News October 24, 2024

சென்னை மக்களே உஷார்.. AI கேமரா வந்துருச்சு!

image

சென்னையில் AI கேமராக்களை பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. சாலை விதிகளை மீறுவது, பொது இடங்களில் குப்பை கொட்டுவது, மாடுகளை சாலைகளில் திரிய விடுவது போன்றவற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒருவரின் முகத்தை வைத்தே, அவரது வோட்டர் ஐடி அல்லது ஆதார் கார்டு விவரங்களை இந்த AI கேமராக்கள் அனுப்பிவிடுமாம். இதனால் மேற்கூறிய செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

News October 24, 2024

பொது அறிவு வினா – விடை

image

1)இந்தியாவின் தேசிய வாக்கியம் எது? 2)எந்த உயிரினம் அதிகளவில் மக்களை கொல்கிறது? 3)மன்னர் மானியம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது? 4)கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது? 5)கூத்தராற்றுப்படை என அழைக்கப்படும் நூல் எது? 6)தொட்டவுடன் இறந்து போகும் பறவை எது? 7)NET என்பதன் விரிவாக்கம் என்ன? 8)ஐ.நா சபையில் பாடிய முதல் பாடகி யார்? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News October 24, 2024

தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைவு

image

கடந்த சில நாள்களாக வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹440 குறைந்து ஒரு சவரன் 58,280க்கும், கிராமுக்கு ₹55 குறைந்து ஒரு கிராம் 7,285க்கும் விற்பனையாகிறது. சவரன் ₹59,000ஐ நெருங்கிய நிலையில், சற்று விலை குறைந்தது நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு சிறிய ஆறுதல் தந்துள்ளது.

News October 24, 2024

Recipe: சிவப்பு சோளம் புட்டு செய்வது எப்படி?

image

சிவப்பு சோளம், அவல், முந்திரி (தலா ஒரு கப்) ஆகியவற்றை வாசனை வரும் வரை வறுத்து, ஆற வைத்து, மாவு பதத்திற்கு அரைக்கவும். இந்த மாவில் உப்பு நீர் தெளித்து, உதிரியாக உடைத்து கொள்ளவும். பிறகு சூடான இட்லி பாத்திரத்தில் துணி போட்டு, அதன் மேல் மாவை பரப்பி 20 நிமிடங்கள் வரை நன்கு வேக வைத்து எடுக்கவும். அதை பாத்திரத்தில் கொட்டி தேங்காய், நெய், பனைவெல்லம் சேர்த்து கிளறினால், சுவையான சிவப்பு சோளம் புட்டு ரெடி.

News October 24, 2024

விசிக மாவட்ட நிர்வாகம் கூண்டோடு கலைப்பு

image

விசிகவில் 234 சட்டசபை தொகுதிகளிலும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால், தற்போதைய மாவட்ட நிர்வாகம் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. தமிழக கட்சிகளில், அதிக மாவட்ட செயலாளர்கள் கொண்ட கட்சி இதுவாகும். இந்நிலையில், கட்சியின் மாவட்ட நிர்வாகங்கள் கலைக்கப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன. ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் 3 வாரங்களில் முடிக்கப்பட உள்ளன.

News October 24, 2024

+2 மாணவியை கடத்திய பெண் கராத்தே மாஸ்டர்!

image

சென்னையில் 17 வயது + 2 மாணவி, இரு தினங்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை. போலீஸ் விசாரணையில் அந்த மாணவியுடன் அவரது கராத்தே மாஸ்டரான 27 வயது பெண், லெஸ்பியன் உறவில் இருந்ததும், திருமணம் செய்யும் நோக்கில் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இந்நிலையில், அவர்களை தூத்துக்குடியில் மடக்கிய போலீஸார் மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். கராத்தே மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

News October 24, 2024

வாய் கொப்பளிக்க எந்த உப்பை பயன்படுத்த வேண்டும்?

image

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளிப்பது உடலுக்கு நன்மை பயக்குமென சித்த மருத்துவம் கூறுகிறது. அதனை முறைப்படி எப்படி செய்வது என பார்க்கலாம். தீ நுண்ணுயிர் தொற்று, வாய் துர்நாற்றம், தொண்டை வலி, பற்களிடையே ரத்தக்கசிவு இருந்தால் 200 ml, வெந்நீரில் 20 g கல் (அளவு கூடினால் செரிமான பிரச்னை ஏற்படலாம்) உப்புப் போட்டு வாய்க் கொப்பளிக்கலாம். கொப்பளிக்க தூள் உப்பையோ, இந்துப்பையோ பயன்படுத்தக்கூடாது.

News October 24, 2024

விளையாட்டு துளிகள்

image

➤NZ-க்கு எதிரான IND மகளிர் அணியின் 3 போட்டிகள் கொண்ட ODI தொடரின் முதலாவது ஆட்டம் அகமதாபாத்தில் இன்று நடக்கிறது. ➤ஜோஹர் கோப்பை: 2வது ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி 0-4 என்ற கணக்கில் ஆஸி அணியிடம் தோல்வி அடைந்தது. ➤SAFF லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி, 1-3 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்திடம் வீழ்ந்தது. ➤ISL தொடர்: சென்னையில் நடக்கும் போட்டியில் இன்று சென்னை FC, கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

News October 24, 2024

அஜீரணப் பிரச்னையை விரட்டி அடிக்கும் கடுக்காய் தேநீர்

image

வயிறு உப்புசம், வாயு தொந்தரவு, புளி ஏப்பம் போன்ற செரிமான பிரச்னைகளால் அவதிப்படுவோர் நிவாரணம் பெற கடுக்காய் தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கடுக்காய், சுக்கு, மஞ்சள், சோம்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை பொடித்து நீரில் கலந்து, கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான கடுக்காய் தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.

News October 24, 2024

ரேஷன் கடைகளில் வங்கி கணக்கு..

image

ரேஷன் கடை மூலம் மக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு A/C தொடங்கி, வங்கி சேவை வழங்க அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் சேவிங்ஸ், FD, லோன் திட்டங்கள் குறித்த கையேடு விநியோகிக்கவும், சேமிப்பு A/C விண்ணப்பம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடை வாயிலாக தொடங்கப்படும் கணக்கிற்கு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!