India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காந்தி ஜெயந்தியையொட்டி, இன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடக்க உள்ளது. இதுதொடர்பான உத்தரவில், காலை 11 மணிக்கு கூட்டத்தை நடத்துமாறும், கூட்ட நிகழ்வுகளை ‘நம்ம கிராம சபை’ எனும் செயலி மூலம் பதிவேற்றம் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக பொது நிதிச் செலவினம், வீடுதோறும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவது குறித்து விவாதிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நிலை குறித்து PM மோடி நலம் விசாரித்தார். இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தனது x பதிவில், ரஜினி மனைவி லதாவிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மோடி கேட்டறிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஜினி விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வாழ்த்தியதாகவும் பதிவிட்டுள்ளார். இதய ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவருக்கு ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது.
மெல்லிசை பாடல்கள்தான் தன்னை துள்ள வைப்பதாக பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா தெரிவித்துள்ளார். குறைவான பாடல்களே எழுதியுள்ளது குறித்து விவரித்த அவர், தற்போது துள்ளல் பாடல்கள்தான் அதிகமாக வருவதாகக் கூறினார். ஆனால், அது எந்த மாதிரியான துள்ளல் பாடல் என்பதை பொறுத்து நிராகரிப்பேன் என்றார். உதாரணமாக “தாத்தா வர்றாரு..” பாடலை விட “பச்சைக்கிளிகள் தோளோடு…” பாடலே தன்னை துள்ள வைப்பதாகவும் தெரிவித்தார்.
இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடி மோதல் உருவானால் 3ஆம் உலகப் போர் வெடிக்கும் அபாயம் உள்ளது. ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்களை அடுத்தடுத்து கொன்றதால் இஸ்ரேல் மீது ஆத்திரத்தில் இருந்த ஈரான் நேற்றிரவு சுமார் 200 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரான் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தலாம் எனக் கூறப்படுகிறது. இதில் USA, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தலையிடக் கூடும் என அஞ்சப்படுகிறது.
சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ ஹாஸ்பிடலில் தொடர்ந்து 2ஆவது நாளாக ரஜினி ICU-வில் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இதய ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் நேற்று அவருக்கு ஸ்டென்ட் பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து ICU வார்டில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் கூறினர்.
இதுவரை ₹2,000 நோட்டுகள் 98% வங்கிக்கு திரும்பியுள்ளதாக RBI தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மே 2023ஆம் ஆண்டு ₹2,000 நோட்டுகள் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அறிவிப்பின் போது, ₹3.56 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது. இந்நிலையில், மார்ச் 01ஆம் தேதி நிலவரப்படி 97.62% நோட்டுகள் வங்கிக்கு திரும்பியதாகவும், இன்னும் ₹8,470 கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும் RBI அறிவித்தது.
நில முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் 14 வீட்டு மனைகளையும் சித்தராமையாவின் மனைவி பார்வதி திரும்ப ஒப்படைத்தார். மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்பட்ட இந்த நிலத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக சித்தராமையா மீது லோக் ஆயுக்தா மற்றும் ED வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சித்தராமையா கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
VCK சார்பில் மது ஒழிப்பு மாநாடு இன்று உளுந்தூர்பேட்டையில் நடக்கிறது. தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருமாவளவன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொள்கிறார்கள்.
ஆங்கிலேயர் அடக்குமுறையில் இருந்த இந்தியர்களை அகிம்சை மூலம் போராட வைத்து சுதந்திரம் பெற்று தந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்கும் வாய்ப்பு கிடைத்தும் நிராகரித்தவர். 1948இல் கோட்சேவால் சுடப்பட்டு, தன், 78வது வயதில் காலமானார். அன்பு, அகிம்சை, அமைதி, எளிமையின் அடையாளமான காந்தியின் பிறந்த தினம் இன்று! அவரை நினைவில் கொள்வோம்.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக RMC எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. நாளை ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 4, 5ம் தேதிகளில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.