India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் பரிந்துரைத்துள்ளார். 2019ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற இவர், தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராகவும் உள்ளார். மரபுப்படி சஞ்சீவ் கண்ணாவே தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையிலுள்ள மூத்த நீதிபதி ஆவார். நவ.10ம் தேதியுடன் சந்திரசூட் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.
60ஆவது Femina Miss India நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அதில், 2024ஆம் ஆண்டின் இந்திய அழகியாக, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நிகிதா போர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் நடைபெற உள்ள உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் அவர் பங்கேற்க உள்ளார். டிவியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய நிகிதா, மேடை நாடகங்கள் மற்றும் சினிமாவில் நடித்துள்ளார்.
முட்டையின் முழு சத்துகளைப் பெற அதன் மஞ்சள் கருவை தவறாமல் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைகின்றனர். மஞ்சள் கருவில் HD லிப்போ புரதம் எனும் நல்ல கொழுப்பு உள்ளது. இது இதய நோய்களில் இருந்தும், பக்கவாதத்தில் இருந்தும் பாதுகாக்கிறது. மேலும் அதில் உள்ள 9 அமினோ அமிலங்கள், வைட்டமின் A, B2, B5, B12, ஒமேகா 3 உள்ளிட்ட சத்துகள் கண், மூளை, இதயம், தசைகள் என உடல் நலனுக்குத் தேவையானது.
சங்க காலப் பாடல்களில் ‘வைப்புழி’ எனக் குறிப்பிடப்பட்ட சொல்லுக்கு உங்களுக்கு பொருள் தெரியுமா?. வைப்பு (சேமித்தல்) + உழி (இடம்) = வைப்புழி. வைப்புழி என்பது பொன், பொருள், செல்வம், விதையை சேமித்து வைக்கும் இடத்தைக் குறிக்கும். நவீன பொருளாதார உலகில் வங்கிகளில் லாக்கர்களை (பெட்டகம்) வைத்திருப்பது போல, அந்த காலத்தில் நிறுவப்பட்ட அரசின் வைப்பகங்களில், வைப்புழி என்பது பயன்பாட்டில் இருந்துள்ளது.
NZ அணிக்கு எதிரான போட்டியில் 46 ரன்களில் ஆல்அவுட் ஆன IND அணி பல மோசமான சாதனைகளைப் படைத்துள்ளது. அதன்படி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் IND பதிவு செய்த 3வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2020-ல் AUS அணியிடம் 36 ரன்களிலும், 1974-ல் ENG அணியிடம் 42 ரன்களிலும் ஆல் அவுட் ஆனது. மேலும், இதுவே உள்ளூரில் IND அணி பதிவு செய்த மோசமான ஸ்கோர் ஆகும். 1987-ல் WI அணியிடம் 75 ரன்களில் சுருண்டது.
ஹரியானாவில் 3-வது முறையாக பாஜக வெற்றி வாகை சூடிய நிலையில், முதல்வராக நயப் சிங் சைனி இன்று பதவியேற்றார். அவருடன் 14 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில், பாஜகவின் வாக்கு வங்கிகளாக உள்ள சாதிகளுக்கு தனது அமைச்சரவையில் சம வாய்ப்பு அளித்துள்ளார் முதல்வர். 2 தலித், 2 பிராமணர்கள், 2 ஜாட் சமூகத்தினர், 4 ஓபிசி, தலா ஒரு ராஜ்புட், ஒரு பனியா, ஒரு சீக்கியர் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
சினிமா பின்னணி இல்லாத ஒருவர் சாதிப்பதற்கு முன் பல கஷ்டங்களை அனுபவித்து இருப்பார். சிலர் வந்த பாதை மறைந்து விடுவர். ஒரு சிலரே கடந்து வந்த பாதையை மறவாது இருப்பர். அந்தவகையில் தான் சினிமாவில் சாதிப்பதற்கு முன் பட்ட கஷ்டத்தை தனது பிள்ளைகளுக்கு எப்போதும் நினைவூட்டுவேன் என்கிறார் நடிகர் சூரி. நான் மேல.. நீங்க கிழனு எனு நினைப்பு வந்தா உங்க அப்பாவும் கிழ இருந்து தான் வந்தார்னு நினைச்சுக்கோங்க என்கிறார்.
ம.பியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிராகவும் கோஷம் எழுப்பிய ஃபைசல் என்ற நபருக்கு, அம்மாநில உயர்நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கியுள்ளது. வழக்கு முடியும் வரை, மாதம் இருமுறை போலீஸ் ஸ்டேஷன் சென்று, தேசிய கொடிக்கு 21 முறை சல்யூட் செய்ய வேண்டும். சல்யூட் அடிக்கும் ஒவ்வொரு முறையும் ‘பாரத் மாதா கி ஜெய்’ சொல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்துள்ளதால், பலருக்கு காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். அதுபோன்ற அறிகுறி இருப்பவர்கள், இஞ்சி கசாயம் குடித்தால் நிவாரணம் கிடைக்கும். இஞ்சியை சிறுதுண்டுகளாக நறுக்கி, உலர்ந்த திராட்சை, மிளகு, ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து நீர் சேர்த்து, சுண்ட காய்ச்சி வடிகட்டி நாட்டு சர்க்கரை சேர்த்து பருகலாம். மேலும், மருத்துவர்களை அணுகியும் உரிய நிவாரணம் பெறலாம்.
பெண்ணின் விருப்பமின்றி, அவரை தனிப்பட்ட முறையில் நேரடியாகவோ (அ) இணையம், மின்னஞ்சல், செல்ஃபோன் போன்ற மின்னணு சாதனங்களின் ஊடாகவோ ஒரு ஆண் தொடர்புகொள்ள முயற்சிப்பது (அ) பின்தொடர்வது (Stalking) BNS சட்டப் பிரிவு 78இன் படி குற்றமாகும். பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறை & அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.