India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் முன்னறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ‘டானா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது நாளை மறுதினம் உருவாகி, ஒடிசா, மேற்குவங்கம் நோக்கி கரையை கடக்குமென கணித்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிகிறது.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது முருகநாதேஸ்வரர் கோயில். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலத்தில் முருகனிடம் வேலும், மயிலும் இல்லை. அவற்றை வெளியே விட்டுவிட்டு வந்து சிவனை முருகன் வழிபட்டதாக நம்பிக்கை. பிரம்மகத்தி தோஷம் நீக்கும் இத்தலத்திற்கு வந்து நீராடி வழிபாடு செய்தால் சித்தப்பிரமை, பில்லி, சூன்யம் நீங்கும் என்பது ஐதீகம். இது கொங்கு மண்டலத்தின் சிறந்த கேது பரிகாரத் தலமாகும்.
ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் போட்ட திட்டங்கள் கசிந்துள்ளன. இது குறித்து அமெரிக்க உளவுத்துறையிடம் இருந்த ரகசிய ஆவணங்கள், டெலிகிராம் செயலியில் வெளியாகியுள்ளன. ஏவுகணைகள், டிரோன்கள், போர் விமானங்கள் மூலம் கடந்த 16,17ஆம் தேதிகளில் இஸ்ரேலிய ராணுவம் விரிவான பயிற்சிகளை மேற்கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், வான்வழியே போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பயிற்சியிலும் IDF ஈடுபட்டுள்ளது.
தனது கணவர் பார்க்கத்தான் முரட்டுத்தனமாக இருப்பார், ஆனால் நிஜத்தில் குழந்தை மனது படைத்தவர் என வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். நிக்கோலாய்க்கு தமிழ் பேசவராவிட்டாலும் புரிந்து கொள்ள முடியும் எனவும், அவருக்கு தற்போது தான் தமிழ் கற்றுக் கொடுத்துக் வருவதாகவும் கூறியுள்ளார். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும், வரலட்சுமி சரத்குமாருக்கும் கடந்த ஜூலையில் திருமணமானது.
தற்போதைய பருவமழை காலத்தில், 90 நாள்கள் கெடாத ஆவின் பால் பாக்கெட் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படுமா என நுகர்வோர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2020 நவம்பரில் இந்த பால் உற்பத்தி தொடங்கப்பட்டது. மிக்ஜாம் புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் இந்த பால் பாக்கெட்கள் சென்னை மக்களுக்கு மிகவும் பயன்பட்டன. ஆனால், ஆவினுக்கு நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
ஒவ்வொரு பொருளுக்கும் இருப்பது போன்று அணு ஆயுதங்களுக்கும் Expiry Date இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிகபட்ச ஆயுட்காலம் 24,000 ஆண்டுகள் வரை இருக்கும் எனவும், இந்த எக்ஸ்பைரி டேட் குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அணு ஆயுதங்களை பாதுகாப்பதில் அதிக சவால்கள் இருக்கும் நிலையில், அணு கழிவுகளும் இயற்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக கடவுளிடம் வேண்டியதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். முடிவுக்கு வர முடியாத வழக்குகள் அடிக்கடி வருவதுண்டு எனவும், தன் முன் 3 மாதங்களாக இருந்த அயோத்தி வழக்கிற்கு தீர்வு வேண்டும் என தெய்வத்தின் முன் அமர்ந்து கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நம்பிக்கை இருந்தால் கடவுள் நல்ல வழியை காட்டுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் தனிநபர் துதிபாடும் அரசியலும், வெறுப்பு அரசியலும் நடந்து வருவதாக பாஜக விமர்சித்துள்ளது. இளைய சமுதாயத்தை தவறான முறையில் வழி நடத்துவது தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் செய்யும் துரோகம் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், துணை முதல்வர் உதயநிதிக்கு நேர்மறை அரசியலை முதல்வர் ஸ்டாலின் கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
கேன்சரை தடுப்பதிலும், கண்களை ஆரோக்யமாக வைத்திருப்பதிலும் கேரட் முக்கிய பங்கு வகிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். கேரட்டில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஈறுகள், பற்கள், சரும ஆரோக்யத்திற்கு இதில் இருக்கும் வைட்டமின் சி உதவுகிறது. கேரட்டில் இயற்கை சர்க்கரை அதிகமாக இருந்தாலும், அவை நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.