India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாற்றுச்சக்தி என்று சொல்லிக் கொண்டு நான் இங்கு அரசியலுக்கு வரவில்லை. திராவிடம், தமிழ்த்தேசியம் ஆகியவை தான் எங்களின் இரு கண்கள் என்று விஜய் தெரிவித்துள்ளார். நம்முடன் வர நினைப்பவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று கூட்டணிக்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ள விஜய், 2026இல் ஆட்சியமைக்கும் என்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில், இந்திய – சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லைப் பிரச்னையில் இருநாடுகளுக்கும் இடையே தீர்மானம் எட்டப்பட்ட நிலையில், ராஜ்நாத் சிங்கின் வருகை அமைந்துள்ளது. கடந்த காலங்களில் இருநாட்டு வீரர்களும் அடிக்கடி மோதலில் ஈடுபடும் பகுதியாக தவாங் உள்ளது.
தவெக மேடையில் முதலில் நார்மலாக பேசிய விஜய், அரசியல் மேடையில் பேச்சு என்றதும், வழக்கமாக தலைவர்கள் பேசுவது போன்று அவர்களே, இவர்களே என பேசினார். பின்னர், இளம் தலைமுறைக்கு எளிமையாக புரியும்படி, நேரடியாக பேசி அரசியல் செய்ய வந்துள்ளதாக கூறினார். புள்ளி விவரங்களை ஒப்பிக்க போவதில்லை என்றும், பழைய பாணியில் அரசியல் பேச்சுக்களை பேசப்போவதில்லை என்றும் இயல்பான மொழியில் பேச்சை தொடர்ந்தார்.
பிளவுவாத சக்திகள், கரப்ஷன் கபடதாரிகள் தான் தவெகவின் எதிரிகள் என விஜய் கூறியுள்ளார். தமிழகத்தில் விக்கிரவாண்டி மாநாட்டில் பேசிய அவர், மக்களுக்காக களத்தில் நிற்பதே மகத்தான அரசியல் என்றார். மேலும், அரசியலில் தான் மாற்று சக்தியாக வரவில்லை; முதன்மை சக்தியாக வந்துள்ளதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். 2026 தேர்தலில் TVKக்கு ஓட்டு போடுவீர்களா? கமெண்ட் பண்ணுங்க.
பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கட்சிதான் தவெக என விஜய் உறுதி அளித்துள்ளார். விக்கிரவாண்டி மாநாட்டில் தனது தங்கை நித்யாவின் இழப்பை நினைவுகூர்ந்த அவர், நீட் தேர்வால் அனிதா மரணமடைந்த நிகழ்வையும் குறிப்பிட்டார். அப்போது முடிவு செய்த நான், ஒரு மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வொரு பெண்ணிற்கும் துணையாக இருந்து கடைசி வரை போராட வேண்டும் என உறுதியேற்றதாகவும் தனது நிலைப்பாட்டை அவர் கூறினார்.
இறங்கி அடிக்க வேண்டும் என்றே வந்துவிட்டேன். இனி பின்வாங்க மாட்டேன் என்று விஜய் சூளுரைத்துள்ளார். என் மீது பாசிச சாயத்தை பூச, இங்கு இருப்பவர்கள் முயற்சி செய்கின்றனர். இந்த மோடி மஸ்தான் வேலைகளை எல்லாம் என்னிடம் செய்ய முடியாது என்று தெரிவித்தார். மேலும், தவெகவை ஏ டீம், பீ டீம் என்று அவதூறு பரப்புரை செய்து எங்களை வீழ்த்த முடியாது என்றும் எச்சரித்தார்.
மதவெறி பிடித்தவர்களும், (பாஜக), சாதியை வைத்து ஊழலில் மலிந்து முகமூடியை அணிந்துகொண்டு நம்மை ஆள்பவர்களே (திமுக) நமது எதிரி என்று விஜய் சூளுரைத்துள்ளார். சிறுபான்மை, பெரும்பான்மை எனக் கூறி, இங்கு ஒரு கூட்டம் அரசியல் செய்கிறது. திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு ஒரு குடும்பம் மட்டுமே அதிகாரம் செய்கிறது என்று திமுகவை நேரடியாக தாக்கினார்.
நடித்தோமா, பணம் சம்பாதித்தோமானு இருந்திடலாம் என்று தான் முதலில் தோன்றியது என்று தொடங்கிய விஜய், “ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்த்து என்ன செய்யப் போகிறோம் என ஒரு கட்டத்தில் தோன்றியது. நம்மள இந்த உயரத்தில் வைத்திருக்கும், வாழவைக்கும் இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா என்ற கேள்வி மனதில் எழுந்தது. இதை தீவிரமாக யோசித்ததன் விளைவாக மனதில் தோன்றிய எண்ணம் தான் ‘அரசியல்’, மக்களுக்கான அரசியல்!” என்றார்.
பெரியார் பயணத்தில் பெண் கல்வி உள்ளிட்டவற்றை ஏற்கிறோம். ஆனால் கடவுள் மறுப்பு கொள்கையில் மட்டும் உடன்பாடு இல்லை என்று விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அண்ணா சொன்னதுபோல ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே எங்களின் நிலைப்பாடு எனக் கூறிய அவர், பெரியார் என்றதும் ஒரு கூட்டம் பெயிண்ட் டப்பாவை தூக்கிக் கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
தவெக மாநாட்டு நிகழ்வுகள் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. கட்சியின் கொள்கை பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது தலைவர் விஜய்யை உரையாற்ற மேடைக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், நேரே அவர் மைக் முன் செல்லாமல், மேடைக்கு கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்த பெற்றோர் சந்திரசேகர் – ஷோபாவிடம் சென்று கட்டி அணைத்து ஆசி பெற்றார். பின் மேடைக்கு திரும்பிய அவர் அதிரடியாக பேசத் தொடங்கியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.