India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இயற்கை விவசாயி பாப்பம்மாள் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இறுதிமூச்சு வரையில், சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்ததாகவும், குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிப்பதாகவும் வேதனை தெரிவித்தார். பாப்பம்மாளுடன் உரையாடிய ஒவ்வொரு தருணமும் தன் நெஞ்சில் நீங்காமல் பசுமையாக இருக்கும் என நினைவுகூர்ந்ததோடு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்துள்ளார்.
➤Macau Super 300 Badminton: மகளிர் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் திரிஷா-காயத்ரி ஜோடி 2-0 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் ஹூய்- யுன் இணையை வீழ்த்தியது. ➤ஆசிய கோப்பை (U 20) கால்பந்து தகுதிச்சுற்றின் 2ஆவது போட்டியில் கடைசி வரை போராடிய இந்திய அணி 0-1 என்ற கணக்கில் ஈரானிடம் தோற்றது. ➤ஷகிப் அல்-ஹசனுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என BCB தலைவர் பரூக் அகமது தெளிவுப்படுத்தியுள்ளார்.
➤அஜர்பைஜான் பாகிஸ்தானிடம் இருந்து JF-17 Block III போர் விமானங்களை ($1.6 Billion) வாங்கியுள்ளது. ➤இந்தோனேசியாவின் சோலோக்கில் உள்ள தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் உயிரிழந்தனர். ➤அமெரிக்காவில் அதிகரித்துவரும் துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ➤வடக்கு வியட்நாமில் யாகி புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஆசிய வளர்ச்சி வங்கி ₹16 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை, டிசம்பர் மாதத்திற்குள் பதிவு செய்து முடிக்குமாறு ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சேமிப்பு கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, உடனடியாக வங்கியிலோ, தபால் நிலையத்திலோ சேமிப்பு கணக்குகளை துவக்கவும் அறிவுறுத்தியுள்ளது. ஆபத்தான நிலையிலும், பயன்பாடில்லாத நிலையிலும் உள்ள பழைய பள்ளி கட்டடங்களை இடிக்கும்படியும் ஆணையிட்டுள்ளது.
யூதேயா பாலைவனத்தில் உள்ள பழங்கால மரத்திற்கு புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர். குகையொன்றில் கிடைத்த 1,000 ஆண்டுகள் பழமையான விதை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டு, பயிரிட்டு மரமாக வளர்க்கப்பட்டது. விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஷீபா எனப் பெயரிடப்பட்ட இம்மரத்தின் பிசினில் கிளைகோலிப்பிட் வேதிப்பொருள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சிலி, கனடா, மலேசியா போன்ற நாடுகள் வந்தே பாரத் ரயில்களை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. இந்த வகை ரயில்களை மற்ற நாடுகளில் இருந்து வாங்க ₹160-180 கோடி செலவாகும் நிலையில், இந்தியா ₹120-130 கோடிக்கு உற்பத்தி செய்வதுதான் வெளிநாடுகளின் இறக்குமதி ஆர்வத்துக்கு முக்கிய காரணமாகும். ஜப்பான் புல்லட் ரயில் 0-100 KPH-ஐ அடைய 54 வினாடிகள் ஆகும். ஆனால், வந்தே பாரத் 52 வினாடிகளில் அடையும்.
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (RMC) கணித்துள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு செப்., 20ஆம் தேதி 692.3 பில்லியன் டாலர்களை எட்டியது. RBI தரவுகளின்படி, FOREX தொடர்ந்து 6ஆவது வாரமாக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த 5 வாரங்களில் மொத்த கையிருப்பு $19.3 பில்லியனாக உயர்ந்த நிலையில், இந்த வாரத்தில் கையிருப்பு $2.84 பில்லியன் அதிகரித்துள்ளது. முந்தைய வாரத்தில் $603.6 பில்லியனில் இருந்து $605.7 பில்லியனாக FOREX சொத்துக்கள் அதிகரித்துள்ளன.
காவிரி பாயும் பெருமை வாய்ந்த தஞ்சையின் அழகாபுத்தூரில் அமைந்துள்ளது படிக்காசுநாதர் கோயில். புகழ்த்துணை நாயனாருக்கு படிக்காசு தந்து, மக்களின் வறுமையைப் போக்கி திருவிளையாடல் ஆடி, சிவபதவி அருளிய இந்த திருத்தலத்திற்கு கோச்செங்கட்சோழன் திருப்பணி செய்துள்ளார். இங்குள்ள இறைவனை 2 நாணயங்களை வைத்து வணங்கி, ஒன்றை கோயிலில் விட்டு, மற்றொன்றை வீட்டிற்கு எடுத்து சென்றால் ஐஸ்வரியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
நடிகையை ஹோட்டல் அறையில் பூட்டி வைத்து பலாத்காரம் செய்ததாக, மலையாள நடிகர் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், சித்திக் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை, கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, அவரை கைது செய்ய போலீசார் தேடிய நிலையில் தலைமறைவானார். இந்நிலையில், அவரை கண்டுபிடிக்க போலீஸ் சார்பில் மலையாளம் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் படத்துடன் விளம்பரம் வெளியிடப்பட்டு உள்ளது.
Sorry, no posts matched your criteria.