India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பார்டர் கவாஸ்கர் தொடருக்காக IND அணி மேற்கொள்ளும் பயிற்சியை காண இனி ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என BCCI முடிவு எடுத்துள்ளது. நேற்று வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது, அவர்களை நோக்கி ரசிகர்கள் அருவறுக்கத்தக்க கமெண்ட்களை கூறியதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வலைக்கு அருகில் ரசிகர்கள் அமர வைக்கப்பட்டதால், ஃபேஸ்புக் லைவ் செய்யும் முயற்சியில் வீரர்களின் பயிற்சியை கெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
வெள்ளப்பாதிப்பு நடவடிக்கை குறித்து DMK கூட்டணியிலிருந்து முதல் எதிர்ப்பு குரல் வந்துள்ளது. தேர்தல் வந்தால், பம்பரம்போல் களப்பணி செய்யும் ஆளும் தரப்பு, பெரும் துயரில் மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் ஏன் ஆர்வம் காட்டவில்லை என ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு முறையும் இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுவதும், அதற்கு காரணங்களை மட்டும் அரசு சொல்வதும் ஏன் என சீண்டியுள்ளார்.
ஒரு நொடியில் 100 ஜிபி டவுன்லோடு செய்யும் அதிவேக இணைய சேவைக்கான பரிசோதனையை நோக்கியா வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த OPEN FIBER நிறுவனத்துடன் இணைந்து இச்சேவையை விரைவில் வழங்க உள்ளது. இதற்கு உள்கட்டமைப்பு வசதிகளில் எவ்வித மாற்றங்களையும் செய்ய வேண்டியதில்லை என்பது கூடுதல் அம்சம். தற்போது OPEN FIBER நிறுவனம் நொடிக்கு 10 ஜிபி டவுன்லோடு செய்யும் வகையில் சேவையை வழங்கி வருகிறது.
மருத்துவ புள்ளிவிவர ஆய்வின் அடிப்படையில்: *AB ரத்தம் கொண்டவர்களுக்கு ஸ்ட்ரோக் வரும் வாய்ப்பு அதிகம், நினைவாற்றல் பிரச்சனைகள் வரலாம் *A, B -இரண்டு குரூப்புக்கும் டைப்-2 நீரிழிவு வாய்ப்பு அதிகம். *A- மன அழுத்தம், வயிறு புற்றுநோய் வாய்ப்பு அதிகம். *A, AB, B -இதய நோய், கணைய புற்றுநோய் வாய்ப்பு அதிகம். * O- நீண்ட ஆயுளுக்கு வாய்ப்பு. மற்ற குரூப்களுடன் ஒப்பிட்டால் இவர்களுக்கு நோய் தாக்க வாய்ப்பு குறைவு.
ஒடிசாவில் கடந்த 22 மாதங்களில் நாள் ஒன்றுக்கு 777 பேரை நாய்கள் கடித்துள்ளன. ஜனவரி 2023 முதல் அக்டோபர் 2024 வரை 5 லட்சத்திற்கும் அதிகமான நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2023இல் 2,59,107 நாய் கடி சம்பவங்கள் பதிவான நிலையில், 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,43,565 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதில் அம்மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறதாம்.
மத்திய துணை ராணுவப் படைகளில் 1,00,204 பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் தெரிவித்துள்ளார். CRPF-33,730, CISF-31,782, BSF-12,808, IDBP-9,861, SSB-8,646 மற்றும் அசாம் ரைஃபிள்ஸில் 3,377 காலியிடங்கள் உள்ளதாக அவர் கூறியுள்ளார். UPSC, SSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் மூலம் இப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தி ஆதிக்கத்தை எப்போதும் எதிர்ப்போம் என திமுக மாநிலங்களவை MP திருச்சி சிவா கூறியுள்ளார். தன்னை தமிழகத்தில் இந்தி படிக்க விடவில்லை என்ற நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், எந்த மொழியை கற்கவும் திமுக தடையாக இருந்ததில்லை என்றார். ஒரு மொழி மீது மற்ற மொழி ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு எனவும், அதை தொடர்ந்து பாதுகாக்க திமுக பாடுபடும் என்றும் தெரிவித்தார்.
புரோ கபடி லீக் தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை உ.பி.யோத்தாஸ் வீழ்த்தியுள்ளது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் உ.பி.யோத்தாஸ் அணி சிறப்பாக விளையாடியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 36-33 என்ற புள்ளிகள் கணக்கில் அந்த அணி வென்றது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், ஹரியானா அணி 61 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பாட்னா, மும்பை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இன்டர்நெட் இல்லாத போதிலும் செல்போன் மூலமாக டிஜிட்டல் பரிமாற்றம் செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சேவையே UPI LITE. தற்போது அதில் முக்கிய மாற்றம் ஒன்றை RBI கொண்டு வந்துள்ளது. இதுவரை UPI LITE-ஐ பயன்படுத்துவோரின் wallet லிமிட் ₹2,000ஆக இருந்த நிலையில், தற்போது அது ₹5,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, ஒரு பரிமாற்றத்திற்கான லிமிட் ₹500-இல் இருந்து ₹1,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
BBCயின் 2024 ஆம் ஆண்டிற்கான உலகளவில் மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலில் வினேஷ் போகத், பூஜா ஷர்மா, அருணா ராய் ஆகிய 3 இந்திய பெண்கள் இடம்பிடித்துள்ளனர். வினேஷ் போகத் பற்றி நமக்கு தெரியும். மீதமுள்ள 2 பெண்கள் யார் தெரியுமா? இதுவரை 4,000 அநாதை பிணங்களுக்கு இறுதிச்சடங்கு செய்தவர் பூஜா. தனது அரசு வேலையை உதறிவிட்டு ஏழை மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறார் அருணா.
Sorry, no posts matched your criteria.