India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் இன்று பதவி விலகினர். ஆளும் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலைவராக 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, கடந்த ஆகஸ்ட்டில் பதவி விலகப் போவதாக கிஷிடா அறிவித்திருந்தார். ஆளுங்கட்சியின் புதிய தலைவராக ஷிகெரு இஷிபா கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் இஷிபா பிரதமராக பதவியேற்க உள்ளார்.
ரஜினி விரைவில் நலம்பெற CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது x பதிவில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். வயிற்றுவலி, லேசான நெஞ்சு வலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, பரிசோதனைகள் நடந்து வருகின்றன. தொடர் படப்பிடிப்பு காரணமாக அவருக்கு உடல்சோர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு RMC கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக RMC கூறியுள்ளது. நாளை தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், 3ம் தேதி 7 மாவட்டங்களிலும், 4ம் தேதி 9 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் பிரசன்னா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா, சுனில், நஸ்லேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஹைதராபாத்தை தொடர்ந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் 112 இடங்களில் உற்பத்தியாவது ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபமாக இன்ப்ளுயன்ஸா, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொசுக்கள், லார்வாக்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதனால் நோய் பரவலாகும் முன், தடுப்பு நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் என்கின்றனர்.
➤காலநிலை மாற்றம் எதிரொலியாக இங்கிலாந்தில் 142 ஆண்டுகள் பழமையான கடைசி அனல் மின் நிலையம் (ராட் கிளிப்) மூடப்பட்டது. ➤அமெரிக்காவின் டிரோனை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர். ➤பாக்., Ex. பிரதமர் இம்ரான்கான் மீது ராவல்பிண்டி கலவரம் தொடர்பாக பயங்கரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது. ➤மியான்மரில் கைதான 313 சைபர் தாக்குதல் குற்றவாளிகள் சட்ட அமலாக்க ஒப்பந்தப்படி, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தமிழ்க் கடவுள் முருகனை செவ்வாய் கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்பவர் வாழ்வில், எண்ணற்ற நன்மைகள் நடக்குமென ஆன்மிக ஆன்றோர் கூறுகின்றனர். காலையிலேயே நீராடி, திருநீறணிந்து, குமரி வேள்விமலையில் உள்ள குமாரகோயிலுக்கு சென்று, முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, செவ்வரளி மலர்மாலை சூட்டி, நெய் தீபமேற்றி, சஷ்டி கவசம் பாராயணம் செய்து வணங்கினால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மருத்துவர்கள் அறிவுறுத்தல் பேரிலேயே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனை தரப்பில் இன்று காலை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
லெபனானில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் வீரர்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரேல் எல்லைக்கு அருகே உள்ள கிராமப் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்பைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய கிழக்கு ஆசியா நிலவரம் குறித்து இஸ்ரேல் பிரதமருடன் பேசியதாகவும், தீவிரவாதத்திற்கு உலகில் இடமில்லை என கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சிகளை ஆதரிக்க இந்தியா உறுதிபூண்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.