India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆப் டெவலப்பராக உள்ள டெல்லி இளைஞர், ரிலையன்ஸின் ஜியோவும், Disney+ Hotstar-ம் இணையும் என கணித்து, கடந்த ஆண்டே JioHotstar.com என்ற இணைய பக்கத்தை வாங்கிவிட்டார். தற்போது இணைப்பு உறுதியான நிலையில், “உங்களுக்கு தேவைப்படும் JioHotstar.com டொமைனை கொடுக்க நான் தயார். பதிலுக்கு கேம்ப்ரிட்ஜில் படிக்க எனக்கு தேவையான ரூ.1 கோடியை தருவீர்களா..’ என கடிதம் எழுதி டீல் பேசியுள்ளார். ஆனால், ரிலையன்ஸ் இதை ஏற்கவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கேப்டன் ரோஹித் ஷர்மா ஒரு மோசமான சாதனை படைத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான இந்திய கேப்டன்களில் தோனியுடன் 3வது இடத்தை பகிர்ந்துகொண்டார். இருவரும் 11 முறை டக் அவுட்டாகியுள்ளனர். விராட் கோலி அதிகபட்சமாக 16 முறையும், கங்குலி 13 முறையும் டக் அவுட்டாகியுள்ளனர்.
₹10 கோடி மான நஷ்டஈடு கோரி அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. ₹411 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ராஜகண்ணப்பன் அபகரித்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம், தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இந்நிலையில், தவறான செய்தியை வெளியிட்டதற்காக 7 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் வழக்குத் தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கட்டணத்தை உயர்த்தாமல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம், பல மடங்கு உயர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர், பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், கட்டணத்தை உயர்த்தாமல் அவர்கள் பேருந்தை இயக்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘புஷ்பா 2’, டிச.5ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணக்கட்டுகள் குவித்து வைக்கப்பட்டிருக்க, அதன் முன் துப்பாக்கியுடன் அல்லு அர்ஜுன் நிற்கும் புது போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக ஆக. 15 ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் டிச.6ஆம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது அதுவும் மாற்றப்பட்டுள்ளது.
தவெக மாநாட்டில் விஜய் ஏற்றும் கொடி மாநாட்டு திடலில் 5 ஆண்டுகள் பறக்கும் வகையில் இடத்தின் உரிமையாளரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அக். 27இல் நடைபெறும் தவெக மாநாட்டு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன. மாநாட்டு முதல் நிகழ்ச்சியாக விஜய், மாலை 4 மணி அளவில் 100 அடி நீளமுள்ள கட்சி கொடியை ஏற்றி மாநாட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த கொடி அடுத்த 5 ஆண்டுகள் தொடர்ந்து பறக்க இருக்கிறது.
பாதாளத்தில் வசித்து கொண்டு, ஆட்கள் இல்லாத நேரத்தில் உணவை திருடும் எலி அல்ல இது. இந்த எலியின் பெயர் மகவா. கண்ணி வெடிகளை கண்டுபிடிப்பதற்கு பயிற்சி பெற்றது. பெல்ஜிய தொண்டு நிறுவனம் APOPO மகவாக்கு பயிற்சி அளித்தது. இதன் 5 ஆண்டுகால சர்வீஸில், 100க்கும் மேற்பட்ட கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்துள்ளது. இதன் தைரியத்தை கவுரவப்படுத்த தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது. கடந்த 2022ல் மகவா உயிரிழந்தது.
ஜன.6இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என ECI அறிவித்துள்ளது. வரும் நவ.16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் அட்டைகளில் திருத்தம் தொடர்பான முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். அதேபோல், புதிய வாக்காளர்கள் தங்களின் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். மேலும், வாக்காளர் முகாம் தொடர்பாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
2026 தேர்தலில் திமுக மீண்டும் வெற்றிபெறாது என தமிழிசை ஆருடம் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் தற்போதே அதிருப்தியில் உள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் மோதல் முற்றி கூட்டணி உடையும் எனவும் கூறியுள்ளார். 2026இல் தமிழகத்தில் நிச்சயம் கூட்டணி ஆட்சிதான் அமையும் எனவும், அதில் பாஜக முக்கிய இடத்தை பெற்றிருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
IPL அணிகள் ரீடெய்ன் செய்யும் வீரர்களின் பட்டியலை, வரும் 31ஆம் தேதிக்குள் வெளியிட BCCI உத்தரவிட்டுள்ளது. ஆனால், 28ஆம் தேதி வரை தன்னை சந்திக்க முடியாது என CSK நிர்வாகத்திடம் தோனி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், வரும் 29 (அ) 30ஆம் தேதிகளில் தோனியை சந்தித்து பேச CSK நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பிற்கு பிறகே அவர் விளையாடுவாரா மாட்டாரா என்பது தெரியவரும்.
Sorry, no posts matched your criteria.