India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் சென்னை மாநகராட்சியால் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
‘தளபதி 69’ படத்தில் விஜய் முன்னாள் காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படம், விஜய்யின் கடைசி திரைப்படமாக தயாராகவுள்ளது. இந்நிலையில், சமூக பிரச்னைகளை கதை களமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
தெலங்கானாவில் 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜு – ஜமுனா தம்பதியரின் மகளான உக்குலுவுக்கு, நேற்று காலை கண் வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுமியை மருத்துவமனை அழைத்துச் சென்றபோதும், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், சிறுமிக்கு பிறந்ததில் இருந்தே இதயம் தொடர்பான பிரச்னை இருந்திருக்கலாம் என்றும், அதனை அடையாளம் காணவில்லை என்றனர்.
தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகளின் விலை இன்று குறைந்து காணப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.80ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ கேரட் நேற்று ரூ.70ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.50க்கு விற்கப்படுகிறது. இதேபோல், பல்வேறு காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மாதம் வெறும் ₹15க்கு பாத்ரூமுடன் கூடிய ஹாஸ்டல் வாடகைக்கு கிடைப்பதாக மாணவர் ஒருவர் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ₹15,000ஐ மாணவர் தவறாக ₹15 என குறிப்பிட்டிருக்கலாம் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், எய்ம்ஸ் மருத்துவ மாணவரான அவர் 5.5 ஆண்டுகளுக்கு ₹5,856 கட்டணம் கொடுத்ததாகவும், அதில் ₹1,500ஐ இறுதியில் கல்லூரி Refund அளிக்கும் என விளக்கம் அளித்துள்ளார்.
உலகம் முழுவதும் வாட்ஸ் அப்பை சுமார் 300 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இதில் மோசடி நடைபெறுவதை தடுக்க வாட்ஸ் அப் பல பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்கிறது. அதன்படி, ஸ்பேம் செய்தி, ஆட்டோமெடிக் அல்லது பல்க் செய்திகளை பகிர்வது வாட்ஸ் அப் விதிப்படி சட்டவிரோதம் ஆகும். இந்த தகவலை நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பினால் உங்கள் கணக்கு முடக்கப்பட்டு விடும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
மேம்பாலங்களில் பார்க் செய்யப்பட்ட கார்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என தனியார் வானிலை ஆர்வலர் வெதர்மேன் கூறியுள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால், சென்னையில் அதி தீவிர கனமழைக்கான வாய்ப்பு குறைந்ததாகவும், அடுத்த 6 மணி நேரத்திற்கு மிதமான மழையே பெய்யும் எனவும் முன்னறிவித்துள்ளார். இதனால், சென்னையில் 20cmக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் கணித்துள்ளார்.
சீனாவில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. சீனர்கள் செல்லப்பிராணிகளுடன் தோழமை கொள்ள விரும்புகின்றனர். கஃபே செல்லும் மக்கள், தேநீருடன் அங்குள்ள செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுகின்றனர். இதற்காக கஃபேக்களில் செல்லப்பிராணிகள் பணியமர்த்தப்படுகின்றன. மனிதர்களைபோல பணி நேரம் முடிந்ததும், அவை உரிமையாளர்களின் வீடுகளுக்கு திரும்புகின்றன.
அதிமுக சார்பில் Rapid Response Team உருவாக்கப்பட்டுள்ளதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை தத்தளித்ததையும், திமுக அரசு மக்களை கைவிட்ட அலவலத்தையும் கடந்த ஆண்டே பார்த்ததாக விமர்சித்துள்ளார். இந்நிலையில், கடுமையான தருணத்தில் மக்கள் தேவையான உதவிகளுக்கு அதிமுக தன்னார்வலர்களை எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை தொடரும் என்றும், அதி தீவிர கனமழைக்கான ஆபத்து குறைந்துள்ளது எனவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அதி தீவிர கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவு முதல் லேசான முதல் மிதமான மழையே பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் கனமழை பெய்கிறதா?
Sorry, no posts matched your criteria.