India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘சட்டம் குருடு அல்ல’ என்ற வாசகத்துடன் புதிய நீதிதேவதை சிலை உச்சநீதிமன்ற நூலகத்தில் இன்று திறக்கப்பட்டது. பழைய நீதிதேவதை சிலையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டிருக்கும். ஆனால், சட்டத்தின்முன் சமத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், புதிய சிலையில் கறுப்பு துணி அகற்றப்பட்டுள்ளது. மேலும், இடதுகையில் வாளுக்கு பதிலாக அரசியலமைப்பு புத்தகமும், வலதுகையில் நீதித்தராசும் உள்ளது. உங்க கருத்தை பதிவிடுங்க.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து விலகியதால், இன்று எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. மேலும், தாழ்வு மண்டலம் சென்னை – நெல்லூர் இடையே நாளை கரையை கடக்கிறது. அப்போதும் கனமழை பெய்யாது என்பதால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பெரும்பாலானோர் இன்னமும் தங்கள் முதல் காதலை நினைத்துக் கொண்டிருப்பதாகவும், 10-ல் 4 பேர், FB உள்ளிட்ட சமூக தளங்கள் உதவியுடன் மீண்டும் முதல் காதலோடு தொடர்புகொண்டு (அ) இணைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 10-ல் 4 பேர், குறிப்பாக ஆண்கள் இன்னும் பழைய காதல் நினைவுகளை சுமப்பதாகவும் பதிலளித்துள்ளனர். உங்களுக்கு எப்படி?
பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 600 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. Apprentices பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: Any UG Degree. வயது வரம்பு: 20-28. சம்பளம்: ₹9,000. தேர்வு முறை: ஆன்லைன் & நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ. 24. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
ஆபாச வீடியோ விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை கமிஸ்னர் அலுவலகத்தில் நடிகை ஓவியா புகார் அளித்துள்ளார். சமூக வலைதளத்தில் சமீபத்தில் நடிகை ஓவியா என்ற பெயரில் வீடியோ ஒன்று உலா வந்தது. இது வைரலான நிலையில், தனது முகத்தை போலியாக சித்தரித்து உருவாக்கி அதனை வீடியோவாக வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி ஓவியா புகார் அளித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையில் இருந்து மக்களை காக்க தமாகாவினருக்கு G.K.வாசன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், இயல்புநிலை திரும்பும் வரை தாழ்வான பகுதியில் உள்ள மக்களை பாதுகாத்து அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மக்களுக்கு தேவையான உதவிகளை களத்தில் இறங்கி செய்யவும் தமாகாவினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சோயப் மாலிக்கிடம் இருந்து விவாகரத்து பெற்ற சானியா மிர்ஸா இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மாலிக் சமீபத்தில் பாக்., நடிகை சனா ஜாவேத்தை 2வது தீர்மானம் செய்துகொண்டார். சனா ஜாவேத்தின் முதல் கணவருக்கும் சானியாவுக்கும் திருமணம் நடந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், இந்த செய்தி உண்மையல்ல என சானியாவின் நெருங்கிய நண்பர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை- நெல்லூர் இடையே கரையை கடக்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், RED ALERT நீடிப்பதாகவும் IMD அறிவித்துள்ளது. மழை அதிகமானால், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக நாளை காலை முடிவு செய்யப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பொங்கல் வெளியீடாக 2025 ஜனவரியில் திரைக்குக் கொண்டு வர உள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். நலன் குமாரசாமி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டியும், வில்லனாக நடிகர் சத்யராஜும் நடித்துள்ளனர்.
சென்னையில் மழை நீர் தேங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “திமுக அரசு செய்த மழைநீர் வடிகால் பணிகளே இன்றைக்கு கைகொடுத்திருக்கிறது. ஒரே அடியாக பணிகளை முடிக்க முடியாது. இன்னும் 30 சதவீத பணிகளே மீதமிருக்கிறது. அதையும் விரைவில் முடித்துவிடுவோம். அதன் பிறகு, சென்னையில் மழைநீர் தேங்கும் பிரச்னையே வராது” எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.