India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 686 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக நேற்று அவர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்றார். அதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், கைது செய்யப்பட்ட அவர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
பல்கிப் பெருகும் முதலீட்டை 8-4-3 உத்தி (Power of Compounding) என்று வல்லுநர்கள் அழைக்கின்றனர். ஒருவர் மாதந்தோறும் ₹20,000-ஐ மியூச்சுவல் பண்டில் SIP-இல் போட்டால், அந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 12% வட்டி வரும். அது 8 ஆண்டுகளின் முடிவில், ₹32 லட்சமாக மாறும். SIP-ஐ தொடர்ந்தால் அடுத்த 4 ஆண்டுகளில், ₹64 லட்சமாக உயரும். மேலும் 3 ஆண்டுகள் முதலீடு தொடருமானால், அவர் ஒரு கோடி ரூபாயைப் பெறலாம்.
முந்திரி பருப்பை (500g) 6 மணிநேரம் நீரில் ஊறவைத்து, நைஸாக பேஸ்ட் பதத்தில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு, முந்திரி பேஸ்ட்டை கொட்டவும். பின் அதனுடன் பால், ஏலக்காய், சர்க்கரை (150g) சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும். கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு இந்த கலவை வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய பின் அதை துண்டுகளாக வெட்டினால் சுவையான முந்திரி கேக் ரெடி.
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நம்பகமில்லாத தளத்தில் இருந்து செயலி ஏதேனும் பதிவிறக்கம் செய்கையில், TOXICPANDA என்ற செயலியும் ரகசியமாக பதிவிறக்கம் ஆவதாகவும், அந்த செயலி மூலம் மொபைல் போனை கட்டுக்குள் கொண்டு வரும் மர்மநபர்கள், ரகசியமாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுவதால் கவனமாக இருக்கும்படி கூறியுள்ளனர். SHARE IT.
வெள்ளியன்று துர்க்கையை வழிபட்டால் தீராத துன்பமும் தீரும் என ஆன்மிகம் கூறுகிறது. அதாவது, வெள்ளியன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் எந்த பிரச்னை என்றாலும் தூசு போல விலகி ஓடும் என்றும், பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஜாதகத்தில் ராகு, கேது பிரச்னை இருப்பின் துர்க்கை வழிபாடு மூலம் நிவர்த்தி ஆகும் எனவும் சொல்லப்படுகிறது. SHARE IT.
தமிழக மின் வாரிய அலுவலகங்களுக்கு 2&4வது சனிக்கிழமைகள் எப்போதும் விடுமுறையாகும். தீபாவளியையொட்டி, NOV.1ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடுசெய்யும் வகையில், 9ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. அதனால், மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் சென்று மின் கட்டணம் செலுத்துவோர் நாளையும் செலுத்தலாம். 40% பயனர்கள் நேரிலே மின் கட்டணம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.
70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் அரசு மற்றும் தனியார் ஹாஸ்பிடல்களில் அனைத்து வித சிகிச்சைகளையும் இலவசமாக பெறும் வகையில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தை மத்திய அரசு விரிவாக்கம் செய்துள்ளது. இத்திட்டத்தில் சேர முதியோர் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இங்கு காணலாம். https://beneficiary.nha.gov.in என்ற வலைதளம் மூலமோ (அ) ‘ஆயுஷ்மான்’ செயலி மூலமோ விண்ணப்பிக்கலாம்.
செயலி எனில், ஆதார் எண், குடும்ப அட்டை எண் உள்ளீடு செய்ய வேண்டும். இதையடுத்து, செல்போன் மூலம் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். பின்னர், முகவரி, செல்போன் எண், குடும்ப உறுப்பினர்களில் வேறு யாரேனும் 70 வயது மேற்பட்டவர்கள் இருந்தால் அவர்களது விவரங்களை பதிவிட வேண்டும். இது முடிந்ததும் காப்பீடு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வலைதளத்திலும் இதே நடைமுறையையே பின்பற்ற வேண்டும்.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 14ஆவது சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. ‘C’ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் TN அணி அந்தமான் அணியை 43-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளது. TN அணியின் கேப்டன் கார்த்தி 13 கோல்கள் அடித்து அசத்தினார். கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் முன்னிலை பெற்ற TN அணி காலிறுதிக்கு முன்னேறியது.
மழை & பனிக்காலத்தில் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, ஜலதோஷம், தலைவலி, மூச்சிரைப்பு, தொண்டைவலி, செரிமான பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் கருமிளகு டீயைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கருமிளகு (5-6), துளசி, மஞ்சள், ஏலக்காய் சேர்த்து நீரில் 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான கருமிளகு தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.
Sorry, no posts matched your criteria.