India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலங்கைக்கு சுற்றுலா செல்வதற்கான இலவச விசா நடைமுறை இன்று (அக்.1) முதல் அமலுக்கு வருகிறது. இந்தியா உட்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு செல்வதற்கு விசா தேவையில்லை. ஆறு மாதங்கள் வரை விசா இல்லாமல் அங்கு இருக்கலாம். இந்த நடைமுறை மக்களிடையே இலங்கைக்கு சுற்றுலா வரும் எண்ணத்தை அதிகப்படுத்தும் என்றும், மற்ற நாடுகளுடன் சுமூகமான உறவை மேற்கொள்ள உதவும் எனவும் அந்நாட்டு அரசு நம்புகிறது.
HURL நிறுவனத்தில் 212 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு வேதியியல், எலக்ட்ரிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமானவர்கள் career.hurl.net.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இஸ்ரேல் மற்றும் லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. லெபனானில் இஸ்ரேல் படைகள் தரைவழித் தாக்குதல்களையும் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இந்த இரு நாடுகளின் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 600 வீரர்களின் பாதுகாப்பை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஐநா அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய துருப்புகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.
➤ உலக புகழ்பெற்ற காங்கோ-அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் டிகெம்பே முடோம்போ மூளை புற்றுநோயால் உயிரிழந்தார். ➤உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 5 பதக்கங்களை வென்ற பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ➤ SA-க்கு எதிரான 2ஆவது T20 போட்டியில் அயர்லாந்து 10 ரன் வித்தியாசத்தில் அணி வென்றது. ➤இந்தியாவுக்கு எதிரான ஜூனியர் டெஸ்ட் கிரிக்கெட்: AUS அணி 293 ரன்னில் ஆல்-அவுட்டானது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வருகிற 4ஆம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இலங்கை அதிபர் தேர்தலுக்கு பின், அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அமைச்சராக ஜெய்சங்கர் இருப்பார். இலங்கை இடதுசாரி அரசுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தாக்கம் ஏற்படுத்துவதால், இந்த பயணம் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்திற்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செய்யக்கூடிய, ஆஞ்சியோகிராமை விட அதிநவீன அறுவை சிகிச்சை என்று கூறப்படுகிறது. வயிற்றுவலி மற்றும் லேசான நெஞ்சு வலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
PPF கணக்கு வைத்துள்ள NRI-க்கள், தங்களை பற்றிய தகவலை அப்டேட் செய்ய செப். 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த அவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதனால் தகவல் அப்டேட் செய்யாத NRI-க்களுக்கு இன்று முதல் வட்டி வரவு வைக்கப்படாது. இதேபோல், PPF கணக்கு அதிகம் வைத்திருந்தால், அதில் மெயின் கணக்குக்கு மட்டுமே வட்டி வரவு வைக்கப்படும். மற்ற கணக்குகளுக்கு வட்டி வரவு வைக்கப்படாது. SHARE IT.
மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டிற்கு பாதுகாப்பு கேட்டு விசிக எம்எல்ஏக்கள் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் மனு அளித்துள்ளனர். அரசியலுக்காக திட்டமிட்டு மாநாடு நடத்தப்படவில்லை எனவும், மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையிலே மாநாடு நடத்தப்படுவதாகவும் மனு அளித்த பின் அவர்கள் பேட்டியளித்துள்ளனர். விசிகவின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் கள்ளக்குறிச்சியில் நாளை மாநாடு நடைபெற உள்ளது.
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லையென நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. PPF, NSC, KVP உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை நிதி அமைச்சகம் மதிப்பாய்வு செய்தது. இருப்பினும், 3ஆம் காலாண்டிற்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன்படி, PPF திட்டத்திற்கு 7.1%, தபால் அலுவலக சேமிப்பு வைத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4%ஆகவும் தொடர்கிறது.
U-17 தெற்காசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது. பூட்டான் தலைநகர் திம்புவில் நடந்த இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை தோற்கடித்தது. இந்தியா சார்பில் கைப் (58ஆவது நிமிடம்), அர்பாஷ் (90ஆவது நிமிடம்) கோல் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர். SAFF U-17இல் 6ஆவது முறையாக இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
Sorry, no posts matched your criteria.