India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், நவ.26இல் சிறப்பு கூட்டுக்குழு கூட்டம் நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் பார்லி. மைய மண்டபத்தில் லோக்சபா, ராஜ்யசபாவின் சிறப்பு கூட்டுக்குழு நடக்கவிருக்கிறது. அரசியல் சாசனம் ஏற்றுக்கொண்டதன் நினைவாக கொண்டாடப்பட்டு வந்த தேசிய சட்ட தினத்தை, 2015இல் அரசியலமைப்பு தினமாக பாஜக அரசு கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தவெக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு ‘பங்கேற்பு சான்றிதழ்’ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறும் தவெக மாநாட்டில் பங்கேற்க ஏராளமான தொண்டர்கள் திடலில் குவிந்துள்ளனர். அவர்களின் வருகையைப் பதிவு செய்யும் வகையில் QR Code வைக்கப்பட்டுள்ளது. இதை ஸ்கேன் செய்தால் சான்றிதழ் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் நவ.15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய, அக்.31ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
1)உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு எது? 2)MKS என்பதன் விரிவாக்கம் என்ன? 3) உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது? 4) ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் எது? 5) ஆன்ட்ரோபோபியா என்றால் என்ன? 6)எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது? 7) ஹாக்கியின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?
8)கண்கள் இருந்தும் பார்வையில்லாத உயிரினம் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
இன்ஜினுக்கு பெட்ரோலை அனுப்பும் பியூயல் பம்ப் கோளாறின் காரணமாக 92,672 கார்களை திரும்பப் பெறப்போவதாக ஹோண்டா கார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அமேஸ், ப்ரியோ, BR-V, சிட்டி, ஜாஸ், WR-V கார்கள் இந்த கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளன. 2017 ஆகஸ்ட் முதல் 2018 ஜூன் வரை தயாரிக்கப்பட்ட கார்கள் திரும்பப் பெறப்பட உள்ளன. இலவச மாற்றீடுகளை வழங்கும் நடைமுறைகள் நவ. 5, 2024 முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக மாநாட்டையொட்டி விக்கிரவாண்டியே குலுங்கி வருகிறது. இந்நிலையில், தீபாவளிக்காக சென்னையைச் சேர்ந்த தம்பதியர் சொந்த ஊருக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது விக்கிரவாண்டி தவெக மாநாடு நுழைவாயில் முன்பு காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றனர். திரும்பி வந்து பாரத்த போது, கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 லேப்டாப் மற்றும் ஹேண்ட்பேக்கை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் தமிழக மீனவர்கள் 12 பேர் ஒரு விசைப்படகுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கைதான 12 பேரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபற்றி தமிழக அரசும், மத்திய அரசும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும், இலங்கை தனது போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை.
சாமை அரிசி, பயத்தம் பருப்பு ஆகியவற்றை நீரில் கழுவவும். பின் அதை வாணலியில் ஒன்றாக கொட்டி பொன்னிறமாக மாறும் வரை வறுத்து, சலித்து எடுக்கவும். பின் குக்கரில் போட்டு பாலூற்றி 5 விசில் வரை வேக விடவும். இந்த கலவையில் நெய் & பனங்கற்கண்டு பொடியை சேர்த்து கிளறவும். நன்கு கொதித்து, நீர் வற்றியதும் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கினால் சுவையான சாமை கல்கண்டு பாத் ரெடி.
சென்னையைச் சேர்ந்த தவெக தொண்டரான நிதிஷ் குமார், <<14464535>>தவெக மாநாட்டிற்காக<<>> தனது நண்பர்களுடன் ரயிலில் சென்றுள்ளார். இன்று அதிகாலை விக்கிரவாண்டி ரயில் நிலையத்தை ரயில் கடந்திருக்கிறது. அப்போது, விழுப்புரத்தில் இறங்கி மீண்டும் விக்கிரவாண்டிக்கு வருவதற்கு பதிலாக, இங்கேயே இறங்கிவிடலாம் என்ற ஆர்வமிகுதியில் அவர்கள் குதித்துள்ளனர். இதில் நிதிஷ் குமார் தவறி விழுந்து உயிரிழந்தார். மற்ற இருவர் படுகாயமடைந்தனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விக்கிரவாண்டியில் இன்று நடைபெறவுள்ள விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டில் மழை குறுக்கிட்டு விடுமோ என்கிற கேள்வி எழுந்தது. ஆனால், விழுப்புரத்திலிலும், விக்கிரவாண்டியிலும் இன்று வெப்ப வானிலையே நிலவும் எனவும், மழைக்கு வாய்ப்பில்லை என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.