India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மனிதர்களின் இறுதி நாளை கண்டறியும் Death Clock என்ற AI செயலி கவனம் ஈர்த்துள்ளது. சுமார் 5.3 கோடி பங்கேற்பாளர்களின் உதவியுடன் 1,200க்கும் மேற்பட்ட ஆயுட்கால ஆய்வு தரவுகளின் அடிப்படையில் இந்த AI செயலி உருவாக்கப்பட்டுள்ளது. உணவு பழக்கம், உடற்பயிற்சி, மன அழுத்தம், தூக்கம் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி, நமது ஆயுட்காலத்தை இந்த செயலி துல்லியமாக கணக்கிடுவதாகக் கூறப்படுகிறது.
பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசிய விவகாரத்திலும், திமுக எம்.பி. கனிமொழி குறித்து அவதூறு பேசிய விவகாரத்திலும் ஹெச்.ராஜாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கியிருக்கிறது சிறப்பு நீதிமன்றம். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் குறித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போலீசிடம் மனு அளித்திருந்தனர். <<14767601>>இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு க்ளிக்.<<>>
இன்று மக்களவை தொடங்கியதும், அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். வெள்ளப் பாதிப்பு குறித்து விவாதிக்க அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்கக் கோரி திமுக MP-களும் முழக்கம் எழுப்பினர். இதனால், மக்களவை பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முழுவதும், இதே காரணத்தால் அவை நடைபெறவில்லை. அரசு, எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்கலாமா? உங்கள் கருத்து என்ன?
பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசிய பாஜகவின் H.ராஜா குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2018ஆம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என்று ஹெச்.ராஜா X தளத்தில் பதிவு செய்திருந்தார். இதற்கு எதிராக திமுகவினர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக எம்.பி கனிமொழி குறித்த X பதிவு விவகாரத்திலும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா-2 படத்தில் நடிக்க ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாக வெளியான தகவல்களை ரஷ்மிகா மறுத்துள்ளார். அந்தத் தகவல் அனைத்தும் வதந்தி என்று அவர் கூறியுள்ளார். புஷ்பா 1 படத்திற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது கிடைத்ததாகவும், அதுபோல புஷ்பா-2இல் நடித்ததற்கு தனக்கு விருது கிடைக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, புஷ்பா-1க்கு ரூ.2 கோடி, புஷ்பா-2க்கு ரூ.10 கோடி வாங்கியதாக தகவல் வெளியாகின.
ஃபெஞ்சல் புயல் விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், புயல், வெள்ள சீரமைப்பு பணிகள் குறித்து CM ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மரங்கள் விழுந்ததால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்கள் சீரமைப்பு குறித்து ஆய்வு செய்த அவர், புயல் பாதிப்பு பற்றியும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
12th fail படத்தின் மூலம் பிரபலமடைந்த ஹிந்தி நடிகரான விக்ராந்த் மாசே, 2025ல் படங்களில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்திருக்கிறார். “இது வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரமாக உணர்கிறேன்” என வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளார். இன்னும் 2 படங்களே நடிக்க இருப்பதாகவும் கூறிய அவர் தி சபர்மதி ரிப்போர்ட், ஹசீன் தில்ரூபா போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.
சர்வதேச அளவில் ‘விக்’ ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியர்களின் தலைமுடியில் உருவான விக்கை வாங்கவே அமெரிக்கா, ஆப்ரிக்கா உள்ளிட்ட பல நாட்டினர் பெரிதும் விரும்புகின்றனர். கருமை, தடிமன், மிருதுவான தன்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உலகளவில் விக் சந்தை மதிப்பு ₹33,600 கோடியாகும். இதில் இந்தியாவின் பங்கு 88%ஆக உள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,150க்கும், சவரன் தங்கம் ரூ. 57,200க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை ரூ.60 குறைந்து ரூ.7,090க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் தங்கம் ரூ.480 சரிந்து ரூ.56,720க்கு விற்கப்படுகிறது. 1 கிராம் வெள்ளி ரூ.100க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்துக்கும் மாற்றமின்றி விற்பனையாகிறது.
திருவண்ணாமலையில் மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணியை விரைவுபடுத்த இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். நேற்று மாலை நடைபெற்ற நிலச்சரிவால், மண்குவியல் மூடியதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருவதாக அவர் கூறியுள்ளார். விரைந்து செயல்பட்டு 7 பேரையும் உயிருடன் விரைவில் மீட்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.