News October 10, 2024

சிறிய கார்; பெரிய கனவு!

image

கார் என்பது பணக்காரர்களுக்கானது என்ற எண்ணத்தை மாற்றி இந்திய குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் கார் இருக்க வேண்டுமென்ற கனவுடனே ‘Nano’வை டாடா உருவாக்கினார். 1 லட்சம் விலையில் கார் என்பது, நினைத்து பார்க்க முடியாத ஒன்று. ஆனால், ‘மலிவு விலை’ என்பதே Nanoவின் வீழ்ச்சிக்கும் காரணமானது. எதிலும் ஏற்றத்தாழ்வை பார்க்கும் நம்சமூகம், ‘Low price car’ என்பதை அந்தஸ்து குறைவாக கருத, Nanoக்கு வீழ்ச்சியாக அது அமைந்தது.

News October 10, 2024

TNPSC தேர்வுக்கான அட்டவணை

image

2025ஆம் ஆண்டு TNPSC தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இந்த தேர்வு அட்டவணையை அறிந்துக் கொள்ளலாம். தேர்வுகளுக்கான காலிப்பணியிட எண்ணிக்கை, அத்தேர்வுக்கான அறிவிக்கைகளில் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நேற்று குரூப் – 4 தேர்வு பணியிடங்களில் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்ட நிலையில், TNPSC புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

News October 10, 2024

BREAKING: இலக்கியத்துக்கான நோபல் பரிசு

image

2024-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங் என்பவருக்கு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. மனித வாழ்வின் பலவீனம் மற்றும் வரலாற்று பாதிப்புகளை வெளிப்படுத்துவதில் ஹான் காங்கின் செறிவான கவித்துவ உரைநடைக்காக அவர் நோபல் பரிசு பெறுகிறார். My Woman (2000), Human Acts (2014), The White Book (2016), We Do Not Part (2021) உள்பட பல நூல்களை அவர் படைத்துள்ளார்.

News October 10, 2024

பாஜக ஆட்சியில் ரூ.7223 கோடி முறைகேடு?

image

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் கொரோனா தொற்றின்போது நடந்த முறைகேடுகள் தொடர்பாக அம்மாநில அரசு விசாரணையை தொடங்கியுள்ளது. பாஜக அரசின் தவறான நிர்வாகத்தில் ரூ.7223 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரிக்க துணை கமிட்டி அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஊழல் VS ஊழல் போட்டி ஆரம்பம்!

News October 10, 2024

முதல் ஆளாய் சம்பவம் செய்த கேரளா!

image

மத்திய அரசு உத்தேசித்துள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு எதிராக, கேரள சட்டமன்றத்தில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது, நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது, பன்முகத்தன்மையை சிதைத்துவிடும் என, இத்தீர்மானத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த, ராம்நாத் குழு பரிந்துரைகளை அளித்துள்ளது.

News October 10, 2024

இறக்குமதி சேவைகளுக்கு GST வரி விலக்கு அமல்!

image

வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள கிளைகளுக்கு, அதன் தலைமை அலுவலகத்தில் இருந்து இறக்குமதி செய்யும் சேவைகளுக்கு GST செலுத்துவதில் அளிக்கப்பட்ட விலக்கு அமலுக்கு வந்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் 54ஆவது GST கவுன்சில் கூட்டம் செப்.12ஆம் தேதி நடைபெற்றது. அதில், எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இந்த சிறப்பு வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News October 10, 2024

JK முதல்வராக உமர் அப்துல்லா தேர்வு

image

NCகட்சியின் சட்டமன்ற குழுத்தலைவராக, உமர் அப்துல்லா தேர்வாகியுள்ளார். ஸ்ரீநகரில் இன்று, NC புதிய MLA-க்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. எனினும், கூட்டணிக்கட்சியான காங்கிரசுடன் நாளை ஆலோசித்தபின், முதல்வர் குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும் என NC தெரிவித்துள்ளது. சுயேட்சை MLA-க்கள் 4 பேரும் NCக்கு ஆதரவளித்துள்ளனர். இதனால் 42 இடங்களில் வென்றுள்ள NC, காங்.தயவின்றி ஆட்சியமைக்க இயலும்.

News October 10, 2024

BREAKING: விடைபெறுகிறார் ரபேல் நடால்

image

பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் (38 வயது) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 14 பிரெஞ்சு ஓபன் பட்டம் உள்பட மொத்தம் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடால், களிமண் ஆட்டக் களத்தில் வெல்ல முடியாதவர் எனப் பெயர் எடுத்தவர். அண்மைக்காலமாக தொடர் காயங்களால் திணறிவரும் இவர், வரும் நவம்பரில் டேவிஸ் கப் கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

News October 10, 2024

ரஜினி உருக்கமாக இரங்கல்

image

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உண்மையான மகனை நாம் இழந்துள்ளோம். பல தலைமுறைகளுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்தவர். அனைவராலும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட மனிதர் ரத்தன் டாடா என புகழாரம் சூட்டியுள்ளார்.

News October 10, 2024

போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் வீரர்கள்

image

காஸாவில் ஹமாஸ் இயக்கத்திடம் பிணை கைதிகளாக இருக்கும் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை விடுவிக்க காஸாவில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று 100-க்கு மேற்பட்ட இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவரை போர்முனைக்கு செல்ல மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையில் பிணைக்கைதிகள் பற்றி இஸ்ரேல் அரசு கவலைப்பட்டிருக்கும் எனில், எப்போதே போர் நிறுத்தம் செய்திருக்கும் இல்லையா?

error: Content is protected !!