India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் நடந்தது போன்ற ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. ஆனால் இது பெரிய குகை அல்ல, இரு பாறைகளுக்கிடையே சிறிய பள்ளத்தில் பெண் ஒருவர் மாட்டிக்கொண்டார். ட்ரெக்கிங் சென்றபோது பள்ளத்தில் விழுந்த தனது போனை எடுக்க முற்பட்டு பள்ளத்திற்குள் தலைகீழாக விழுந்தார். அவரது தோழி கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர், 7 மணி நேர போராட்டத்திற்குப் பின் அவரை மீட்டனர்.
கோலிக்கு பவுன்சர்களை வீசி திணறடிக்க தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே கூறியுள்ளார். 135 கி.மீ வேகத்தில் பவுன்சர் பந்துகளை வீசி கோலியின் ஈகோவை தொட உள்ளதாகவும், அவரை விரைவில் வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க விரும்புவதாகவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியா-ஆஸி. இடையேயான 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் நவ.22இல் தொடங்குகிறது.
காவி நிறத்துடன் BSNL புது லோகோ அறிமுகப்படுத்தப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ரயில், டிடி நியூஸ் சேனல் லோகோவை தொடர்ந்து தற்போது BSNL லோகோவும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளதாகவும், பாஜக கொடியின் நிறமே எங்கும் இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புவதாகவும் சாடியுள்ளார். பொதுத்துறை நிறுவனங்களுக்கு காவி அடிப்பதை பாஜக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
‘ஸ்டார்’ படத்தில் இருந்து 20 நிமிடக் காட்சிகளை தானே நீக்கச் சொன்னதாக நடிகர் கவின் தெரிவித்துள்ளார். படத்தின் அவுட் பார்க்கும் போது சில காட்சிகள் படத்தில் இருந்து விலகி நின்றதாகவும், அதை நீக்கச் சொல்லியதற்கு படக்குழு மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தான் கணித்தது போலவே படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்ததாகவும், ஆனால் தயாரிப்பாளர் ஹேப்பிதான் என்றும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் அமைதியை நிலைநாட்ட இந்தியா துணை நிற்கும் என புதினிடம், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா சென்றுள்ள மோடி புதினை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். தொடர்ந்து பேசிய அவர், இரு நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஆழமான நம்பிக்கையின் அடையாளமாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாகவும், ரஷ்யா இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு எனவும் குறிப்பிட்டார்.
அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கில் 2 புதிய வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்களை இந்த குழுவில் இணைந்த பின் கற்பித்தல் சார்ந்த விவரங்கள் குழுவில் பகிரப்படும். இதன் மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்படுத்தப்படும். இதில் ஆர்வமில்லாத ஆசிரியர்களை ஊக்கப்படுத்தவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மனஅழுத்தம், பதற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் நகம் கடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. நகம் தானே என நாம் சாதாரணமாக நினைத்து மேற்கொள்ளும் இதனால் செரிமானம், நோய்தொற்று போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படும். அதுமட்டுமல்ல அழகு எனும் அளவுகோலில் நகங்களை இழப்பதால், தன்னம்பிக்கையையும் இழக்கிறோம். எனவே இப்பழக்கத்திலிருந்து விடுபட, அதற்கு மாற்றாக Stress Ball போன்ற மாற்றுவழிகளை நாடுங்கள். >>SHARE IT
மத்திய அரசு நாடு முழுவதும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த செய்தியுடன் லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது முற்றிலும் தவறான செய்தி, மத்திய அரசு இதுபோன்ற எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை என மத்திய அரசின் ‘Fact Check’ தளம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த லிங்கை க்ளிக் செய்து பணத்தை இழக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
தலித் சமூகத்தை சேர்ந்தவரை ஜாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தியது உள்ளிட்ட சர்ச்சையில் சிக்கியதால், அமைச்சர் ராஜ கண்ணப்பனின் இலாகா மாற்றப்பட்டது. தற்போது ₹411 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலும் வரவுள்ளதால், அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல்துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ஒவ்வொரு <<14426031>>இளஞ்சிவப்பு <<>>ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS பொருத்தப்பட்டிருக்கும். இதனால், இரவிலும் கூட பாதுகாப்பாக பெண்கள் வேலைக்கு சென்று வர முடியும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும்.
Sorry, no posts matched your criteria.