India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓணம் பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே ஸ்பெஷல் ரயில்களை அறிவித்துள்ளது. ஆக.28-ம் தேதி சென்னை சென்ட்ரல் – கண்ணூருக்கும் (TRAIN NO: 06009), ஆக.30-ம் தேதி பெங்களூரு – கண்ணூருக்கும் (TRAIN NO: 06125) ஸ்பெஷல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் புக் பண்ண தயாரா இருங்க நண்பர்களே..!
2026 தேர்தல் வேலையை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. இம்முறை இரட்டை இலக்க MLA-க்களை சட்டப்பேரவைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாம். இதனிடையே, முதற்கட்ட விருப்ப தொகுதிகள் பட்டியல் அமித்ஷாவின் கைக்கு சென்றுள்ளது. அதில், பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி, ஸ்ரீரங்கம், தி.மலை உள்ளிட்ட 16 கோயில் நகரங்கள் அந்த பட்டியலில் உள்ளதாம். இதனால், அந்த பகுதியின் அதிமுக தலைகள் சற்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தியா ஒரு போதும் ஆக்கிரமிப்பு கொள்கையை நம்பியதில்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நாம் எப்போதும் முதலில் எந்த நாட்டையும் தாக்கியதில்லை என்பது உலகிற்கு தெரியும் எனவும், ஆனால் ஆபத்து வரும்போது சரியான பதிலடியை எப்படி கொடுப்பது என்பது நமக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 30-ம் தேதிக்குள் 75% ஏடிஎம்களில் ₹100, ₹200 நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு RBI ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது. ஆனால், பல ஏடிஎம்களில் ₹500 நோட்டுகள் மட்டுமே இன்னும் கிடைப்பதாக புகார் எழுந்திருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஏடிஎம் மெஷினில் பணம் வைக்கும் காசெட்களை சீரமைத்து ₹100, ₹200 நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இனி சில்லரை பிரச்னை இருக்காது!
உங்கள் செல்லப்பிள்ளையை Day Care-ல் சேர்க்கப்போகிறீர்களா? எப்படி சரியான Day Care-ஐ தேர்வு செய்வது என குழப்பமா? இந்த விஷயங்களை கவனித்தாலே போதும். ▶அரசு அனுமதி பெற்ற Day Care-ல் சேருங்கள் ▶அங்குள்ள பணியாளர்கள் மற்ற குழந்தைகளிடம் எப்படி இருக்கிறார்கள் என கவனியுங்கள் ▶Day Care-ல் சிசிடிவி கேமரா இருக்கிறதா என பாருங்கள் ▶வாரத்திற்கு ஒருமுறை பெற்றோருடன் மீட்டிங் நடத்தப்படுமா என கேளுங்கள்.
நாளை மறுநாள் (ஆக.28) அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. சுற்றளவில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று திறனாளிகள், முதியவர்களுக்கு ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே கொண்டுவரும் திட்டத்தை ஆக.12-ல் CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாதத்தின் 2-ம் சனி, ஞாயிறுகளில் ரேஷன் ஊழியர்கள் பொருள்களை கொண்டு வருவார்கள். இதற்கென தனியாக விண்ணப்பிக்க வேண்டுமா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மக்கள் விண்ணப்பிக்க வேண்டாம். அரசு ஊழியர்கள் நேரடியாக கணக்கெடுப்பு நடத்தி பயனாளிகளை தேர்வு செய்கின்றனர். SHARE IT
நடிகர் ரவி மோகன் LCU-வில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் எழுதிய கதையில் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் படத்தில் ரவி மோகனும் நடிக்கிறாராம். இதை தொடர்ந்து கைதி 2, விக்ரம் 3 படங்களிலும் அவருடைய கதாபாத்திரம் இடம்பெறும் என லோகேஷ் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. ரவி மோகனின் கதாபாத்திரத்தை லோகேஷ் மாஸாக வடிவமைத்துள்ளாராம்.
ஆன்லைன் கேமிங் மசோதாவால் பிசிசிஐ மட்டுமல்ல கிரிக்கெட் வீரர்களும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை இழக்கின்றனர். கோலி, தோனி உட்பட பல வீரர்கள் Dream 11, MPL ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு, விளம்பரங்களில் நடித்து கோடிகளில் வருவாய் ஈட்டி வந்தனர். கேமிங் மசோதா அமலால் கோலி ₹12 கோடியும், ரோஹித் மற்றும் தோனி தலா ₹6 கோடியும், இதர வீரர்கள் தலா ₹1-2 கோடியும் என மொத்தமாக ஆண்டுக்கு ₹150 கோடி இழக்கின்றனர்.
உங்களிடம் பழைய ஃபோன் இருந்தால் அதை விற்றுவிடாதீர்கள். அந்த ஃபோனை Security Camera-வாக மாற்ற முடியும். ▶முதலில் பழைய ஃபோனிலும், தற்போது பயன்படுத்தும் ஃபோனிலும் ‘Alfred’ செயலியை டவுன்லோடு செய்யுங்கள் ▶ 2 ஃபோன்களிலும் ஒரே Gmail Id இருக்கவேண்டும் ▶பழைய ஃபோனில் ‘Add a Camera’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் QR code காட்டும் ▶அதை புதிய ஃபோனில் Scan செய்தால் போதும் Security Camera ரெடி! SHARE.
Sorry, no posts matched your criteria.