India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சின்ன வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, முடக்கற்றான் கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, மல்லி சேர்த்து தாளித்து, நன்றாக வதக்கவும். பின்னர், இக்கலவையை தானிய மாவில் (ராகி, தினை, வரகு, சாமை) கலக்கவும். அதை சூடான தோசைக் கல்லின் மேல் தடிமனாக தட்டி, வேக வைத்து எடுத்தால், சுவையான ‘முடக்கறுத்தான் அடை’ ரெடி.
கர்நாடக CM சித்தராமையா மீதான மூடா முறைகேடு வழக்கினை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி, அம்மாநில HC-ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்(மூடா) மூலம் சித்தராமையா, தனது மனைவிக்கு 14 வீட்டு மனைகளை முறைகேடாக ஒதுக்கியதாக புகார் எழுந்துள்ளது.
தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக கூறப்பட்ட புகாரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக மக்களதிகார சங்கர்ஷ் பரிஷத் அமைப்பினர் அளித்த புகாரில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கர், ‘வேள்பாரி’ நாவலை மையமாக வைத்து சரித்திர படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான திரைக்கதையை எழுதி முடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம், சூர்யா ஆகியோரை நடிக்க வைக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறியமுடிகிறது. குலசேகர பாண்டியனாக விக்ரமும், வேள்பாரியாக சூர்யாவும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஜம்முவில், பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ள நிலையில், குல்காமில் தீவிரவாதிகள்-பாதுகாப்புப் படையினரிடையே கடும் துப்பாக்கிச்சண்டை மூண்டுள்ளது. அவந்திபுராவிலும் JEM தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 6 பேரை, போலீசார் கைது செய்ததுடன், ஆயுதங்கள், வெடிபொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இத்தகைய பதற்றமான சூழல் ஒரு புறமிருக்க, பிரதமர் மோடி இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
நாய்கள் வளர்ப்பு, இனப்பெருக்கத்தை ஒழுங்குப்படுத்த தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், *நாய்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்ய உள்ளாட்சி அமைப்புகளில் உரிமம் பெற வேண்டும் *இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் *வாலை நறுக்குதல், காதுகளை வெட்டுதல், நகங்களை அகற்றுதல் போன்றவற்றை செய்யக்கூடாது * நாயின் தோற்றத்தை செயற்கையாக மாற்றக்கூடாது என ஆணையிட்டுள்ளது.
1) உலகின் மிக நீளமான நதி எது? 2) BSNL என்பதன் விரிவாக்கம் என்ன? 3) உலகின் முதல் நாவல் எது & அதன் ஆசிரியரின் பெயர் என்ன? 4) பத்ம ஸ்ரீ விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்? 5) மீத்தேனின் வேதியியல் குறியீடு என்ன? 6) அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய் 7) தமிழில் மொத்தம் எத்தனை உயிர்மெய்க்குறில் எழுத்துக்கள் உள்ளன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
IPL 2025 தொடரில் போட்டிகளின் எண்ணிக்கை 84ஆக உயர்த்தப்படாது என்று BCCI செயலாளர் ஜெய்ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். 10 அணிகள் இடையிலான IPL கிரிக்கெட்டில் கடந்த சீசனில் மொத்தம் 74 ஆட்டங்கள் நடந்தன. இது 2025இல் 84ஆக மேலும் உயர்த்தப்படலாம் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக பதிலளித்த ஜெய்ஷா, “இந்திய வீரர்களின் பணிச்சுமையை பார்க்க வேண்டியுள்ளது. 84 ஆட்டங்கள் என்பது ஒப்பந்தத்தில் உள்ளது தான்” என்றார்.
லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள், தலைமையகத்தை குறி வைத்து கடந்த 6 நாள்களாக போர் விமானங்கள் மூலம் நடந்து வரும் வான்வழி தாக்குதலில், குழந்தைகள், பெண்கள் என 3,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு-2 நேரடி நியமன பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. Accounts Officer – III, Assistant Manager (Projects) பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் ஆன்லைனில் இன்றே விண்ணப்பியுங்கள். கல்வித் தகுதி: MBA, BE, CA. வயது வரம்பு: 25-57. தேர்வு நடைபெறும் நாள்: நவ.18, 2024. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
Sorry, no posts matched your criteria.