India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக ஆட்சி வந்தவுடன், போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்ற ராஜகண்ணப்பன், 2022-ல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டு, பின் கூடுதலாக காதி துறையும் ஒதுக்கப்பட்டது. 2023-ல் பொன்முடிக்கு நெருக்கடி ஏற்பட்டபோது, உயர்கல்வி துறை ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது. 2024-ல் பால்வளத்துறைக்கு மாற்றப்பட்ட அவருக்கு, தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் வனம், காதி துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நிறைய நியூஸ் படிச்சி கொஞ்சம் டயர்டா ஃபீல் பண்ணுறீங்களா..? வாங்க ஒரு சின்ன கேம் ஆடுவோம். மேலே உள்ள படத்தில், ஒரு குழாயில் இணைக்கப்பட்ட 7 பாட்டில்களை காணலாம். அதை கவனமாகப் பார்த்து, முதலில் எந்த பாட்டில் நிரம்பும் என சொல்லுங்கள். கொஞ்சம் லாஜிக்குடன் யோசித்தால், உங்களுக்கு பதில் கிடைக்கும். உங்க ஃப்ரண்ட்ஸ்க்கும் ஷேர் பண்ணி கேட்டுப்பாருங்க!
அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் இலாகா ஒதுக்காதது பேசுபொருளாகியுள்ளது. பிடிஆரின் நேர்மையான கருத்துகள், அரசியல் மற்றும் உட்கட்சிக்குள் விருப்பமில்லாத பரபரப்பை உருவாக்குவதாக கட்சி தலைமை கருதுகிறது. இது கட்சி நிர்வாகத்திற்கு சற்று சவாலாக இருப்பதால், அவருக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
பொங்கலுக்கு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 9 முக்கிய அறிவிப்புகளை ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-ல் இருந்து ரூ.6,000-ஆக அதிகரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
படத்திற்காக மட்டுமே ‘ரெட்ரோ’வில் சிகரெட் பிடித்ததாக தெரிவித்த நடிகர் சூர்யா, ரசிகர்கள் புகைபிடிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒருமுறை தானே என ஆரம்பித்தால் அதனை விட முடியாது என்றும், அது உங்களை அடிமையாக்கி விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புகைப் பழக்கத்தை எப்போதும் ஆதரிக்க மாட்டேன் என்றும் சூர்யா தெரிவித்துள்ளார். சூர்யாவின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
கோடை விடுமுறை காலத்தில் ஆதாரை புதுப்பிக்க மாணவர்களை வலியுறுத்த வேண்டுமென்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதாெடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் அருகிலுள்ள இ-சேவை மையங்கள், அஞ்சலகங்கள், வட்டார வள அலுவலகங்களில் மாணவர்களின் ஆதாரை புதுப்பிக்க தலைமை ஆசிரியர்கள் மூலம் பெற்றோரிடம் வலியுறுத்த கேட்டுள்ளது.
ஏப்.22-ல் <<16240956>>தங்கம்<<>> விலை 1 கிராம் ரூ.9,290ஆகவும், 1 சவரன் ரூ. 74,320ஆகவும் அதிகரித்தது. அதற்கடுத்து 23, 24-ம் தேதிகளில் 1 கிராம் தங்கம் ரூ.285-ம், 1 சவரன் ரூ.2,280-ம் குறைந்தது. அதன்பிறகு 3 நாள்களாக விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று கிராமுக்கு ரூ.65-ம், சவரனுக்கு ரூ.520-ம் குறைந்துள்ளது. அதாவது, 3 நாள்களில் 1 கிராம் 350-ம், 1 சவரன் ரூ.2,800-ம் வீழ்ச்சியடைந்துள்ளது.
RCB பவுலர் புவனேஷ்வர் குமார், நேற்று 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம், IPL-ல் அதிக விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். புவனேஷ்வர் குமார் 185 மேட்சில், 193 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் 214 விக்கெட்டுகளுடன் யுஸ்வேந்திர சாஹல் இருக்கிறார். சாஹலை முந்துவாரா புவனேஷ்வர் குமார்?
சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பை வாரி இறைத்துள்ளார் CM ஸ்டாலின். அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ₹5 லட்சமாக உயர்த்தப்படும் என அவர் அறிவித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கு பணப் பலன் பெறுவது இந்த ஆண்டே அமலாகும் என்றும் 01.10.2025 முதல் 15 நாள்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பயன் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.520 குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் ரூ.9,005ஆகவும், 1 சவரன் ரூ.72,040ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராமுக்கு ரூ.65 குறைந்து, ரூ.8,940ஆகவும், 1 சவரன் ரூ.520 சரிந்து, ரூ.71,520ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.111ஆகவும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1.11 லட்சமாகவும் விற்கப்படுகிறது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.