News October 26, 2024

போனஸ் உருவான வரலாறு தெரியுமா?

image

ஆங்கிலேயர் ஆட்சியில் மாத சம்பளம் 4 வாரங்களுக்கு கணக்கிடப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 4 வாரங்களுக்கான 28 நாட்களை கழித்துவிட்டுப் பார்த்தால், வருட முடிவில் கிட்டதட்ட 30 நாட்கள் சம்பளமே இல்லாமல் வேலை பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து, பணியாளர்கள் 10 வருடங்கள் போராடி, விடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தை போனஸாக, 1940 ஜூனிலிருந்து பெற ஆரம்பித்தனர்.

News October 26, 2024

இந்தியா படுதோல்வி

image

T20 Emerging Teams Asia Cup: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெற்ற அரையிறுதியில் India A படுதோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 206 ரன்கள் குவித்துள்ளது. இந்த கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து, 186 ரன்கள் எடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியில் ரமன்தீப் சிங் மட்டும் 64 ரன்கள் எடுத்தனர்.

News October 26, 2024

லாலு, நிதிஷ் ஆட்சிக்கு இடையே வித்தியாசமில்லை: பி.கே.

image

பிகாரில் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் ஆட்சியில் எந்த வேறுபாடுமில்லை என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிசோர் விமர்சித்துள்ளார். லாலு பிரசாத் ஆட்சியில் கிரிமினல்கள் துப்பாக்கியை காட்டி மக்களிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டதாகவும், நிதிஷ் ஆட்சியில் அதிகாரிகள் கொள்ளையடிப்பதாகவும் அவர் சாடியுள்ளார். நிதிஷ் ஆட்சியில் பிகாரில் அதிகாரிகளின் காட்டாட்சி நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

திராவிடம் என்று சொன்னால் சிலருக்கு எரிகிறது: முதல்வர்

image

திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அமைச்சர் பொன்முடி எழுதிய “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும் “நூல் வெளியிட்டு விழாவில் பேசிய அவர், திராவிடம் என்று சொன்னால் சிலருக்கு எரியுமென்றால் அதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக திமுகவின் பணி தொடரும் எனவும் தெரிவித்தார்.

News October 25, 2024

ITI படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

தமிழ்நாட்டில் உள்ள தொழிற்பயிற்சி (ITI) நிலையங்களில் 2024-2025ஆம் கல்வியாண்டுக்கான பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அக்.30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8 அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. விருப்பமுள்ள மாணவர்கள் www.skiltraining.In.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 25, 2024

மழை: இந்த மாவட்டத்தில் நாளை விடுமுறை

image

கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் நாளை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்குவதால், அந்த மாவட்டங்களிலும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஈரோடு மாவட்டத்தில் மழை காரணமாக 22ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை ஈடுசெய்யும் வகையில், நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 25, 2024

ED நடத்திய சோதனையில் ரூ.46 லட்சம் பறிமுதல்

image

9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.46 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி, மானேசர், குருகிராம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் சொகுசு கார்கள், வங்கி லாக்கர்கள், டீமேட் கணக்குகள் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நிதி மோசடி தொடர்பான ஆதாரங்கள் மற்றும் மின்னணு சாதனங்களையும் சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.

News October 25, 2024

Apply Now: ₹1.08 லட்சம் சம்பளம்… மத்திய அரசில் வேலை!

image

மத்திய அரசின் POWERGRID நிறுவனத்தில் காலியாகவுள்ள 70 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி மேற்பார்வையாளராக பணியாற்ற விரும்புவோர் இன்றே விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18-27. சம்பளம்: ₹21,500 – ₹1,08,000. கல்வித்தகுதி: Diploma With 70%. ஓராண்டுப் பின் Sub Jr. Engineer பதவி உயர்வளிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.6. கூடுதல் விவரங்களுக்கு <>இந்த<<>> லிங்க்கை கிளிக் செய்யவும்.

News October 25, 2024

இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழை வெளுத்து வாங்கப் போவதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. குமரி, கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை மாவட்டங்களில் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என அலர்ட் கொடுத்துள்ளது.

News October 25, 2024

Recipe: சம்பா கோதுமை அல்வா செய்வது எப்படி?

image

சம்பா கோதுமையை கழுவி, 8 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பின் கிரைண்டரில் போட்டு அரைத்து, பின் அதை பிழிந்து பாலெடுக்கவும். அதிலிருந்து கிடைக்கும் கெட்டியான பாலை எடுத்து, அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும். கொதி வந்ததும், அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்க்கவும். அத்துடன், சிறுக சிறுக நெய் சேர்த்து இடைவிடாது கிளறவும். பதம் வந்ததும் ஏலக்காய் தூள், முந்திரி போட்டு இறக்கி ஆறவைத்தால் அல்வா ரெடி.

error: Content is protected !!