India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தும் திட்டத்தை TNEB, அதானிக்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை சுட்டிக்காட்டி, ஸ்டாலின் தன் நண்பர் அதானிக்கு தமிழக மின் துறையை தாரை வார்த்து விட்டார் என ராகுல்காந்தி கூறுவாரா என பாஜகவின் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதானிக்கு ஒப்பந்தம் அளிக்க துடிக்கிற திமுகவுடன் இனி கூட்டணி இல்லை என கம்யூ., வெளியேறுவார்களா எனவும் அவர் வினவியுள்ளார்.
புரோ கபடி லீக் தொடரின் இன்று நடைபெற்ற தபாங் டெல்லி – உ.பி. யோத்தாஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா ஆனது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 32-32 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது. இதை தொடர்ந்து மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – யு மும்பா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் 62 புள்ளிகளுடன் ஹரியானா அணி முதலிடத்தில் உள்ளது.
கடலூர், விழுப்புரம், தி.மலை மாவட்டங்களை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டப்படி, அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. எனவே, அனைத்து வகுப்புகளுக்கும் முடிக்கப்படாமல் இருந்த பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மழை நீர் வடிந்த பிறகு, முறையாக பள்ளி திறக்கும்போது, செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரே ஒலிம்பிக்ஸில் 2 பிரிவுகளில் பதக்கம் வென்ற முதல் பெண் வீராங்கனை ஆனார் மனு பாக்கர். பாரா ஒலிம்பிக்ஸில் 2 தங்கங்களை வென்ற முதல் வீராங்கனை அவனி லெகரா. ஃபேஷன் டிசைனரான நான்சி தியாகி, Cannes திரைப்பட விழாவில் அறிமுகமானதன் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றார். போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெயரை மோகனா சிங் பெற்றார். ராணுவ ஹாஸ்பிடலில் முதல் பெண் இயக்குனராக சக்சேனா நாயர் நியமிக்கப்பட்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், தி.மலை 3 மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு ஜன.2 – 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. டிச.24 – ஜன.1 வரை (9 நாள்) தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறை வருகிறது. ஜன.2 பள்ளிகள் திறந்த உடன் 3 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படுகிறது.
3ஆவது டி20 போட்டியில் கடைசி ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி ஜிம்பாப்வே திரில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய PAK 20 ஓவரில் 132/7 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அதிகபட்சமாக சல்மான் 32 ரன்கள் அடித்தார். தொடர்ந்து விளையாடிய ZIM, 19.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 43 ரன்கள் அடித்தார். முதல் இரண்டு டி20 போட்டிகளில் பாக். வென்ற நிலையில், ZIM அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
Uber புக் செய்துவிட்டு சில சமயங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாகிவிடும். இப்படி பாதிக்கப்பட்ட உபேந்திர சிங் என்பவர், மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கோர்ட், கஸ்டமருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அளிக்க Uber-க்கு உத்தரவிட்டது. டெல்லி நுகர்வோர் ஆணையமும், சரியான நேரத்துக்கு வாகனம் அனுப்பாதது சேவை குறைபாடே என முந்தைய தீர்ப்பை உறுதி செய்துள்ளது. உங்க அனுபவம் எப்படி?
மழை பாதிப்பால் அரையாண்டு தேர்வு அட்டவணையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்தில் தேர்வு நடத்தப்படும். மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி டிச.9 முதல் 23 வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறும். 24ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
சிறுவயதிலேயே உடல் பருமன் உள்ளிட்ட பல நோய்களை கொண்டு வரும் JUNK FOOD சார்ந்த விளம்பரங்களை பகல் நேரங்களில் ஒளிபரப்ப UK அரசு தடை விதித்துள்ளது. 2025 அக்டோபரில் இந்த தடை அமலுக்கு வர உள்ளது. குழந்தைகளை குறிவைத்து மார்க்கெட் செய்யப்படும் Pan Cakes, Waffles, Muffins, Pastry உள்பட பலவற்றின் விளம்பரங்களை இரவு 9 மணிக்கு மேல் மட்டுமே ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இது கொண்டுவரப்படுமா?
‘புஷ்பா 2’ படத்தில் வரும் பின்னணி இசையில் 90% தன்னுடையது என சாம் சிஎஸ் தெரிவித்துள்ளார். ஸ்க்ரிப்ட்டை படிக்காமல் முழு படத்திற்கும் இசையமைத்த முதல் படம் இதுதான் எனவும், ரிலீஸ் தேதி நெருங்கியதால் எடிட்டிங் முடிந்ததும் விரைவாக இசையமைக்கச் சொல்லி தயாரிப்புத் தரப்பு தன்னை அணுகியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு சில சீன்களில் DSP-யின் இசை பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.