India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
Fuel Technologies நிறுவனத்திற்கு தர வேண்டிய ₹1.60 கோடியை, ஐகோர்ட் பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 3 படங்களின் இந்தி உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் இருந்து ₹6.60 கோடிக்கு மேற்கூறிய நிறுவனம் வாங்கியது. இதில் 2 படங்கள் தயாரிக்கப்படாததால், ஸ்டூடியோ க்ரீன் ₹5 கோடியை திருப்பி தந்தது. மீதமுள்ள தொகையை கேட்டு வழக்கு தொடரப்பட்டது.
மத்திய அமைச்சர் குமாரசாமியிடம், கர்நாடக அமைச்சர் சமீர் அகமது கான் மன்னிப்பு கோரியுள்ளார். இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய சமீர், பாஜகவை விட ‘காலியா’ குமாரசாமி மிகவும் ஆபத்தானவர் எனக் கூறினார். இனவெறி கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அவருக்கு பாஜக, மஜக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், தனது பேச்சில் உள்நோக்கம் இல்லை எனவும், மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் சமீர் கூறியுள்ளார்.
48 நாடுகள் இருக்கும் ஆசியாவில் தான் உலக மக்கள் தொகையில் சுமார் 80% பேர் வாழுகிறார்கள். இதே ஆசியக்கண்டத்தில் 2016 மக்கள்தொகை கணக்கீடுப்படி, 5.15 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் சிறிய நாடான மாலத்தீவும் ஒன்று. 1,192 தீவுகளின் கூட்டணியான மாலத்தீவு 298 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. சுற்றுலாத்துறையை அதிகமாக நம்பியிருக்கும் நாடான மாலத்தீவில், கடல்சார் தொழிலும் பெரிய வருமானத்தை ஈட்டுகிறது.
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரிக்கு மதுரை ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார். அவரது முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, தெலுங்கு மக்கள் தமிழ் மன்னர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என எந்த அடிப்படையில் கஸ்தூரி கூறினார்? இப்படியொரு கருத்தை கஸ்தூரி எப்படி கூறலாம்? அதற்கான அவசியம் என்ன? என நீதிபதி அடுத்தடுத்து கேள்வியெழுப்பினார்.
திருத்தணியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் ஹெச்.ராஜா, சிந்தனையிலும், நடவடிக்கையிலும் தெளிவு வேண்டும், அது விஜய்க்கு இல்லை என்றார். வேலுநாச்சியார், பெரியாரைக் குறிப்பிடும் நீங்க தேசியவாதியாக இருக்க விரும்புகிறீர்களா அல்லது பிரிவினைவாதியாக இருக்கிறீர்களா? எனவும் வினவினார். ஒரு குழப்பவாதியால் பெரிய முன்னேற்றத்தைப் பெற முடியாது என்பது தனது நம்பிக்கை என்றும் குறிப்பிட்டார்.
வருகிற 15ஆம் தேதி பவுர்ணமி ஆகும். அன்றைய தினத்தில் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் மலையை கிரிவலம் வந்து சிவனை வழிபடுவார்கள். இந்நிலையில், நவ.15இல் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 15ஆம் தேதி அதிகாலை 5.40 மணி முதல் 16ஆம் தேதி அதிகாலை 3.33 மணி வரை பவுர்ணமி ஆகும். அந்த நேரத்தில் கிரிவலம் வருவது உகந்தது என்று கூறியுள்ளது. SHARE IT.
அதிரடி ஃபினிஷராக அறியப்படும் ரிங்கு சிங் KKR அணியின் கேப்டனாகிறார் என தகவல் வெளிவந்துள்ளது. Auction’க்கு முன்னர், கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது. புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் தேவை உள்ள நிலையில், ரூ.13 கோடிக்கு KKR அணியால் தக்கவைக்கப்பட்டுள்ள ரிங்கு சிங் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. ரிங்கு சரியா? KKR அணிக்கு உங்களுடைய கேப்டன் சாய்ஸ் யார்..?
தற்போதைய காலகட்டத்தில், கேமராவின் கண்களிலிருந்து தப்புவதே கடினம். அப்படி இருக்க, ஒருவரின் இருப்பிடத்தைக் கண்டறிய, அவர்களின் உடலில் உள்ள நுண்ணுயிரை பயன்படுத்தும் AI டெக்னாலஜியை கண்டுபிடித்துள்ளனர் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள். Microbiome Geographic Population Structure எனப்படும் இது ஒருவரின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் காட்டும் வல்லமை கொண்டதாம். இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.
கர்நாடகாவின் உடுப்பி நகரில் ஆன்லைனில் வாடகை கார் புக் செய்தவரிடம் ₹4.1 லட்சம் திருடப்பட்டுள்ளது. கூகுளில் காட்டிய Shakti Car Rentals லிங்க்கை க்ளிக் செய்ய, அவருக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் பேசியவர், முதலில் பதிவுக்கட்டணம் ₹150 செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து credit, debit cards மூலம் அவர் பணம் செலுத்த முயன்றபோது OTP வரவில்லை. பிறகு தான் அவர் ₹4.1 லட்சம் இழந்தது தெரிய வந்துள்ளது.
அஜித் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 2004 நவம்பர் 12ஆம் தேதி வெளியான ‘அட்டகாசம்’ படம் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. படம் முழுக்க வெள்ளை வேஷ்டி சட்டையில் தோன்றி கலக்கியிருப்பார் அஜித். ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக இது உள்ளது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ‘தல போல வருமா’, ‘தல தீபாவளி’ பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இப்படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி எது?
Sorry, no posts matched your criteria.