India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பள்ளிகளில் பழுதான கட்டடங்கள் அருகே மாணவர்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார். பருவமழை தீவிரமடைவதால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்திய அவர், *பாடவேளையில் மாணவர்கள் வகுப்பில் இருப்பதை உறுதி செய்யவும் *பழுதான கட்டங்களில் தடுப்புகள் வைக்கவும் *நீர் நிரம்பிய இடம் அருகே மாணவர்கள் செல்வதைத் தவிர்க்க, அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
சிவபாலன் முத்துகுமார், கவின் கூட்டணியில் உருவாகியுள்ள `ப்ளடி பெக்கர்’ படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, அக்ஷயா ஹரிஹரன் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் நெல்சன் தயாரிக்க, ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ட்ரெய்லருக்கு யாரெல்லாம் வெயிட்டிங்? கமெண்ட்ல சொல்லுங்க.
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் இ-மெயில் மூலம் 15 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாள்களாக இதுபோன்ற மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதால், இச்சம்பவம் குறித்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று விமானங்களுக்கு மிரட்டல் விடுப்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வடக்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் கணித்துள்ளார். இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வடக்கு நோக்கிச் செல்லும் என்றும், அது வலுவிழந்து நகரும் பட்சத்தில் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளார். அத்துடன், நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் முன்னறிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று தவெக அரசியல் பயிலரங்கம் நடக்க உள்ளது. இதில், இதுவரை தமிழகத்தில் நடந்த மாநாடுகள், கொள்கை மற்றும் கருத்தியல் அணுகும் முறை, சமூக பொறுப்புணர்வு குறித்து அரசியல் திறனாய்வாளர்கள் கருத்துரை வழங்க உள்ளனர். தொடர்ந்து, மாநாட்டுப் பணிக்கானக் குழு நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வும் நடைபெற உள்ளது. இதில், அனைத்து குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் 38 முறை (596 inns) டக் அவுட் ஆகியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சச்சின் 34 முறை (782 inns), ரோஹித் ஷர்மா 33 முறை (513inns), சேவாக் 31 முறை (430 inns), கங்குலி 29 முறை (484 inns), யுவராஜ்சிங் 26 முறை (388 inns) டக் அவுட் ஆகியுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்று மிதமான மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. அந்தவகையில், சென்னையில் அதிகாலை முதல் இடி, பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுமா? என கேள்வி எழுந்தது. இந்நிலையில், சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் இன்று வழக்கம்போல் செயல்படும் என ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே விளக்கமளித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று முழுவதும் மழை பெய்யாத நிலையில், தற்போது மீண்டும் மழை வெளுத்து வாங்குகிறது. கோயம்பேடு, அம்பத்தூர், கொரட்டூர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, நுங்கம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
டீயுடன் ரஸ்க் சாப்பிடும் பழக்கம் சிலருக்கு இருக்கும். இது சில உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ரஸ்கில் கொழுப்பும், சர்க்கரையும் இருப்பதாகவும், அது இதய நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ரஸ்கில் உள்ள க்ளுடன் உடலில் ஒவ்வாமை, அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கின்றனர். SHARE IT
நாடு முழுவதும் 18 லட்சத்துக்கும் அதிகமான போலி சிம்கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன. போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக வாங்கப்பட்ட சிம்கார்டுகள், மோசடிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் சிம்கார்டுகள் மத்திய தொலைத் தொடர்பு துறையால் முடக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், இந்த சிம்கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராகவும் டிராய் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.