் கார், பணம் இருந்துள்ளது. விசாரணையில், கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளையடித்து விட்டு பணத்தை எடுத்து வந்ததாக அவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது.

News September 27, 2024

மூலிகை: உடல் சோர்வு நீக்கும் சிந்துவாரம் குளியல்

image

வாத பித்த கபத்தை உடலிலிருந்து முழுமையாக வெளியேற்றாமல், சம அளவில் நிலை நிறுத்தும் ஆற்றல் சிந்துவாரத்திற்கு இருப்பதாக சித்தர் பாடல் கூறுகிறது. லுடியோலின், யுர்சோலிக், நிஷிடைன், இரிடாய்ட் கிளைக்கோசைடு போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதன் இலைகளை கசக்கி, சுடுநீரில் கலந்து குளித்தால் உடல் வலி & சோர்வு நீங்குவதோடு, குறைந்திருக்கும் நோய் எதிர்ப்பாற்றலும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News September 27, 2024

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் வடமாநில கொள்ளையன் பலி

image

குமாரபாளையம் அருகே <<14207693>>கண்டெய்னரில்<<>> பதுங்கிய வடமாநில கொள்ளையர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னரை போலீஸ் மடக்கியபோது, 6 கொள்ளையர்கள் தாக்க முயன்றுள்ளனர். தற்காப்புக்கு போலீசார் சுட்டதில் ஒருவர் பலியானார். 5 பேர் காயமடைந்தனர். கண்டெய்னரில் இருந்தது, கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எனத் தெரிய வந்துள்ளது.

News September 27, 2024

கண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக பணம்

image

நாமக்கல்லில், சாலையில் தாறுமாறாக ஓடிய கண்டெய்னர் லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். முதல் கட்ட விசாரணையில் லாரியில் லட்சக்கணக்கில் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இன்று காலை கேரளாவில் 3 ஏடிஎம் நிலையத்தில் கொள்ளை முயற்சி நடந்த நிலையில், லாரியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!