India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤அண்டிரிக் அடிகளார் – தம்பிரான் வணக்கம் (1578) ➤ராபர்ட் தெ நோபிலி – கடவுள் நிர்ணயம் (1605) ➤ மனுவேல் மார்த்தின்ஸ் – இறைவேண்டல் (1625) ➤அந்தோம் ப்ரொவேன்சா – தமிழ் போர்த்துகீசிய அகராதி (1679) ➤ஃபிலிப் பல்தேயுஸ் – யாழ்ப்பாண வரலாறு (1681) ➤சீகன் பால்கு ஐயர் – தமிழ் நூற்பட்டியல் (1706) ➤வீரமாமுனிவர் – செந்தமிழ் இலக்கணம் (1710) ➤யோஹன் குருண்ட்லர் – தமிழக மருந்து முறைகள் (1718).
தெலங்கானாவில், இளைஞர்களின் தொழில்சார் திறன்களை வளர்க்கும் நோக்கில், Skills University-க்கு அதானி ஃபவுண்டேஷன் ரூ.100 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. இதை கையில் எடுத்துள்ள BJP, ஒருபக்கம் அதானி பற்றி ராகுல் கடுமையாக விமர்சிக்க, மறுபக்கம் காங்., அரசு அதானியிடம் நன்கொடை பெறுவதாக குற்றம் சாட்டியுள்ளது. அதானி சிமென்ட் பேக்டரி விவகாரம் கோர்ட்டுக்கு வரவுள்ள நிலையில், இந்த நன்கொடை வந்துள்ளதாக விமர்சித்துள்ளது.
பாஜகவில் இருந்து விலகி, சமீபத்தில் அதிமுகவில் இணைந்தவர்களுக்கு முக்கிய பதவிகளை இபிஎஸ் கொடுத்துள்ளார். நடிகை கவுதமிக்கு கொள்கை பரப்பு செயலாளர் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆர் மன்ற துணைs செயலாளராக தடா து.பெரியசாமி , சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளராக ஃபாத்திமா அலி, விவசாயப் பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி ஆகியோரை இபிஎஸ் நியமித்துள்ளார்.
தீபாவளிக்கு தேவைக்கு ஏற்ப தனியார் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பயணிகள் கூடுதலாக பயணிப்பதால், பண்டிகைகளில் மட்டும் அந்தப் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அவற்றுக்கு அரசு ஸ்டிக்கர் ஒட்டி இயக்கப்படும் என்றும் கூறினார். தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது அரசின் பணத்தை வீணடிக்கும் செயல் என CITU எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதிமுகவில் மிகப்பெரிய பதவியாக கருதப்படும் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி நடிகை கவுதமிக்கு வழங்கப்பட்டுள்ளது. அண்ணாமலை உள்ளிட்டோர் மீது அடுக்கடுக்கான புகாரை கூறி, பாஜகவில் இருந்து விலகிய கவுதமி, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில், அதிமுகவில் நீண்ட கால அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ‘கொள்கை பரப்பு துணைச் செயலாளர்’ பதவியை அவருக்கு இபிஎஸ் வழங்கியுள்ளார்.
டெல்லியில், வேலைக்கு போகாமல், சும்மா பார்ட்டி செய்து கொண்டிருந்த காதலனை மாற்றமுடியாத வேதனையில், மணிக்கட்டை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் வீடியோ அனுப்பியுள்ளார் காதலி. வீடியோவை பார்த்து பதறிய காதலன், அப்பெண்ணை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல, மருத்துவர்கள் வேகமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிவிட்டனர். ஆனால் அதிர்ச்சியில் உறைந்த காதலன், காதலியின் கண்களை பார்த்தபடி மாரடைப்பால் உயிரிழந்தார்.
திமுகவின் கடைசி தொண்டனும், தமிழனும் இருக்கும் வரை தமிழ், தமிழன், திராவிடத்தை தொடக்கூட முடியாது என உதயநிதி கூறியுள்ளார். இந்தியை திணிக்க முடியாததால், தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை தவிர்த்ததாக குற்றஞ்சாட்டிய அவர், இந்தி திணிப்பை தமிழகம் ஒருநாளும் ஏற்காது என்றார். முன்னதாக, ஆளுநர் பங்கேற்ற DD தமிழ் நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், திராவிடநல் திருநாடும் என்ற வார்த்தை விடுபட்டது.
தமிழகத்தில் உள்ள 20,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் C, D பிரிவு ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிகபட்சமாக ஒரு டாஸ்மாக் ஊழியருக்கு ₹16,800 போனஸ் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து BCCI அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், விரைவில் ஏலம் தொடர்பான அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அக்.31 மாலை 5 மணிக்குள் BCCIயிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தீபாவளி நேரத்தில் தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 1800 425 6151, 9445014436, 044-2474 9002 / 2628 0445/ 2628 1611 தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு மக்கள் புகார் தெரிவிக்கலாம். பயணிகளின் வசதிகளுக்காக கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.