India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரத்தத்தில் சர்க்கரை/குளுக்கோஸை உடலால் உற்பத்தி செய்ய முடியாத போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவை ஏற்படும். அடிக்கடி தாகம், அதிக சிறுநீர் கழித்தல், சோர்வு, எடை இழப்பு, மங்கலான பார்வை ஆகியவை இதன் அறிகுறிகளாகும். அதிக சர்க்கரை அளவு கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவு, பானங்களை தவிர்க்கவும். ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும்.
சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜூனா வீடு மற்றும் அலுவலகத்தில் ஒரு மணி நேரமாக இந்த சோதனை நடைபெறுகிறது. ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதத்தில் சோதனை நடந்த நிலையில், இன்று மீண்டும் ரெய்டு நடைபெறுகிறது.
தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் கங்குவா சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் சூர்யாவின் நடிப்பு, முதலை சண்டை, கேமரா வொர்க், கிளைமாக்ஸ் போன்றவற்றை பாராட்டுகிறார்கள். இருப்பினும், படத்தின் திரைக்கதை தொய்வாக இருப்பதாக விமர்சித்து படத்திற்கு கலவையான வரவேற்பை அளித்துள்ளார்கள். நீங்க படம் பாத்துட்டிங்களா, எப்படி இருக்கு? Stay tuned with Way2news for full review…
வயநாடு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்திருப்பது கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2014 லோக்சபா தேர்தலில் 73.2%, 2019இல் 80.33%, 2024 பொதுத்தேர்தலில் 72.92% வாக்குகள் பதிவானது. ஆனால், இடைத்தேர்தலில் 64.72% வாக்குகளே பதிவாகியுள்ளன. இதனால், வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. பிரியங்காவை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க காங்., பணியாற்றியது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் தலைவராக அரவிந்தர் சிங் சாஹ்னி (54) நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் & இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சாஹ்னி IOCL நிறுவனத்தின் வணிக வளர்ச்சி & பெட்ரோ கெமிக்கல்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.
சென்னை கிண்டி அரசு ஹாஸ்பிடலில் பணியில் இருந்த டாக்டர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 7,900 ஹாஸ்பிடல்கள், 45,000 டாக்டர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது.
சென்னை கிண்டி அரசு ஹாஸ்பிடலில் பணியில் இருந்த டாக்டர் கத்தியால் குத்தப்பட்டதன் எதிரொலியாக, உள்நோயாளிகளுடன் வருபவர்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னை ராஜிவ் காந்தி உள்பட பல அரசு ஹாஸ்பிடல்களில் TAG முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, உள்நோயாளிகளுடன் வருபவர்களுக்கு TAG அணிவிக்கப்படுகிறது. இந்த TAG இருந்தால் மட்டுமே ஹாஸ்பிடல் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
நவக்கிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும், நமக்கு ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. நமது ஜாதகத்தில் எது வலிமை பெற்று யோகம் தருகிறது என்பதை அறிய வேண்டும். ➤சூரியன்: தலைமைப் பதவி ➤சந்திரன்: புகழ் ➤அங்காரகன்: வீரம் ➤புதன்: அறிவாற்றல் ➤வியாழன்: நன்மதிப்பு ➤சுக்கிரன்: அழகாற்றல் & அந்தஸ்து ➤சனி: மனப்பக்குவம் ➤ராகு: பகைவர் பயம் நீங்குதல் ➤கேது: குல அபிவிருத்தி.
DMK கூட்டணிக்கு எதிராக வலுவான ‘மெகா கூட்டணி’ அமைக்க தமாகா தலைவர் GK வாசன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக BJPன் அனுமதி பெற்று, அதிமுக, தவெக, பாமக, தேமுதிக தலைவர்களை சந்திக்க உள்ளாராம். மக்களவைத் தேர்தலின் போதே, ADMK, BJP கூட்டணியை உருவாக்க வாசன் முயற்சித்தார். EPS பிடிவாதத்தால் கூட்டணி அமையவில்லை. இந்நிலையில், DMK எதிர்ப்பு சக்திகளை ஓர் குடையின் கீழ் கொண்டு வர தீவிரம் காட்டுகிறாராம்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 220 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் ஒவ்வொரு மாவட்டமாக இந்த புதிய முறை அமல்படுத்தப்படவுள்ளது. மது பாட்டிலுக்கு கூடுதலாக ₹10 வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, டிஜிட்டல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி டாஸ்மாக்கில் கூடுதலாக பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.