India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
<<17503903>>தங்க நகைகளுக்கு 90% கடன்<<>> வழங்குவதாக சவுத் இந்தியன் வங்கி அறிவித்தது. இதற்காக, SIB GOLD EXPRESS என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன்படி, 3 ஆண்டுகள் அவகாசத்துடன் ₹25,000 முதல் ₹25 லட்சம் வரை கடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவணையாக இல்லாமல் இதனை எந்த நேரத்திலும் திருப்பி செலுத்தலாம். சிறு தொழில்முனைவோர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டத்தை சவுத் இந்தியன் வங்கி தொடங்கியுள்ளது. SHARE IT.
காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17521026>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. ஆர்யபட்டா (1975)
2. ஆல்பர்ட் சபின்
3. பிரிட்டன்
4. பிங்க்- பாங்க் அல்லது டேபிள் டென்னிஸ் பால்
5. முதுசூரியர் மற்றும் இளஞ்சூரியர்
எத்தனை கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னீங்க!
அரவக்குறிச்சி தொகுதியின் முன்னாள் MLA கலிலூர் ரஹ்மான் (78), வயது முதிர்வால் காலமானார். திமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த அவர், 2006-ம் ஆண்டு திமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இஸ்லாமியர்களின் அடையாளமாக இருந்த அவர், 2 முறை தேர்வு நிலை பேரூராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டெஸ்ட்டில் அதிக ரன்கள் அடித்தவர்களில் சச்சின் (15921) முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரூட் (13543) உள்ளார். இந்நிலையில் ரூட் திறமை குறித்து ரெடிட் தளத்தில் சச்சின் பகிர்ந்துள்ளார். அதில், கடந்த 2012-ல் நாக்பூர் டெஸ்ட்டில் அவர் விளையாடிய விதமும், விக்கெட்டை மதிப்பிடும் முறையும் தன்னை கவர்ந்ததாகவும், இங்கி., கேப்டனாக இவர் வருவார் என சகவீரர்களிடம் தான் தெரிவித்ததாகவும் கூறினார்.
சிரஞ்சீவி நிலைதான் <<17519703>>விஜய்க்கும் <<>>என எதிர்க்கட்சியினர் ஆருடம் சொல்கின்றனர். சிரஞ்சீவிக்கு என்ன ஆனது? *1992 முதல் திட்டமிட்டு 2008-ல் சிரஞ்சீவி ’பிரஜா ராஜ்யம்’ கட்சியை தொடங்கினார் * 2009 தேர்தலில் சிரஞ்சீவி (திருப்பதி) உள்பட 18 பேர் மட்டுமே வென்றனர் * YSR மறைவுக்கு பிறகு 2011-ல் கட்சியை காங்கிரஸுடன் இணைத்து மத்திய இணையமைச்சர் ஆனார் * 2014 ஆந்திர பிரிவினைக்கு பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
இன்று மாலை 4.50 – 5.50 வரை அல்லது மாலை 6.30 – இரவு 8.30 வரையிலான நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் வைக்கலாம். இன்று விநாயகர் சிலையை வாங்கியவர்கள், நாளை காலை 6.00 – 7.20 வரையிலான நேரத்தில் வழிபடலாம். நாளை விநாயகர் சிலை வாங்கினால், மதியம் 1.35 – 2.00 மணி வரை அல்லது மாலை 6.10 மணிக்கு மேல், சுண்டல், கொழுக்கட்டை, சாதம், பாயசம், வடை என இலை போட்டு படையலிட்டு வழிபாடு செய்யலாம்.
கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டி USA-வில் நடந்து வருகிறது. இதன் 6-வது சுற்றில் போலந்தின் டுடா ஜன் கிர்சிஸ்டோப்வை சந்தித்த பிரக்ஞானந்தா, 32-வது நகர்த்தலில் டிரா செய்தார். இத்தொடரின் முதல் சுற்றில் மட்டுமே வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, அதன் பிறகு தொடர்ச்சியாக சந்தித்த 5-வது டிரா இதுவாகும். 9 சுற்றுகள் கொண்ட தொடரில் 4.5 புள்ளிகளுடன் அவர் 2-வது இடத்தில் உள்ளார்.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் குழு, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால், அவருக்கு என்ன பிரச்னை என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
’அன்பின் கை’ அன்னை தெரசாவின் பிறந்தநாள் இன்று. அன்னை தெரசா எனும் ஆக்னஸ் பிறந்தது என்னவோ ஆக.26, 1910-ல் தான். ஆனால் அவரோ ஆக.27-ஐ தான் தன்னுடைய பிறந்தநாளாக கருதி வாழ்ந்துள்ளார். தெரசா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால், இவர் பிறந்த அடுத்த நாளிலேயே (ஆக.27) ஞானஸ்நானம் எடுக்கப்பட்டுள்ளது. கடவுள் மீதிருந்த அதீத பக்தியால் ஞானஸ்நானம் எடுத்த தினத்தையே தன்னுடைய பிறந்தநாளாக அவர் கருதியுள்ளார்.
இமாச்சலில் பள்ளி நிகழ்வு ஒன்றில் பேசிய MP அனுராக் தாகூர் விண்வெளிக்கு முதல்முதலில் சென்றது அனுமன் என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில், இதுபற்றி பேசிய தமிழிசை, இதிகாசங்களில் நிலவுக்கு அனுமன் சென்றதாக பதிவுகள் உள்ளன. ஆகையால் அவரது கருத்தில் தவறில்லை என்றார். ராமர் என்ன இன்ஜினியரா என்று கேட்டனர். அதன் பின்னர் ராமர் பாலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறினார்.
Sorry, no posts matched your criteria.