India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றி உக்ரைனுக்கு பாதகமாக அமையும் என கூறப்படுகிறது. தான் போர்களை நிறுத்த வந்தவன், சண்டையிட அல்ல என டிரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோவுக்கு அதிக செலவு செய்வது நல்ல யோசனையல்ல என்று கடந்த காலங்களில் பலமுறை கூறியிருக்கிறார். ரஷ்யா – உக்ரைன் போரில், பல்லாயிரங்கோடி நிதி மற்றும் ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு வழங்கிவந்த நிலையில், இனி அது நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
தீபாவளிக்கு வெளியான ‘அமரன்’ படம் அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான 3 நாள்களில் இப்படம் ₹100 கோடி வசூலித்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது 6 நாள்களில் உலகம் முழுவதும் சேர்த்து ₹170 கோடி வசூலானதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு பெரிய படங்கள் ஏதும் வெளியாகாததால், விரைவில் ‘அமரன்’ வசூல் ₹200 கோடியை எட்டும் என கூறப்படுகிறது.
BSF, CISF, CRPF, SSB உள்ளிட்ட மத்தியப் படைகளில் காலியாக இருந்த 39,481 இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றது. ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால் அதனை நாளைக்குள் திருத்திக்கொள்ளலாம். இது தொடர்பான மேலும் விவரங்களை ssc.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு செய்திகளை உடனே அறிய WAY2NEWS APP-ஐ ஃபாலோ பண்ணுங்க. இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
‘கங்குவா’ படத்தின் போஸ்டரை இன்ஸ்டா ஸ்டோரியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ளார். நடிகர் சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கங்குவா படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனிடையே படத்தை பிரபலப்படுத்தும் வகையில், சுரேஷ் ரெய்னா இன்ஸ்டா ஸ்டோரியாக போஸ்டரை வைத்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த 60வது அதிபர் தேர்தலில், வெற்றி வாகை சூடிய டொனால்டு டிரம்ப் அந்நாட்டின் 47வது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றிக்குப் பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், அமெரிக்காவிற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் சட்டப்பூர்வமாக வரவேண்டும் என்றும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக மக்கள் குடியேறுவது முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும் எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
யாரு சாமி என ஆச்சரியப்பட வைக்கும் இவரின் கதை. சீனாவை சேர்ந்த ஒருவர், தான் ஏழை என்பதை மறைத்து திருமணம் செய்ததுடன், ஒரே நேரத்தில் 4 பெண்களுடனும் பழகியுள்ளார். ஆச்சரியம் என்னவெனில், 5 பெண்களையும் ஒரே அடுக்கு மாடி குடியிருப்பில் குடிவைத்துள்ளார். 4 வருடங்களாக தொடர்ந்த இந்த சித்து விளையாட்டு, அவரின் பணக்கார வேஷத்தால் போலீசிடம் சிக்கியதில் அம்பலமானது. இவரது சேட்டைகள் தெரிந்து, இணையமே அரண்டுபோயுள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பது ஒன்றுதான் மோடியின் ஒரே நோக்கம் என்று சோனியா காந்தியின் மகளும், வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான பிரியங்கா சாடியுள்ளார். வயநாட்டில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், தனது சகோதரர் ராகுல் மக்களை நேசிப்பவர், மதிப்பவர் என்றும், ஆனால் மோடியோ, மக்களிடையே அச்சத்தை, அவநம்பிக்கையை, பிரிவினையை ஏற்படுத்துபவர் என்றும் விமர்சித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தீவிரம் காட்டி வரும் திமுக, ஜனவரியில் பொதுக்குழு கூட்டத்தை திருச்சி அல்லது மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளது. விஜய் வருகையால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில் திமுகவுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், தனது வியூகத்தை அக்கட்சி மாற்றியுள்ளது. தேர்தல் பொறுத்தவரை திமுகவுக்கு சென்டிமென்ட் நகரமாக திருச்சி இருக்கிறது.
ஈ-யால் ஒரு கொலை குற்றவாளி சிக்கியுள்ளார். ம.பியின் ஜபல்பூர் மாவட்டத்தில் மனோஜ் தாக்கூர் (26) என்பவர் கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது, தரம் தாக்கூர் (19) என்ற நபரை ஈக்கள் மொய்த்துள்ளது. அவரின் ஆடை மற்றும் மார்பில் ரத்தக்கறை இருக்க சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது, குடிபோதையில் நடந்த சண்டையின் போது, கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
அதிபர் தேர்தல் முடிவால், அமெரிக்காவின் கொள்கை ரீதியிலான போக்கில் பெரிய மாற்றம் இருக்காது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். அமெரிக்காவின் ஆதிக்கம் மற்றும் தாராளவாத மனப்பான்மை இனியும் தொடராத ஓர் உலகிற்கு நாம் தயாராக வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், USAவின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படாது என தான் நீண்டகாலமாக கூறிவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
Sorry, no posts matched your criteria.