India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக ‘இந்தியா’ கூட்டணி கட்சியான RJD அறிவித்துள்ளது. தாங்கள் 18-20 தொகுதிகளில் வலுவாக உள்ள நிலையில், 12 சீட்களுக்கு குறைவாக ஒதுக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும், BJP-ஐ தோற்கடிக்க 60 தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிப்போம் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் இருப்பை தக்க வைப்பது, கூட்டணி தர்மம் என இந்தியா கூட்டணிக்கு ஒரே நெருக்கடி தான்.
உங்களுக்கு தெரியாமல், உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி, போலி சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளதோ என்று சந்தேகம் இருக்குமானால், <
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14,086 சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதில், சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு 11,176 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அக். 28 முதல் 30 வரை வழக்கமான பேருந்துகளுடன் சேர்ந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 3 நாள்களில் சுமார் 5.83 லட்சம் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என PM மோடி இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவதால் ஊழலும், குடும்ப அரசியலும் ஒழியும் என்றும் கூறியுள்ளார். பணமில்லை என்றால் பஞ்சாயத்து தேர்தலில் கூட போட்டியிட முடியாது என்றிருக்கும் இன்றைய நிலையில், பின்னணி இல்லாத இளைஞர்கள், ஊழலை ஒழிக்கும் லட்சியத்துடன் அரசியலில் சாதிக்க முடியுமா? இதுபற்றி உங்கள் கருத்து?
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, வெங்காயம், தக்காளி போட்டு தாளித்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். தனியே வேக வைத்த ஆட்டுக்கறித் துண்டுகள், மஞ்சள், உப்பு, பூண்டு, இஞ்சி, கரம் மசாலா, கசகசா போடவும். அதில் தேங்காய், சீரகம், ப.மிளகாய் ஆகியவற்றை மிக்சியில் மைய அரைத்து ஊற்றவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான மலபார் மட்டன் குருமா ரெடி.
தமிழக அரசின் செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த பின் உரையாற்றிய அவர், திமுக ஆட்சியில் 2,226 கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளதாகக் கூறினார். மேலும், பக்தி பகல் வேஷம் போடுபவர்களால் அரசின் சாதனைகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் விமர்சித்தார்.
பயணிகள் யாரும் ஏர் இந்தியாவில் நவ.1-19ம் தேதி வரை பயணிக்க வேண்டாம் என காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னு தெரிவித்துள்ளார். சீக்கிய இனப்படுகொலையின் 40 வது ஆண்டு நினைவு விழா குறிப்பிட்ட தேதிகளில் அனுசரிக்கப்பட உள்ளதால், ஏர் இந்தியா விமானத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என அவர் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் கடந்தாண்டும் அவர் இதேபோல் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்திருந்தார்.
➤இந்தோனேசியாவின் 8ஆவது அதிபராக சுபியாண்டோ (73) பதவியேற்றார். ➤வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 87 பேர் உயிரிழந்தனர். ➤மில்டன் சூறாவளி காரணமாக கியூபாவின் குட்டோரஸ் மின் உற்பத்தி நிலையம் முற்றிலும் சேதமடைந்தது. ➤ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க ரஷ்யா கோரிக்கை. ➤சீன ராணுவத்தின் சக்திவாய்ந்த ராக்கெட் படையை அந்நாட்டு அதிபர் ஜின்பிங் ஆய்வு செய்தார்.
ஒரு ஆண் சராசரியாக ஒரு நாளைக்கு 12,500 வார்த்தைகளும், பெண் 22,000 வார்த்தைகளும் பேசுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு பெண் சராசரியாக ஒரு நாளைக்கு 4 பொய்கள், 60 வயதிற்குள் 87,600 பொய்கள் சொல்கிறார். பெண்கள் சராசரியாக ஆண்டுக்கு 30-64 முறை அழுகிறார்கள்; ஆண்கள் 6- 17 முறை அழுகிறார்கள். பெண்களுக்கு கேட்கும்திறன் அதிகம்; ஆண்களுக்கு பார்க்கும் திறன் அதிகம். வேறு என்னென்ன வித்தியாசம் இருக்கு. சொல்லுங்க!
வாகனங்களுக்கான CNG எரிவாயு விலை கிலோவுக்கு ₹4 – ₹6 வரை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. உற்பத்தி சரிவு, பற்றாக்குறை காரணமாக விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் 1 கிலோ CNG ₹90க்கு விற்பனையாகிறது. விலை உயர்ந்தால் 1 கிலோ ₹96 வரை உயரும் எனத் தெரிகிறது. இதனால், அதிகளவில் CNG வாகனங்களை பயன்படுத்தி வரும் கால் டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் கவலையடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.