India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடநல் திருநாடு வரி புறக்கணிக்கப்பட்டதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக மக்களிடம் ஆளுநர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வன்மம் கொண்ட செயல் என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இரவில் சிலர் தூக்கமின்றி தவிப்பர். அவர்கள் நிம்மதியாக தூங்க என்ன செய்ய வேண்டும் என உடல்நல நிபுணர்கள் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அவற்றை தெரிந்து கொள்வோம். * தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு செல்போன், டிவியை ஒதுக்கிவிட வேண்டும் *தூங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு ஒரு குளியல் பாேடலாம் *3 மணி நேரத்திற்கு முன்பே காபி, மதுபானத்தை தவிர்க்க வேண்டும் *படுக்கை அறையை இருட்டாக்க வேண்டும்.
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு ஆண்டில் அதிகபட்ச (102) சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இந்த ஆண்டில் ஜெய்ஸ்வால் 29 மற்றும் ஷுப்மன் கில் 16 சிக்ஸர்களை அடித்துள்ளனர். முன்னதாக, ஒரு ஆண்டில் (2022) இங்கிலாந்து அணி அடித்த 89 சிக்ஸர்களே அதிகபட்சமாக இருந்தது. இந்த பட்டியலில் 87 சிக்ஸர்களுடன் இந்திய அணியே 3ஆம் இடத்திலும் இருக்கிறது.
பிரிக்ஸ் யாருக்கும் எதிரான அமைப்பு அல்ல என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரிக்ஸ் அமைப்பு மேலை நாடுகளுக்கு எதிரானது அல்ல என்பதை இந்திய பிரதமர் மோடி பலமுறை தெரிவித்துள்ளதாக கூறினார். ரஷ்யா-அமெரிக்கா உறவில் விரிசல் உருவானதற்கு அமெரிக்காவே காரணம் என்றும், அமெரிக்காவின் நட்பு நாடுகளே டாலரை இருப்பு வைப்பதை குறைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
ICC சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் பங்கேற்க, இந்திய அணி தங்களது நாட்டிற்கு வர வேண்டும் என பாக். கிரிக்கெட் வாரியம் (PCB) விருப்பம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் பாக். செல்வதற்கு இந்திய அணி தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் இந்திய அணி டெல்லி அல்லது சண்டிகருக்கு திரும்ப ஏற்பாடு செய்ய உள்ளதாகவும், BCCI-க்கு PCB கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
பகலில் ஜொலிக்கும் சூரியன், இரவில் ஏன் தெரிவதில்லை என்ற கேள்வி எழும். அதுகுறித்து தெரிந்து கொள்வாேம். சூரியனை பூமி சுற்றி வருகிறது. அப்படி சுற்றுகையில், பூமியின் ஒரு பகுதி மீது சூரியனின் ஒளிவிழும். அந்த பகுதியில் உள்ள நாடுகளில் பகல் நேரம். சூரிய ஒளி விழாத பகுதியிலுள்ள நாடுகளில் இரவு. அதாவது, பகல் நிலவும் நாடுகளில் சூரியன் தெரியும். இரவு நிலவும் நாடுகளில் சூரியன் தெரியாது. SHARE IT
மகளிர் T20 WC அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த நியூசி., 20 ஓவரில் 128/9 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் கடைசி வரை போராடி 120/8 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. நாளை மறுநாள் (அக்.20) நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது நியூசிலாந்து.
இங்கிலாந்தில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துவது Policy Exchange ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. கல்வி மற்றும் செல்வநிலை குறியீட்டில் 95% இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். நிறுவனங்களில் இயக்குநர் மற்றும் உயர்நிர்வாகப் பதவிகளில் 49.6% பேர் பணியாற்றுகின்றனர். வீடு உள்ளிட்ட உடைமை உரிமையாளர்களாக 71% இந்தியர்கள் உள்ளனர். ஆனால், 16 வயதில் பள்ளிக்கல்வியில் உயர் நிலையை அடைவதில் சீனர்கள் முந்தியுள்ளனர்.
◙மேஷம் – இன்சொல்
◙ரிஷபம் – பரிவு
◙மிதுனம் – முயற்சி
◙கடகம் – தெளிவு
◙சிம்மம் – அனுகூலம்
◙கன்னி – புகழ்
◙துலாம் – உதவி
◙விருச்சிகம் – மகிழ்ச்சி
◙தனுசு – கோபம் ◙மகரம் – பெருமை
◙கும்பம் – சுகம் ◙மீனம் – வெற்றி
தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்தியோடு பாடுவேன் எனச் சொல்லும் ஆளுநர், இன்று முழுமையாகப் பாடப்படாதபோது மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தனக்கு எதிராக இனவாதக் கருத்தை முதல்வர் முன்வைப்பதாக ஆளுநர் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ஸ்டாலின், இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான் எனவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.