India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ₹25 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கவுள்ளது. தீவிர பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்ட இலங்கை அரசு, கடந்த ஆண்டு IMF உதவியை நாடியது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், கடனுதவி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என புதிய அதிபர் அனுரகுமார திசநாயக கூறியிருந்தார். இந்நிலையில், இலங்கைக்கு 4ஆவது தவணை கடனுதவி வழங்க IMF ஒப்புதல் அளித்துள்ளது.
*1227 – போலந்து இளவரசர் லெசுச்செக் படுகொலை செய்யப்பட்டார். *1859 – சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டார். *1914 – இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து முசோலினி விலக்கப்பட்டார். *1961 – பிரபல இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்தார். *1992 – யாழ்ப்பாணம், பலாலி வான்படைத் தளத்தின் கிழக்குப் பகுதியின் ராணுவ வேலி விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் ஐபிஎல் மெகா ஏலம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த ஏலம் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏல பட்டியலில் மொத்தம் 1,574 வீரர்கள் உள்ளனர். 10 அணிகளில் மொத்தம் 204 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. அவற்றில் 70 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானது. ஐபிஎல் 18ஆவது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்குகிறது.
புதிய ‘சிட்கோ’ தொழிற்பேட்டை மனைகளை குலுக்கல் முறைக்கு பதிலாக, ஏல அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய TN அரசு பரிசீலித்து வருகிறது. நகரமயமாக்கல் அதிகரிப்பதால் நிலத்தின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் புதிய தொழிற்பேட்டைக்கு இடம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதற்கு அதிகம் செலவாகிறது. எனவே, அதிக விலை கோரும் தொழில்முனைவோருக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
*கூட்டத்தில் நிற்பது எளிதானது. தனியாக நிற்பதற்குதான் தைரியம் வேண்டும். *பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் வலிமையானவர்களின் பண்பு. *நோயைக் காட்டிலும் நோயைப் பற்றிய பயமே அதிகமான மனிதர்களைக் கொன்றுள்ளது. *நீங்கள் உலகை மாற்ற விரும்பினால், உங்களிடமிருந்து தொடங்குங்கள். *எப்போதும் உண்மையானவராகவும், கனிவானவராகவும், அச்சமற்றவராகவும் இருங்கள்.
உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல் தொடரும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். நாட்டின் தலைமை ராணுவ அதிகாரிகளை சந்தித்த அவர், புதிய வகையான ஏவுகணைகளின் சோதனைகள் வரும் நாள்களில் இன்னும் அதிகரிக்கும் என்றார். நாட்டின் மீதான பாதுகாப்பு அச்சுறுத்தல், போர் நிலைமை உள்ளிட்டவற்றை கருதி இந்த சோதனை நடக்கும் எனக் கூறினார்.
ஏக்நாத் ஷிண்டே இனி பட்னாவிஸ் கீழ்தான் பணிபுரிய வேண்டியிருக்கும் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இது குறித்து பேசிய அவர், தேர்தல் முடிவுகளை நம்ப முடியவில்லை என்றார். லோக்சபா தேர்தலில் குறைந்த இடங்களில் வென்ற ஆளும் கூட்டணி, 4 மாதங்களில் எப்படி வெற்றி பெற முடிந்தது என கேள்வி எழுப்பினார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் ▶குறள் எண்: 108 ▶குறள்: நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. ▶பொருள்: ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
தக்காளி வீணாவதைத் தடுக்க இதுவரை பெறப்பட்ட 1,376 யோசனைகளில் 28 யோசனைகளை நடைமுறைப்படுத்த நுகர்வோர் விவகாரத் துறை முடிவெடுத்துள்ளது. நாட்டில் ஆண்டுக்கு 2 கோடி மெட்ரிக் டன் தக்காளி உற்பத்தியாகும் நிலையில், 1% மட்டுமே பதப்படுத்தப்படுகிறது. இது வளர்ந்த நாடுகளில் 60 -70%ஆக உள்ளது. இந்நிலையில், தக்காளி வீணாவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு நிதியுதவி அளிக்க திட்டமிட்டுள்ளது.
▶நவம்பர் – 24 ▶கார்த்திகை – 09 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 06:00 AM – 07:00 AM & 03:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 01:30 PM – 02:30 PM ▶ராகு காலம்: 04:30 PM – 06:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM ▶குளிகை: 03:00 PM – 04:30 PM ▶திதி: நவமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: உத்திராடம்
Sorry, no posts matched your criteria.