India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயில்களில் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரயில்வே வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு நவ. 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கான 365 நாட்கள் என்ற முன்பதிவு கால அளவில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை.
நாடு முழுவதுமுள்ள RBI வங்கி கிளைகளில் 125 கல்லூரி மாணவர்களுக்கு கோடை இன்டர்ன்ஷிப் வாய்ப்பை வழங்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி: PG Degree, சட்டம் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள். இன்டர்ன்ஷிப் காலம்: 3 மாதங்கள். ஊக்கத் தொகை: ₹20,000. தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் (RBI கிளைகள்). விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.15. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
கடந்த 4 மாதங்களில் ஜியோ 1.09 கோடி 4ஜி வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 48.97 கோடியாக இருந்த 4ஜி வாடிக்கையாளர் எண்ணிக்கை கட்டண உயர்வுக்கு பிறகு 47.88 கோடியாக குறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், 5ஜி சேவையில் புதிதாக 1.7 கோடி பேர் ஜியோவில் இணைந்துள்ளனர். இதனால் 5ஜி வாடிக்கையாளர் எண்ணிக்கை 13 கோடியிலிருந்து 14.7 கோடியாக உயர்ந்துள்ளது.
இன்று 11 மணிக்கு <<14378800>>GK <<>>வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) அல்பேனியா 2) இரு கருப்பைகள் 3) ஈ 4) பிரயா டோ கேசினோ – Brazil 5) ஈஸ்டு (Yeast) நுண்ணுயிரி 6) Line of Control 7) மேரி கியூரி (இயற்பியல் & வேதியியல்). இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
ஆந்திர Dy CM பவன் கல்யாணின் செயல்பாடு திமுகவை சீண்டுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். லட்டு விவகாரத்தில், சநாதனம் பற்றி பேசியபோது, உதயநிதியை மறைமுகமாக விமர்சித்தார் பவன். அதற்கு உதயநிதியும் ‘Let’s wait and see’ என்று பதிலளித்தார். பின்னர் ADMK-வுக்கு வாழ்த்து சொன்ன பவன், இன்று ADMK-வின் 53ஆம் ஆண்டு விழாவுக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கிறார். இது அதிமுகவின் மீதான பாசமா? திமுகவை சீண்டும் நோக்கமா?
செலவுகளை குறைக்கும் நோக்கில் பணிநீக்க நடவடிக்கையை இந்த ஆண்டும் மெட்டா நிறுவனம் தொடரவுள்ளது. கடந்த ஆண்டு 10,000 ஊழியர்களும், 2022ஆம் ஆண்டு 11,000 ஊழியர்களும் வாட்ஸ்அப், இன்ஸ்டா, த்ரெட்ஸ் ஆகிய நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர். அந்த வரிசையில் இந்த ஆண்டும் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஊழியர்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
NZ அணிக்கு எதிரான டெஸ்ட் இன்னிங்ஸில் IND அணியின் டாப்-7 பேட்ஸ்மேன்களில் 5 பேர் ‘0’ ரன்களில் ஆடுகளத்தில் இருந்து வெளியேறி உள்ளனர். சொந்த மண்ணில் இத்தகைய மோசமான ஆட்டத்தை முதல்முறையாக (கோலி, சர்பராஸ் கான், ஜடேஜா, KL ராகுல், அஸ்வின் 0 ரன்னில் அவுட் ஆகியுள்ளார்) IND அணி விளையாடியுள்ளது. இதற்கு முன் இருமுறை (1952, 2014) இங்கிலாந்து மண்ணில் மட்டுமே IND அணி இப்படியான மோசமான முறையில் ஆட்டம் இழந்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 10,500 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக, சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 1st டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு இந்திய அணி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா, NZ பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46 ரன்களில் சுருண்டது. 2 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்த நிலையில், 5 பேர் டக் அவுட் ஆனார்கள். இது டெஸ்டில் இந்தியாவின் 3ஆவது குறைந்த ஸ்கோர் ஆகும்.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. நாளையும் இம்மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று முன்னறிவித்துள்ளது. தொடர்ந்து, 20, 21ம் தேதிகளில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனவும் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.