India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உடல்நலக் குறைவால் காலமான பாப்பம்மாள் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கோவை தேக்கம்பட்டி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, அமைச்சர் முத்துசாமி, வானதி சீனிவாசன், ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். 108 வயதான பாப்பம்மாள், 60 வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இவரது சேவையை பாராட்டி, 2021ஆம் ஆண்டு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
நாடாளுமன்றத்துக்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்த முடியாதவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தலை பற்றி பேசுவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக பவள விழாவில் சிறப்புரையாற்றிய அவர், அன்றைய இந்தியாவும் இன்றைய இந்தியாவும் ஒன்றா? எனக் கேள்வி எழுப்பி ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது என்றார். மேலும், திமுக கூட்டணியின் ஒற்றுமையை கண்டு கொள்கை எதிரிகளுக்கு பொறாமையாக இருப்பதாகவும் கூறினார்.
பாஜக ஆட்சியை அகற்றும் வரை நமது வெற்றியை நோக்கி பயணிப்போம் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திமுக பவள விழாவில் பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல், புதிய கல்வி கொள்கை என கூட்டாட்சி தத்துவத்திற்கு பாஜக நெருக்கடியை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார். மேலும், சமூக நீதியை சவக்குழிக்கு அனுப்ப வேண்டும் என செயல்பட்டு வருவதாகவும், அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாஜக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றார்.
தமிழகத்தில் பருவமழை தொடங்கவுள்ள சூழலில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பராமரிப்புப் பணி மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மின் இணைப்புகளை கண்காணித்தல், வடிகால்களை சுத்தம் செய்தல், பள்ளி மேற்கூரை மற்றும் வளாகத்தில் மழை நீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுத்தல், பள்ளி சுற்றுச்சுவரின் தன்மையை ஆராய்தல் போன்ற பணிகளை உடனே மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணும், மண்ணும் இருக்கும் வரை திமுக நிலைத்திருக்கும் என வைகோ தெரிவித்துள்ளார். திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுகவை அழித்துவிடலாம் என இந்துத்துவா சக்திகளும், சனாதன சக்திகளும் திட்டம் தீட்டுவதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், ஒரே நாடு ஒரே மொழி போன்ற திட்டங்களை மத்திய அரசு திணிக்க நினைத்தால், தலை கொடுக்கவும் தயங்க மாட்டோம் என தனக்கே உரித்தான நடையில் முழங்கினார்.
தொழில்நுட்பக்கோளாறால், 110 நாட்களாக சர்வதேச விண்வெளி மையத்தில்(ISS) தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்க, டிராகன் விண்கலம் இன்றிரவு 10.47 மணிக்கு ஏவப்படுகிறது. புளோரிடாவிலிருந்து Falcon-9 ராக்கெட் மூலம் ஏவப்படும் இந்த விண்கலத்தில் ஹேக், கோர்புனோ என்ற 2 வீரர்கள் ISS செல்கின்றனர். 5 மாத ஆய்வுக்கு பின், சுனிதா, வில்மோரை அழைத்துக்கொண்டு, பிப்ரவரியில் பூமி திரும்புகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி திருப்பத்தூர், மயிலாடுதுறை, தருமபுரி, விழுப்புரம், திருச்சி, தென்காசி, புதுக்கோட்டை, தேனி, குமரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பசியைக் குறைக்கக்கூடிய பழங்களை சாப்பிடலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். திராட்சையில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து பசியை குறைக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி இருப்பது எடை இழப்புக்கு உதவுகிறது. பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து பசியை குறைத்து, எடை இழப்புக்கு உதவுகிறது என்கிறார்கள். இவை தவிர, ஸ்ட்ராபெரி சாப்பிடவும் பரிந்துரைக்கப்படுகிறது.
தேர்தல் அரசியலை முன்னிறுத்தி, அதிகாரத்தை நோக்கி இயங்குகிற சராசரி இயக்கமல்ல திமுக என திருமாவளவன் புகழாரம் சூட்டியுள்ளார். திமுக பவள விழாவில் பேசிய அவர், 75 ஆண்டுகளாக இக்கட்சி வீறுநடை போடுவதாக தெரிவித்தார். அனைத்து கட்சிகளுக்கும் வழிகாட்டுகிற கட்சியாக திமுக இருப்பதாக தெரிவித்த அவர், பெரியாரின் கொள்கையில் தொடந்து இயங்கி வருவதாகவும், அரசியல் முதிர்ச்சி கொண்டிருப்பதாகவும் கூறினார்
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்த புகாரில் FM நிர்மலா சீதாராமன் மற்றும் ED மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டி பாஜகவுக்கு நன்கொடை பெற்றதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு பெங்களூரு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
Sorry, no posts matched your criteria.