India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பன்னீர் ரோஜா சித்த மருத்துவத்தில் ஒரு சிறப்பு வாய்ந்த மூலிகையாக பயன்படுகிறது. அஜீரணத்தைச் சரி செய்யும் தன்மை இதில் அதிகம் உள்ளது. இதன் சாறு அல்லது கசாயம் குடிப்பதன் மூலம் பித்தம் மற்றும் உடலில் சூட்டை குறைக்க முடியும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்துக்கு நல்ல பொலிவு மற்றும் மென்மை அளிக்கிறது. இதன் பூக்களை எடுத்து அதைப் பசும்பாலில் கலந்து முகத்தில் பூசினால் சருமம் பளபளப்பாக மாறும்.
ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடந்த நிலையில், இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனவும், மறு ஆய்வுக்கான காரணம் குறித்து மனுவில் எதுவும் சொல்லப்படவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
▶நவம்பர் – 17 ▶கார்த்திகை – 02
▶கிழமை: ஞாயிறு
▶நல்ல நேரம்: 07:45AM – 08:45AM & 03:15PM – 04:15PM
▶கெளரி நேரம்: 10:45AM – 11:45AM & 01:30PM – 02:30PM
▶ராகு காலம்: 04:30 PM – 06:00 PM
▶எமகண்டம்: 12:00PM – 01:30 PM
▶குளிகை: 03:00 AM – 04:30 AM
▶திதி: துவிதியை ▶சூலம்: மேற்கு
▶பரிகாரம்: வெல்லம்
மக்களின் ஒற்றுமையை குலைக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அம்மாநில தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வாக்காளர்கள் மயங்கிவிடக் கூடாது என வேண்டுகோள் விடுத்தார். பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் முறியடித்து, மீண்டும் வெற்றியை தர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கிண்டி கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலில் திடீர் மின்தடையால் நோயாளிகள் கடும் அவதியுற்றனர். மின்சாரம் செல்லக்கூடிய கேபிள்களில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உடனடியாக பாதிப்பு சரி செய்யப்பட்டதாகவும், யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சுலே கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
புரோ கபடி தொடரில் பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றிபெற்றுள்ளது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய டெல்லி அணி, போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 35-25 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லி வெற்றி பெற்றது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஹரியானா அணி முதலிடத்தில் உள்ளது.
அம்பேத்கருக்கு காங்கிரஸ் மரியாதை கொடுத்ததில்லை என ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் பேசிய அவர், காங்கிரஸ் வறுமையை ஒழிப்பதாக 50 ஆண்டுகளாக பேசி வருகிறார்களே தவிர, அவர்களால் அதை செய்ய முடியவில்லை என்றார். சாதிவாரி கணக்கெடுப்பை பற்றி பேசி ராகுல் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும், காங்கிரஸின் அந்த முயற்சியை மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று (நவ.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (நவ. 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
தெரியாத எண்ணில் இருந்து வரும் திருமண அழைப்பிதழ் மூலம் உங்கள் போன் ஹேக் செய்யப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். மோசடிக்காரர்கள் பத்திரிக்கை போல் போலியான PDF-ஐ அனுப்புகின்றனர். இதை தெரியாத மக்கள், அதை க்ளிக் செய்வதால் APK ஃபைல் டவுன்லோடு ஆகிறது. இதனால், உங்கள் மொபைலின் அக்ஸஸ் மோசடிக்காரர்களுக்கு சென்றுவிடும். உங்களது அனைத்து சென்சிடிவ் டேட்டாக்களும் அவர்களது கை அசைவில் இருக்கும்.
Sorry, no posts matched your criteria.