India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை, அஸ்வின் படைத்துள்ளார். இந்தியா-வங்கதேசம் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் இன்று ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம், அனில் கும்ளேவின் (419 W) முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார். ஆசிய அளவில், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் முரளிதரன் (612 W), அஸ்வின் (420 W), கும்ளே (419 W) முதல் 3 இடங்களில் உள்ளனர்.
மூடா முறைகேடு விவகாரம் தொடர்பாக கர்நாடக CM சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில், இவ்விவகாரம் சூடுபிடித்துள்ளது. தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் அவர் பதவி விலக போர்க்கொடி தூக்கியுள்ளனர். மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில், சித்தராமையா ஆட்சிக்காலத்தில் ₹4,000 கோடி மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேர்மையான, துணிச்சலான அரசியல்வாதி ராகுல் என நடிகர் சைஃப் அலி கான் கூறியுள்ளார். எதிர்மறை விமர்சனங்களை கடின உழைப்பால் சுவாரஸ்யமாக மாற்றியவர் ராகுல் எனக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் எதிர்காலம் அவர்தான் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக டிவி நிகழ்ச்சியில், மோடி, ராகுல், கெஜ்ரிவாலில் துணிச்சலான அரசியல்வாதி யார் என சைஃப்பிடம் கேட்கப்பட்டது. நீங்க யாரை நினைக்கிறீங்க? Cmd Here.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தவறு நடந்தால் தட்டிக் கேட்கவும் தயங்க மாட்டீர்கள். அதே நேரம் பிறர் மனம் புண்படும்படிப் பேச மாட்டீர்கள். சொந்த வேலையில் மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள் என்கிறது சாஸ்திரம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
ATM கொள்ளையர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சூரில் கொள்ளை நடந்தவுடன் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக திருச்சூர் எஸ்பி இளங்கோ கூறினார். நாமக்கல் அருகே பிடிபட்டவர்கள் ஹரியானாவின் <<14207793>>மேவாட் கொள்ளைக் கும்பல்<<>>, தென்னிந்தியாவில் 6 மாதங்களில் 15க்கும் மேற்பட்ட ATMகளில் கைவரிசை காட்டியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 98 பேர் (13%) மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். இவர்களில் 80% பேர் கேரளா, பஞ்சாப் மற்றும் ஹரியானா, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 62 நீதிபதிகளில், 5 பேர் மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை அறிவித்துள்ளனர். தங்கள் சொத்து விவரங்கள் பொதுநலனுக்கு உதவாது என சில நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா-வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. U.P. கான்பூரில் டாஸ் வென்ற IND முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆடிய BAN அணி 35 ஓவர்களில் 107/3 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. மேலும், மழை காரணமாக மைதானத்தில் தண்ணீர் தேங்கியதால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தீபாவளி, சாத்பூஜை உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, நாடு முழுவதும் 5,975 சிறப்பு ரயில்கள் விடப்படுவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். 108 ரயில்களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 12,500 பெட்டிகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ரயில்கள் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
மின்மாற்றி கொள்முதலில் தமிழக அரசுக்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். 2022இல் 500 KVA திறன் உடைய 800 மின்மாற்றிகள் தலா ரூ.12,49,800க்கு வாங்கப்பட்டதாகவும், அவை வெளிச்சந்தையில் ரூ.7,87,311 விலையில் கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் பல கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
கான்பூர் டெஸ்டில் வங்கதேச ரசிகர்கள் மீது இந்திய ரசிகர்கள் தாக்குல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புலி வேடமணிந்து வந்த வங்கதேச ரசிகர்களுக்கும், இந்திய ரசிகர்களுக்கும் இடையே முதலில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இருதரப்புக்கும் தொடர்ந்து வாக்குவாதம் நீடித்த நிலையில், திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் BAN அணி ஆதரவாளர்கள் இருவர் பலத்த காயம் அடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.