India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤மேஷம் – உயர்வு
➤ரிஷபம் – வசதி
➤மிதுனம் – லாபம்
➤கடகம் – செலவு
➤சிம்மம் – சுகம்
➤கன்னி – கவலை
➤துலாம் – மேன்மை
➤விருச்சிகம் – ஜெயம்
➤தனுசு – நட்பு ➤மகரம்- பொறுமை
➤கும்பம் – கவனம் ➤மீனம் – தனம்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் நாகை மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
IND-AUS அணிகள் மோதும் BGT தொடர் நவ.22இல் தொடங்க உள்ளது. NZ அணியிடம் சொந்த மண்ணில் ஏற்பட்ட படுதோல்வியால் இந்திய வீரர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில் BGT தொடர் குறித்து பேசிய ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் “விராட் கோலிக்கு எதிராக விளையாடும்போது அவரிடம் எதுவும் பேசக்கூடாது. ஏனெனில் அவர் அதைதான் எதிர்பார்ப்பார். அதுதான் அவரை வெறித்தனமாக விளையாட தூண்டிவிடும்’ என்றார்.
இந்திய அணிக்கு எதிரான தென் ஆப்பிரிக்க வீரர்கள் ரன் எடுக்க திணறி வருகின்றனர். தொடக்க வீரர்கள் ஹென்ட்ரிக்ஸ் மட்டும் 24, ரியான் ரிக்கல்டன் 13, கேப்டன் மார்கம் 3, மார்கோ யான்சென் 7, கிளாசன் 2, மில்லர் 0 எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க ரன் எடுக்க திணறி வருகிறது. தற்போது வரை 12 ஓவர்களில் 66/6 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் சூப்பராக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
போலி பான் கார்டுகள் மூலமாக பண மோசடி நடப்பதை தடுக்க, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பல முறை இதற்கு அவகாசம் கொடுத்தும் கூட, இன்னும் பலர் இதை செய்யவில்லை. இந்நிலையில், வரும் டிச.31 இதற்கான கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும் இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்தாகி விடும். அதை புதுப்பிப்பதும் கடினமான நடைமுறை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தனது ஒப்பற்ற திறமையால் எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர் டெல்லி கணேஷ். அவரது மறைவு நிரப்ப முடியாத கடினமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்களை தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, தேர்தல் நெருங்கும்போது அரசியல் சூழலை பொறுத்து கூட்டணி அமைக்கப்படும் என்று இன்று பதிலளித்தார் இபிஎஸ். இது பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்பதை மறைமுகமாக சொல்வதாக உள்ளது. விஜய்யால் அரசியல் களம் மாறியுள்ள நிலையில், திமுகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைப்பேன் என்பதையே இபிஎஸ் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். அடித்து ஆடத் தொடங்கிவிட்டாரா இபிஎஸ்?
தினசரி காலையில் வழக்கமாக எழும் நேரத்தைவிட ஒரு மணிநேரம் முன்னதாக எழுந்திருப்பது மனச்சோர்வை 23% குறைப்பதாக அமெரிக்க, பிரிட்டன் பல்கலை. கள் நடத்திய ஆய்வில் உறுதியாகியுள்ளது. இரவில் நீண்டநேரம் விழித்திருப்பது சிலருக்கு மரபியல் ரீதியான காரணமாக இருந்தாலும், பெரும்பாலானோர் அதன் பாதிப்பை உணராமலேயே அப்படி செய்கின்றனராம். ஆகவே மக்களே, நாளை முதல் ஒரு மணிநேரம் முன்னதாகவே எழுந்திருக்க முயற்சிக்கலாமே!
முதல்வர் தனது மகன் உதயநிதியை பற்றியே அதிகம் கவலை கொள்வதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். உதயநிதி அமைச்சர் பணியில் சிறப்பாக செயல்பட்டு 100 மதிப்பெண் பெற்றுள்ளதாக முதல்வர் பெருமைப்படுவதாக குறிப்பிட்ட அவர், மற்ற அமைச்சர்கள் அனைவரும் பெயில் ஆகிவிட்டார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். சில நாள்கள் முன்பு பேசிய முதல்வர், உதயநிதி, அமைச்சர் பணியில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறியிருந்தார்.
வாரம் ஒருமுறை, உங்கள் செல்போனை ஸ்விட்ச்-ஆப் செய்வது பல்வேறு நன்மைகளை தரும் என்கின்றனர் tech experts. ஆம், வாரம் ஒருமுறை, சில நிமிடங்கள் உங்கள் போனை ஆப் செய்து வைத்தால்: *போன் ஹேக் செய்யப்படுவதை, தகவல்கள் திருடப்படுவதையும் தடுக்க உதவும். *பேட்டரி ஆயுள் கூடும் *மெமரி லீக் கட்டுப்படும் *கனெக்டிவிடி பிரச்சனைகள் சீராகும் *கேஷ் மெமரி அழிவதால் ஸ்பீட் அதிகரிக்கும் *சில நிமிடங்கள் மனநிம்மதி கிடைக்கும்.
Sorry, no posts matched your criteria.