India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
T20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றது குறித்து முதன்முறையாக ரோஹித் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார். 17 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருவதாகவும், அத்துடன் T20 உலகக்கோப்பையை இந்தியா வென்றதே தாம் அந்த விளையாட்டில் இருந்து விடை பெற சரியான தருணம் என கருதியதாகவும் அவர் கூறியுள்ளார். சிறப்பாக விளையாடும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்க செய்வதும் தமது ஓய்வுக்கு ஒரு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் குறித்து மலையாள நடிகர் நிவின் பாலியிடம் SIT இன்று விசாரணை நடத்தியது. 40 வயது நடிகை ஒருவர், நிவின் பாலி உள்ளிட்டோர் துபாயில் 2023ம் ஆண்டு நவம்பரில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்திருந்தார். இதன்பேரில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிந்த நிலையில், கொச்சியில் அவரிடம் SIT விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த கேள்விக்கு அவரது மனைவி லதா ரஜினிகாந்த், ALL is WELL என பதிலளித்துள்ளார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, நேற்று இரவு அவர் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார். ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதயநோய் நிபுணர் சாய் சதீஸ் சிகிச்சை அளித்து வருகிறார். இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை அக்.24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி ஆஜரானார். அப்போது, அவர் உட்பட 47 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, குற்றம்சாட்டப்பட்ட 2,202 பேருக்கும் நகல் வழங்க முதற்கட்டமாக 100 பேருக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
‘G.O.A.T’ திரைப்படம் நாளை மறுநாள் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், நீளம் கருதி வெட்டப்பட்ட காட்சிகளை இணைத்து Director cutஆக இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. யாரெல்லாம் இப்படத்தை ஓடிடியில் பார்க்க காத்திருக்கிறீர்கள். கமெண்ட்ல சொல்லுங்க.
வாணலியை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி, குங்குமப்பூ கொதிக்க விடவும். அவ்வாறு கொதிக்கும்போது, அதன் சேரும் ஆடையை தனியே எடுத்து வைக்கவும். பால் பாதியளவு சுண்டிய பிறகு, அதில் பிரட் தூள், ஏலக்காய், பாதாம் பொடி, சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். கெட்டி பதம் வந்தவுடன், எடுத்து வைத்த பாலாடை, பால் கோவா, மில்க் மெய்ட் கலந்து கிளறி ஐஸ் சேர்த்து மேலே முந்திரி, கிஸ்மிஸ் சீவி தூவினால் சுவையான பிரட் பாசந்தி ரெடி.
அரசியல் குறித்து விஜய்க்கு தான் அறிவுரை கூற விரும்பவில்லை என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், அரசியலுக்கு வரும் பல நடிகர்களுக்கு எம்ஜிஆர்தான் ரோல் மாடல் என்றார். ஆனால், மிகவும் கஷ்டப்பட்ட பிறகே எம்ஜிஆர் முதல்வரானதாக கூறிய அவர், மக்களுக்காக அரசியலுக்கு வர வேண்டுமே தவிர, முதல்வராகும் ஆசையில் வரக்கூடாது என்றும் கூறினார்.
டிஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, ஜெயம் ரவியின் ‘பிரதர்’, கவினின் ‘பிளடி பெக்கர்’ ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளன. மேலும், பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படமும் இந்த மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. நீங்கள் பார்க்க விரும்பும் படத்தை கமெண்ட் பண்ணுங்க
தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள் 6 லட்சம் பேரை மத்திய அரசு நீக்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 13.16 கோடி பேர் பயன்பெற்று வந்தனர். இதில் தமிழகத்தில் மட்டும் 89 லட்சம் பேர் பயனாளிகளாக இருந்தனர். இந்நிலையில், போலி அடையாள அட்டை, பணியாற்ற விருப்பமின்மை உள்ளிட்ட பல காரணங்களுக்காக நாடு முழுவதும் 23 லட்சம் பேரையும், தமிழகத்தில் 6 லட்சம் பேரையும் மத்திய அரசு நீக்கியுள்ளது.
திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகிவிட்டதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திராவிட மணி என்பவர் திருச்சி மத்திய சிறையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும், மரணம் குறித்த உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் CM ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.