India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். வானிலை மையத்தின் முன்னறிவிப்பு சரியாக இருந்ததாக CM ஸ்டாலின் ஒத்துக்கொண்ட நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏன் முன்கூட்டியே செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு என்றாலே பிடிக்காது என்பதால், வடமாவட்டங்களை முதல்வர் அலட்சியப்படுத்தியதாகவும் சாடியுள்ளார்.
கனமழை எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விழுப்புரம், கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தி.மலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
U-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேபாள வீரர் யுவராஜ் கத்ரி, விக்கெட் எடுத்ததை விநோதமாக கொண்டாடி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசிய அவர், முகமது ஷிகாப்பை கிளீன் போல்டாக்கினார். இதனையடுத்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அவர், ஷூவை கழட்டி போன் செய்வது போல் சைகை செய்தார். 2வது விக்கெட்டை கொண்டாட முயன்றபோது, அவர் கால் இடறி கீழே விழுந்தார்.
கனமழை மற்றும் வெள்ளத்தால் விழுப்புரம், தி.மலை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில், புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ₹5000 வழங்குவதுபோல், தமிழ்நாட்டிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹5000 வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தின் 14 மாவட்டங்களை இதுவரை இல்லாத வகையில் ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளது. புயலால் ஒன்றரை கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.11 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. எனவே, சேதத்தின் வீரியத்தை கருதி, ₹ 2000 கோடியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
வரலாற்றின் மகத்தான பவுலர்களில் ஒருவராக பும்ரா இருப்பார் என டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். மற்ற பவுலர்களை காட்டிலும் தனித்துவமாக இருப்பதாகவும், அவரை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு பேட்ஸ்மேனும் புதிய வழியை கண்டறிய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பும்ரா பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாடினேன் என ஓய்வுக்கு பிறகு, பேரக்குழந்தைகளிடம் கூறுவேன் எனவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களில், EB கட்டணம் செலுத்த TN அரசு கால அவகாசம் அளித்துள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தி.மலை மற்றும் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட மக்கள், மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் டிச.10ஆம் தேதிவரை செலுத்தலாம் என அறிவித்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.
விமல் நடித்துள்ள ‘சார்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ் வெங்கட் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கல்வியின் முக்கியத்துவத்தையும், கல்வி அனைவருக்கும் சமமான ஒன்று என்றும் ஆழமாக இப்படம் கூறியிருந்தது. அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்களிடம் வரவேற்பை பெற்ற இந்த படம் வரும் 6ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்த சூழலில், ‘லக்கி பாஸ்கர்’ படத்தை பார்த்ததாகவும், படம் அருமையாக இருப்பதாகவும் உதயநிதி பாராட்டியுள்ளதாக ஒரு பிரபல தொலைக்காட்சியின் கார்டு பரவியது. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வில், அது போலியான விளம்பர கார்டு என்பது உறுதி செய்யப்பட்டது.
கனமழை, வரத்துக் குறைவு மற்றும் ஐயப்ப பக்தர்களின் விரத காலம் காரணமாக தமிழகம் முழுவதும் காய்கறிகள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம் (கிலோவில்): பெரிய வெங்காயம் – ₹ 90, பீன்ஸ் – ₹ 110, கத்தரிக்காய் – ₹ 100, முருங்கைக்காய் – ₹ 160, கேரட் – ₹ 100, பச்சை மிளகாய் – ₹ 75, தக்காளி – ₹ 70, பூண்டு – ₹ 450, உருளைக் கிழங்கு – ₹ 80-க்கு விற்பனையாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.